Monday, February 21, 2005

சுனாமி பொலிட்டிக்ஸ்

அமேரிக்கா முன்னாள் ஜனாதிபதிகள் ஜார்ஜ் புஷ் சீனியரும், கிளிண்டனும் ஸ்ரீலங்கா பயணம் மேற்கொண்டுள்ளனர். சுனாமி தாக்குதலில் அதிகம் பாதிப்பிற்கு உள்ளான ஸ்ரீலங்கா மற்றும் இந்தோனேஷிய நாடுகளில் பயணம் மேற்கொண்டுள்ள மேலை நாட்டு தலைவர்களில் இந்த இருவரின் பயணம் வெறும், மீட்பு பணிகளை பார்வையிடுவதோடு நிற்பதல்லாமல் அதையும் தாண்டி, இந்திய துணைகண்டத்தில் அமேரிக்காவின் அரசியல் தாக்கத்தை அதிகப் படுத்தவேண்டும் என்பதே.

அமேரிக்காவின் இந்த தீடீர் சுனாமி அரசியலுக்கு காரணம் கீழை நாடுகளில் இழந்து கொண்டிருக்கும் தனது பெயரையும், இமேஜையும் தக்க வைத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தனது ஆளுமையை பறைசாற்றுவதே.

அமேரிக்கா மற்றும் பிரிட்டன் இரு நாடுகளும் சுனாமி நிவாரணப் பணிக்காக மிக குறைந்த உதவியை ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தவுடன் உலகின் பல பாகங்களிலிருந்து விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. காலம் தாழ்த்தி அதை அவர்கள் அதிப்படுத்தியதும், வளரும் நாடுகளிலும் மற்றும் ஏழை நாடுகளிலும் அமேரிக்காவைப் பற்றி ஏற்கனவே இருந்த சந்தேகமான அணுகுமுறையும் எண்ணங்களும் இன்னும் அதிகமாகிப் போனது. காரணம் அமேரிக்காவிற்கு, சுனாமியைப் பற்றி கவலைப் படுவதைவிட வேறு பல கவலைக்குரிய விஷயங்கள் நிறைய இருந்ததுதான்.

ஈராக் போரில் இதுவரை 148 பில்லியன் டாலர் செலவு செய்த அமேரிக்காவும், 11.5 பில்லியன் டாலர்கள் செலவு செய்த பிரிட்டனும், சுனாமிப் பேரழிவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு இதுவரை முறையே 350 மற்றும் 96 மில்லியன்களே ஒதுக்கீடு செய்துள்ளது (1). சவுதி அரேபியாகூட இந்த இரு நாடுகளையும்விட அதிகாமகவே கொடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

பயங்கரவாத்திற்கு எதிராக போர் செய்வதாக தம்பட்டம் அடிக்கும் இரண்டு நாடுகளும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்று வரும்போது இதுவரை வெறும் 16 பில்லியன் டாலர்களையே கொடுத்திருக்கிறது. ஆனால் தற்போது, சுனாமி பெயரைச் சொல்லி, ஸ்ரீலங்காவிலும், இந்தோனேஷியாவிலும் ராணுவத்தை கொண்டுவந்து இறக்கி இரு அரசுகளுக்கும் மட்டுமல்லாமல், அதை சுற்றியுள்ள நாடுகளுக்கும் கசப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்தியாவிற்கு ஒரு பெரும் அரசியல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சுனாமி பேரழிவில் யாருடைய உதவியும் தேவையில்லை என்று தனது காயத்திற்கு தானே மருந்திட்டுக் கொண்ட இந்தியா, அருகில் இருந்த நாடான ஸ்ரீலங்காவிற்கு உடனடியாக உதவிகளை அளித்தாலும், சரியான திட்டமில்லாததால் தற்போது கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.
இந்தியாவிற்கு தன்னை 'self contained' நாடக உலகிற்கு அறிவிப்பதற்கும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினரவாதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன் படுத்திய இந்தியா, தொடர்ந்து துணை கண்டத்தில் தனது நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற 'follow up' திட்டம் எதுவுமில்லாமல் இருப்பதே அமேரிக்காவின் தற்போதைய இந்த ராஜ தந்திர நடவடிக்கைகள்.

இந்தியா இதன் மூலம் இரண்டுவிதாமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று ஸ்ரீலங்கா தொடர்பான வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தமும் அடுத்து அமேரிக்காவை துணை கண்டத்தைவிட்டு தூரமாக வைக்கவேண்டிய அவசியமும். ஸ்ரீலங்காவின் அரசியல் உறவுகள் ஒருபோதும் இந்தியாவுடன் அத்தனை சுமூகமாக இருந்ததில்லை. ஸ்ரீலங்காவின் தமிழர் பிரச்சனையே அதற்கான காரணம். ஸ்ரீலங்கா இந்தியாவை எப்போதும் சந்தேகத்துடனெயே பார்க்கிறது. இதற்கான தீர்வு, இந்தியாவின் ஸ்ரீலங்கா தொடர்பான அரசியல் கொள்கையை மீண்டும் ஆலோசனை செய்து, தமிழர் பிரச்சனைகள் தொடர்பான ஒரு புதுக் கொள்கையை உருவாக்குவதும், அது இந்தியாவிற்கும், ஸ்ரீலங்காவிற்கும் இன்னும் அதையும் தாண்டி தமிழர்களுக்கும் அது தீர்வளிக்க கூடியதாக இருக்க வேண்டும். இதை செய்வதன் மூலம் இந்திய தனது துணைகண்ட ஆளுமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

இந்திய துணைக் கண்டத்தில் தன்னை ஒரு வலுவான நாடக இந்திய பிரகடனப் படுத்த வேண்டுமென்றால் அது அமேரிக்காவின் அனுமதியோடு அல்லது அது எப்படி, எப்போது விருப்பப் படுகிறதோ அப்போதுதான் அது நடக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிற அமேரிக்காவின் சவால்களை இந்தியா எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே இரண்டவது பிரச்சனை.

இரண்டுமே ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளதால், இந்திய காலம் தாழ்த்தாமல் செயல்படுதே சிறந்தது.

References
(1) ஜார்ஜ் மொன்பியோட் - The Guardian - Republished in Arab News - 05/01/05

No comments: