Saturday, December 07, 2013

தேசம் அழுத நாள் - டிசம்பர் 6

வரலாற்றை சிதைவாக்கி
பொய்களெனும் விதைகளிட்டு
வெறுப்பென்னும் நீர் பாய்ச்சி
உண்மைகளை களையெடுத்து

உணர்ச்சியெனும் உரமேற்றி
வஞ்சமெனும் நஞ்சை
அமுதமெனும் பெயர் சூட்டி
அறுவடை செய்த நாள்

கடவுளின் பெயர் சொல்லி
சாத்தான்கள் யாகம் செய்து
கபடர்கள் தலைமையேற்க
கடவுளை பலி கொடுத்த நாள்

வேசம் தரித்து நேசம் சிதைக்க
மதங்களின் பெயர் சொல்லி
அரசியல் மகுடம் சூட
அண்டை வீட்டார் பகைத்த நாள்

கடவுளுக்கு வீடு தேடி
கயவர்கள் படை திரண்டு
அன்பும் அறமும் போதித்த
ராமனின் வதை கொண்ட நாள்

தேசம் அழுகின்ற நாள்.

No comments: