Tuesday, October 25, 2005

இப்படியும் நடக்குதுங்க! - கவனம் தேவை!

இன்று காலை எனக்கு வ்நத மெயிலில் படிக்க நேர்ந்த ஒரு அதிர்ச்சி நிறைந்த செய்தி. அதை அப்படியே ஆங்கிலத்தில் பதிந்துள்ளேன். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் கவனமாக இருக்க இந்த செய்தி பயன்படும் என நம்புகிறேன்.

------------------------

IIM Alumnus Harrased at Bangalore Station

Shocking Brutality at Bangalore Railway Station


Hi!

I would like to bring to notice a certain injustice that I have subjected to at the Bangalore Railway Station (Majestic) On September 30 (Friday), 2005, I had been to the station to see off my fiance and her mother. They took the Karnataka Express (Train #2627) to Jhansiat 6:30 pm.

On my way out I was asked to present my platform ticket by a railway official. On producing the same, the TT turned around and told me "What if I say that you haven't given me the ticket?" Before I could react, he along with his colleague pushed me into the adjacent enquiry cabin and physically manhandled me. I was slapped several times, my spectacles were grabbed and deliberately crushed by foot, and my phone was flung away from me. The RPF comprising of one RPF and four constables, appeared on the scene. The surrounding public was whisked away. None of the railway police officials cared to listen to me and they started hitting me indiscriminately with lathis. They dragged me out, and all the 4 constables continued hitting me with lathis from Platform 1 to Platform 3/5, till we reached the station master's cabin. Racist abuses and threats were made on the way. At the station master's cabin, I was told that I have been charged with a non-bailable offence and would be behind bars for 15 days.

Not for a single moment was I allowed to speak. All of a sudden a stranger came to the scene and he claimed that he was there to help me. Having lost all my physical strength and mental senses, I was happy to see some sort of help. He, claiming to be V Srinivas from Infosys, talked to the officials and the railway police in Kannada. He told me that the only way I was to get out was if I was willing to pay my way through. Being in no state to make a rational choice, I gave him my ATM card and pin. He took one of the RPF chaps along with him and said he would clear the matter. He returned some time later saying that everything was okay now.

I was asked to sign a statement which said that I hit the police and TT in a drunken state. I refused. Finally, they pressurized me to write that I did not produce a platform ticket when asked. I wrote the same and then V Srinivas took me out of the station. He joined me in an auto and took me to the ICICI ATM at Anand Rao circle. He withdrew Rs. 15000 from my ATM and got back. he took the cash under the pretext that while helping me he had left his wallet in the train he had left behind and that he would return the same through his ICICI Internet account. Having broken down mentally I did not realise that I was being cheated. He then took me to a Samsung showroom and tried purchasing a cellphone worth Rs. 18500 with my card. It was only then that I realised what was happening. I grabbed my card back, caught him by the collar, snatched my cash that lay in his pocket, and got into a running auto.

I have now realized that all of this was a plan. There is a strong nexus between the railway officials, the railway police and the fraudster. The railway officials identify a victim who they think is well-to-do, the RPF beat that individual till he has no physical or mental well-being. Then this fraud chap comes on to the scene, takes advantage of the situation, and takes all your cash away. Also, this series of events generally occurs on the last day of the month as they know that the salary gets credited on this day. (This strikes me now because the self-proclaimed Infy employee, V Srinivas, clearly asked me whether I had received my salary. He said that he just wanted to find out if there was cash enough to tackle the case.)

Now three days hence, I have tried to run from pillar to post. I have been forced to miss office hours in my effort to get justice. But I don't want to give up the fight midway. If any of you are in the media, or have friends/relatives who are in the industry, I'd like to speak with them about this in greater detail. I can be reached on xxxxxxx or xxxxxxx. I believe it would catalyze my efforts.

Also, please pass this email to all the people who reside in Bangalore, so that they don't fall into the same trap.

Regards,
Nimish V Adani
IIML Batch of 2003
ITBHU Batch of 2001

Source: http://www.iitiim.com/WebX?14@@.f5d0635

Thursday, October 20, 2005

நேற்று - இன்று - நாளை

நேற்று
1982ம் வருடம் ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டிருக்கும் வருடம். ஈரானை ஒழித்துக்கட்ட அமேரிக்கா ஈராக்கிற்கு வேண்டிய அத்தனை கெமிகல் மற்றும் ராணுவ ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தது.

இச்சூழலில் சதாம் ஹுசைன் துஜைல் எனும் இடத்திற்கு தனது புடை சூழ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். சுற்றுப்பயணத்தின் போது அவரது வாகனத்தின் மீது துப்பாக்கி குண்டுகளால் அப்பகுதியில் வாழும் ஒரு சில ஷியாக்களால் தாக்கப்படுகிறார். திடீரென தாக்கப்பட்டாலும் தகுந்த பாதுகாப்புடன் வந்த சதாமின் காவலாளிகள் திருப்பித் தாக்கினர். உடனடியாக சதாமின் நேஷனல் கார்டு பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டருடன் வந்து துஜைலில் இருந்த மக்களை தாக்க, 150க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி ஈராக்கிகளை தவிர்த்து மற்ற யாருக்கும் தெரியாமல் போனது, குறிப்பாக அமேரிக்கா கண்டு கொள்ளவே இல்லை.

இன்று
2005ம் வருடம் அமேரிக்க வீரர்கள் ஈராக், சிரியாவின் பார்டர் பகுதியில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்குபோது சாலையோரத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து ஐந்து அமேரிக்க வீரர்கள் மரணமடைகிறார்கள். உடனே அமேரிக்க ஈராக்கின் ராணுவத் தலைமை அமேரிக்க ஹெலிகாப்டர்களை அனுப்பி அப்பகுதியின் இரு கிராமங்களில் குண்டுமழை பொழிகிறது. 70 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். அதில் இதுவரை 39 அப்பவிகள் கொல்லப்ப்ட்டதாக தகவல்.

நேற்று சதாம் நடத்திய கொலைகளுக்காக இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுகிறார்.

நாளை
இன்று அமேரிக்க ராணுவம் நடத்திய கொலைகளுக்காக நாளை அமேரிக்கா அதிபர் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரிக்கப்படுவாரா?

Wednesday, October 19, 2005

இஸ்ரேலின் வெறியாட்டம் - பலியாகும் குழந்தைகள்

இஸ்ரேல் என்றால் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இஸ்ரேல் பாலஸ்தீன போராட்டம்தான். கடந்த 50 வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் இந்த கொடூர போராட்டம் ஜான் ஏறி முழம் சறுக்கிய கதையாக முடிவுக்கு வராமல் நடந்து கொண்டிருக்கிறது.

விடுதலைக் கேட்டு போராடும் பாலஸ்தீன மக்கள் தலைவர்கள் உலக நாடுகளில் பலமிக்க பல ஐரோப்பிய நாடுகளிடமும் மற்றும் அமேரிக்காவிடமும் பிச்சைக் கேட்டு இதுவரை உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை. இதற்கிடையில் பாலஸ்தீனர்களின் ஆயுதப் போராட்டம் அவ்வப்போது தலை தூக்குவதும் பிறகு குறைவதுமாக முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இப்போராட்டத்தில் அதிகமாக பலியாவது பெண்களும் குழந்தைகளுமே! யுனிசெப்பின் கணக்கெடுப்பின்படி கடந்து ஐந்து வருடங்களில் 542 பாலஸ்தீன குழந்தைகள் இஸ்ரேலின் துப்பக்கிக் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர்.

சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பாக முஹம்மது அல் துர்ரா எனும் 12 வயது சிறுவன் தன் தந்தையின் கைகளிலேயே, இஸ்ரேலிய ராணுவத்தால் சுடப்பட்டு மரணமடைந்தான்.

