Sunday, April 24, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் (முடிவு)

இஸ்ரேலின் இந்த proxy war இன்று நேற்று தொடங்கியதல்ல. ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளும், காரணங்களும் தான் அவ்வப்போது மாறுபடுகின்றது. அப்படி ஒரு கருவியாக, இஸ்ரேலின் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நாடுதான் இந்த அமேரிக்கா என்ற ஒரு வல்லரசு.

இஸ்ரேலுக்கும் அமேரிக்காவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை, உறவை புரிந்துக் கொண்டால் அமேரிக்கா எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை புரிந்துக் கொள்ளமுடியும். 1800 களில் இஸ்ரேலியர்கள் தனக்கென்று ஒருநாட்டை நிர்மானிக்க வேண்டி ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கினார்கள் அந்த திட்டம் ஒரு நாட்டை மட்டும் உருவாக்கக் கூடிய திட்டமாக இல்லாமல் 'ஜையோனிசயம்' என்ற ஒரு கொள்கையைத் தூசித்தட்டி எடுத்து அதற்கென்று புதிய கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு ஆதரவு தேடினார்கள். அவர்களின் இன்றைய இஸ்ரேல் நாளை இல்லாமல் போனாலும் இந்த 'ஜையோனிசயம்' என்ற இந்த தாத்பரிய கோட்பாடுகள் நிலை நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படி ஒர் கொள்கையை உருவாக்கினார்கள். அதற்கெதிராக யார் செயல்பட்டாலும், அப்படி செயல்படுவர்களை 'Anti Semitic' என்று அழைத்து, குற்றம் சுமத்தி தன்னை ஒரு பரிதாபமான கூட்டமாக, பாதிக்கப்பட்ட கூட்டமாக காட்டிக் கொண்டு வருகிறது. (இஸ்ரேலின் வரலாற்றை பிறகு பார்க்கலாம்).

இன்றைக்கு அமேரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான இந்த நிலைக்கு காரணங்கள் என்ன என்பதை எனது முந்தைய பதிவுகளில் தெளிவாக எழுதியிருந்தேன். (பார்க்க: அமேரிக்காவின் அரசியலும் முஸ்லீம்களும் - 4). அதற்கான அடிப்படை எங்கே உருவானது என்பதை இந்த பதிவிலே சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது அடிப்படைத் திட்டம் பால் வோல்பிட்ச் (தற்போதைய உலக வங்கியின் தலைவர், மிகுந்த சர்ச்சைக்குள்ளானவர்) என்ற 'புதிய பழமைவாதிகள்' என்று அழைத்துக் கொள்வதில பெருமைப்படும் இந்த மனிதர் 1992ம் வருடத்தில் Defense Policy Guidance என்று ஒரு திட்டத்தை வரையறுத்து அதன் முதன்மை லட்சியமாக 'access to vital raw material, primarily Persian Gulf oil' என்று அதற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதாவது பெர்சியன் கல்ப் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வெண்டியதன் அவசியத்தையும் அதற்கு ராணுவ நடவடிக்கைகள்தான் சிறந்த வழி என்றும் அறிவித்தார். அதற்கான வாசலாக ஈராக்கினுள் அமேரிக்காப் படைகளின் பிரவேசமும் மற்றும் அதனை அமேரிக்காவின் ஒரு முக்கியமாக, நிரந்தர ராணுவ தளமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். (Reference: Mrs. Maggie Mitchell Salem, Special Assistant to Madeleine Albright and US Foreign Service Officer 1994 - 2000).

இரண்டாவது அடிப்படைத் திட்டம் ரிச்சர்ட் பெர்ல் மற்றும் டக்லஸ் பெய்த் (Richard Perle and Douglas Feith) என்ற இரு பெரும் 'புதிய பழமைவாதிகளால்' 1996ல் 'A Clean Break: A New Strategy for Securing the Realm' என்று உருவாக்கப்பட்ட கொள்கைத் திட்டம். இந்த திட்டம் இஸ்ரேலுக்காக, 1996ல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாஹ¥ என்ற ஜையோனிசத் தலைவனுக்காக அமேரிக்க எடுபிடிகளால் உருவாக்கப்பட்டது. (Richard Perle - former US Defense Policy Board Chair and Douglas Feith - former Under Secretary for Defense for Policy 2000 - 2005).

அமேரிக்காவின் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த இரு பெரும் அமேரிக்க தேசியவாதிகள் இஸ்ரேலுக்காக உழைக்கும், எடுபிடியாக இருக்கும் இப்படிப்பட இந்த செயலை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அல்லது அப்படியே நடந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்களை, எடுபிடிகளை அந்த நாட்டின் முக்கிய பதவிகளில் அமர்த்தவும் மாட்டார்கள். ஆனால் இது போன்ற நிலையையும் செயலையும் அமேரிக்கா போன்ற நாடுகளில்தான் பார்க்க முடியும், காரணம் அந்த அளவிற்கு அமேரிக்காவின் நிர்வாக அமைப்பினுள் இஸ்ரேலின் ஜையோனிசக் கொள்கைகளும் அவர்களது பணபலமும் ஊடுருவி இருப்பதனால்தான்.

Securing the source of vital raw material - அதாவது எரிபொருளான எண்ணெய் வளம் அடுத்து Securing the Realm - அதாவது கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் புதிய நிலப்பரப்பு, இந்த இரண்டையும் முன்வைத்து நடத்தப்படுகின்ற இந்த அரசியல் மற்றும் ராணுவப் போராட்டத்தின் தற்போதைய பரிமானம்தான் இந்த தீவிரவாதம் மற்றும் ஜனநாயக நிர்மானிப்பு. இதை சாதிப்பதற்கு தடையாக இருப்பதுதான் இஸ்லாம் என்ற சமத்துவக் கொள்கைகள். அதிலும் இந்த இஸ்லாத்தை எங்கே நறுக்கினாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்வதும் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய நபிகள் நாயகம் என்ற மாபெரும் மனிதரின் வழிகாட்டுதல்களும் திருக் குர்ஆனும்.

அமேரிக்கா அடிக்கடி சொல்வதுபோல் pre-emptive action என்பது தீவிரவாதத்திற்கெதிராகவோ அல்லது அமேரிக்க பொருளாதார அமைப்புகளை நாசமாக்க முயற்சிக்கும் கூட்டங்களுக்கு எதிராக நடத்தக் கூடிய தாக்குதல்கள் மட்டுமல்ல, மாறாக வளர்ந்துவரும் இஸ்லாமிய கோட்பாடுகளும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புகளையும் சரியாக கணித்தே இப்படி ஒர் கொள்கையை அமேரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுத்தி வருகிறது.

இஸ்ரேலும் அமேரிக்காவும் தன்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும் சாதிக்கவும் எந்தவித பாதையையும் தேர்ந்தெடுக்கத் தயங்கமாட்டார்கள். தாயின் தலை மீது காலை வைத்தாவது தான் நினைத்ததை சாதிக்கும் குணமுடைய இந்த கூட்டணி, இஸ்லாத்தின் மீது தொடரும் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. அதற்கேற்றார்போல் அரேபிய ஆட்சியாளர்களின் பலவீனமும் அவர்களின் ஆட்சி முறையும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு காரணியாக அமைந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இஸ்ரேலுக்கு நெருக்கடியாக இருந்த ஈராக்கை சின்னாபின்னமாக்கி அதன் முதுகெலும்பை முறித்து அந்த நாட்டை அமேரிக்காவின் கைக்குள் கொண்டுவந்ததின் மூலம் அமேரிக்காவின் பொருளாதார வளங்களுக்கும், அதன் அடிப்படையான பெட்ரோலுக்கும் ஒரு தீர்வு எடுத்ததோடு மட்டுமல்லாமல், ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை நேரடியாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தியாகிவிட்டது. அதற்கான கட்டுமான பணிகளும் துவங்கிவிட்டன. ஈராக் இனி தன்னிச்சையாக செயல்பட குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகலாம். அதுவல்லாமல் அமேரிக்காவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கினால் அதனுடைய தற்போதைய கடன் சுமையான 110 பில்லியன் டாலரை (தற்போது அதை காலவாதி செய்வதாக அமேரிக்கா அறிவித்துள்ளது) அதன் தலைமேல் சுமத்தி உடனே கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தங்கள் ஆரம்பித்துவிடும். அதற்கேற்றார்போல் தற்போதைய ஈராக்கின் ஆட்சியாளர்கள் எல்லோருமே அமேரிக்காவின் கைக்கூலிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டாகிவிட்டது.

அடுத்த பிரச்சனை என்னவென்றால் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லும் எண்ணெய் குழாய்கள் சிரியாவைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருப்பதால் சிரியாவின் முதுகெலும்பையும் முறித்தாக வேண்டும். அதானால்தான் தற்போது லெபானின் முன்னால் பிரதமர் ஹரீரி கொலையை முன்னிலைப்படுத்தி சிரியாவின் துருப்புகளை லெபானைவிட்டு வெளியேற்றும் வேலையும் நடந்து வருகிறது. இஸ்ரேலை ராணுவ பலம் கொண்டு சிரியாவினால் சமாளிக்க முடியாவிட்டாலும், லெபானனை கைக்குள் வைத்திருப்பதன் மூலம் சிரியா தனது அரசியல் எல்லையை அதிகப்படுத்தி வைத்திருந்தது. ஹிஸ்புல்லாவிற்கு எல்லாவிதாமான ஆதரவு தருவதன் மூலம் இஸ்ரேலின் பாலஸ்தீன பிரச்சனைக்கும் சிரியா ஒரு சவாலாக இருந்து வந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் ஹைட்ஸ் என்ற மலைப்பகுதியிலிருந்துதான் இஸ்ரேல் நாட்டிற்கு தேவையான குடி தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிரியாவிற்கு இந்தப் பகுதி மிகவும் அவசியமான ஒன்று, ஏனென்றால் இந்த மலைப்பகுதி சிரியாவின் ராணுவ பாதுகாப்பிற்கு, குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சிரியாவின் ஆளுமையை குறைப்பதன் மூலம் இஸ்ரேல் - சிரியா பேச்சு வார்த்தைகளில் சிரியாவின் உயர்நிலையை குறைக்கமுடியும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. அவ்வாறு செய்வதால் இஸ்ரேல் விரும்புகின்றவாறு சிரியாவுடனான பேச்சு வார்த்தையை அமைத்துக் கொள்ளமுடியும். விரைவில் அப்படி ஒர் நிலையும் ஏற்பட இருக்கிறது, அதில் இஸ்ரேல் கோலான் ஹைட்சை கொடுக்க சம்மதித்து சிரியாவின் வழியாக ஈராக்கின் எண்ணெயை கொண்டு செல்ல அனுமதி பெற காத்திருக்கிறது. தனது தண்ணீரின் தேவையை லெபனான் மூலமாக இஸ்ரேல் சமாளித்துக் கொள்வதற்கு வசதியாக லெபானனை சிரியாவின் பிடிக்குள்ளிருந்து விடுவித்தாகிவிட்டது. இவை அனைத்தும் அமேரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலுக்கு சாத்தியமில்லை.

கடைசியாக இஸ்ரேலுக்கு பிரச்சனையாக இருக்கக் கூடிய ஒரே வலிமையான நாடு ஈரான் மட்டுமே. ஈரானில் ஏற்கனவே அமேரிக்கா மூக்கை நுழைத்து சரியாக காயம் பட்டு நிற்பதால் ஈரானை மண்டியிட வைக்க அமேரிக்காவிற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. சமயம் ஏற்படும்போது அந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேல் - அமேரிக்காவின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டாலும் ஒரு முக்கியமான இறுதிக் கட்ட போராட்டத்தை நோக்கியே 'the might of mythology' இந்த உலகப் பயணம் நகர்ந்துக் கொண்டு வருகிறது.

Battles are won by the supremacy of arms and guns, but the war is won by ideas and the empire is protected by the power of knowledge.

அமேரிக்காவின் ராணுவ பலமும் ஜையொனிசத்தின் மூளை பலமும் இணைந்து நடத்தும் இந்த உலக நாடகங்கள், பொய்களாலும், ஏமாற்றத்தாலும் புனையப்பட்ட காவியங்களே தவிர்த்து சத்தியத்திற்காக நடத்தப்படும் போராட்டமல்ல. இஸ்ரேலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இது போன்ற அசத்தியத்திற்காக, சத்தியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களே அதிமாக இருக்கும். கிறிஸ்துவத்தின் மீதும் அதைக் கொண்டு வந்த இயேசுவின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், பொய் பிரச்சாரங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது இஸ்லாத்தின் மீது அதனுடைய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது கூட்டணிகளை மாற்றி அமைத்துக் கொண்டு தனக்கு யார் யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த இந்த ஜையோனிசக் கூட்டம் தயங்கியதல்ல. வரலாற்று நிகழ்வுகள் நமக்கு இதை தெளிவாக அறிவிக்கின்றன.

ஜையோனிசத்தின் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு உலகத்திற்கும் சாமனிய மனிதர்களுக்கும் வேறுவகையான தோற்றத்தைக் காட்டி நேரத்திற்கு தகுந்தார்போல் வேடமடிந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாடகம் சிறு சிறு வெற்றிகளை அங்கங்கே கொடுத்தாலும் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும்போது சேர்த்து வைத்த அத்தனையும் ஒரே நேரத்தில் இழக்க நேரிடும். இது எத்தனையோ முறை நடந்துள்ளது என்றாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் வரலாறு நன்றாகவே அறிவிக்கின்றது. (இஸ்ரேலின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து எழுத இருக்கிறேன். அதில் மேலும் இது தொடர்பான விளக்கங்களை பார்க்கலாம்.)

Dissemination of Knowledge and close interaction with people at all level is the only way to protect any empire. ஆனால் இந்த இஸ்ரேல் அமேரிக்க கூட்டணிகளின் ஆட்சிமுறையே முடிந்தவரை பொதுமக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து வைப்பதும், அவர்களை ஏமாற்றுவதும், அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதும்தான். (தற்போதைய உதாரணம்: இதுவரை வெளிவராத இரட்டை கோபுர தகர்ப்பு விவகாரங்களும், ஈராக்கின் WMD).

மக்களை ஏமாற்றிய எத்தனையோ சாம்ரஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன, உதாரணம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் அழிவு. அமேரிக்கா சாம்ரஜ்யம் இன்னும் விழித்துக் கொள்ள அவகாசம் உள்ளது. அது எப்போது என்பதே என் போன்றவர்களின் கேள்விகள். அழிவின் விளிம்பிலெ நின்றுகொண்டு மாற நினைத்தாலும் மாற வாய்ப்பு உண்டு.

இறைவன் திருக் குர்ஆனிலே கீழ்வருமாறு கூறுகின்றான். "அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். இன்னும் திட்டமிடுவதில் அல்லஹ்வே மிக்க மேலானவன்". (அல் குர்ன் 8:30 (அல் அன்·பால்)

இப்படிப்பட்ட சாவால்கள் யாவும் முஸ்லீம்களுக்கு புதிதல்ல, ஆனால் அதை எதிர்கொள்ளும் சூழல்தான் புதிது. கல்வியிலும், அறிவியல் வளர்ச்சியிலும், இஸ்லாமியக் கொள்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றபடுவதிலும் பின் தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு இந்த சூழல் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இதானால்தான் முஸ்லீம்கள் தனது நிலையை அடிமுதல் நுனிவரை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் முதலில் தங்களிடத்திலே வளர்ந்துள்ள களைகளை வேறோடு எடுத்தெரிய வேண்டும். முஸ்லீம்கள் தாங்களாக மாறாத வரை இறைவனும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டான்.

முற்றும்.

குறிப்பு: எனது இந்த ஆய்வுரைக்கு மறுமொழியிட்டவர்களுக்கும் மற்றும் பயனுள்ள விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும் எனது நன்றிகள். மீண்டும் சந்திக்கும்வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

7 comments:

Abu Umar said...

சூழ்நிலைக்கு தேவையான பயனுள்ள தொடரை தந்தமைக்கு நன்றி.

இஸ்ரேல் சம்பந்தமான உங்களின் அடுத்த தொடரை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

Akbar Batcha said...

அபூ உமர்,

முஸ்லீம்கள் இன்னும் அதிகமான இடைஞ்சல்களுக்கு உள்ளாக இருக்கின்றனர். மறந்துவிட வேண்டாம். ஒவ்வொரு சமுதாயமும் , வெவ்வேறு கால கட்டங்களில் பல பிரச்சனைகளை சந்தித்துத்தான் வந்திருக்கின்றனர். முஸ்லீம்களும் அப்படியே. இதில் பயப்படவோ அல்லது உணர்ச்சிவசப்படவோ ஒன்றுமில்லை. புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் பிரச்சனைகளிலிருந்து மீளலாம்.

அபூ முஹை said...

//*முஸ்லீம்கள் இன்னும் அதிகமான இடைஞ்சல்களுக்கு உள்ளாக இருக்கின்றனர். மறந்துவிட வேண்டாம்.*//

சோதனைகளை சந்திக்காமல் முஸ்லிம்களுக்கு சும்மா கிடைத்திடுமா சொர்க்கம்!

இப்னு ஹம்துன் said...

Very analystic writing !
Why don't you try to publish you articles in popular magazines?

இப்னு ஹம்துன் said...

Very analystic writing !
Why don't you try to publish your articles in popular magazines?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

vanakkam,

could you please drop me a line at

mathygrps at yahoo dot com

nandri

சுட்டுவிரல் said...

'Confessions of an Economic hitman' - A Best selling book and to be read to know how America catches the other nations as its prey.