இச்செய்தி தவறானது என்று இங்கு ஒரு பதிவில் சமீபத்தில் படித்தது ஞாபகம் வருகிறது. ஒரு வேளை இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு வலையுலகில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வரும் செய்தியேல்லாம் ஆதாரம் நிறைந்ததாகத் தோன்றலாம்.

உலகமே இச்சிறுவனின் கொடுமையான மரணத்தை டிவியில் பார்த்தது. அச்சிறுவனின் தந்தை தனது மகனைக் காப்பாற்ற ஒரு சுவற்றின் அருகிலும் ஒரு மெட்டல் பேரலுக்கு (Metal Barrel) மத்தியில் தானும், தனது மகனும் பயந்து மறைந்து நின்றனர். என்னதான் போராடியும் முடியாது தன் மடியிலேயே தனது மகனை இஸ்ரேலிய ராணுவத்தின் இரு தீவிரவாதிகளின் துப்பக்கி குண்டுகளுக்கு பலியாகக் கொடுத்தான் அந்த தகப்பன்.

அச்சிறுவன் தன் தந்தையின் மார்பைக் கட்டிபிடித்து பயந்து அழுவதும், தந்தை இரு கைகளாலும் அவனை மறைகக முயல்வதும், துப்பாக்கிக் குண்டுகள் அவர்கள் இருவரின் பின்னால் உள்ள சுவற்றை துளைப்பதும், பிறகு இறுதியாக அச்சிறுவனின் உடலைத் துளைப்பதுமாக அந்த வீடியோ படம் காட்டுகிறது. மகன் தன் மடியில் செத்துக் கிடப்பதைப் பார்த்த தந்தை வலிப்பு வந்து மயக்கமடைகிறான்.

இந்தக் கொடுமையான காட்சியைப் படமாக்கியது பிரான்ஸ் 2 டிவிக்காக பணிபுரியும் தலால் அபு ரஹ்மா எனும் பாலஸ்தீன கேமராமேன். இந்தப் படம் இஸ்ரேலின் கொடுமையை சித்தரிக்கும் ஒரு ஐகோனாக (icon) பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் மறையாமல் இருக்கிறது.

இந்நிகழ்ச்சியை பின்னனியாக வைத்து நூற்றுக் கணக்கான சோகக் கவிதைகள் உலகம் முழுவதும் எழுதப்பட்டன. எகிப்து, துனீசியா மற்றும் பெல்ஜியம் நாடுகள் முஹம்மது அல் துர்ராவின் புகைப்படம் தாங்கிய ஸ்டாம்புகளை வெளியிட்டன. அரபு நாடுகளில் உள்ள பலத் தெருக்களுக்கும் கார்டன்களுக்கும் இச்சிறுவனின் பெயர் சூட்டப்பட்டது.

கெய்ரோ நகரில் இஸ்ரேலின் தூதரகம் இருக்கும் தெருவிற்கு எகிப்திய அரசு இச்சிறுவனின் பெயரை வைத்திருக்கிறது.

Sunday, October 16, 2005

கடவுள் சொன்னார், செய்தேன்!

ஜார்ஜ் புஷ் இப்போதெல்லாம் படு கோபத்தில் இருக்கிறார். கையில் ஆணி சுத்தியலுடன் தனது ரிபப்கிளிகன் செனட்டர்களையும் சேர்த்துக் கொண்டு நியூ ஆர்லின்ஸ் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். காட்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கண்ணில் கிடைக்கும் கட்டைகளையும், மட்டைகளையும் வைத்து எங்கு பார்த்தாலும் 'மடார் மடார்' என்ற சுத்தியல் சத்தம்தான்.

'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் பயன்படுத்துவதில் படு கில்லாடி. முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த முதல் கார்பெண்டர்' என்று வெள்ளை மாளிகையின் சீப் ஆப் ஸ்டாப் வில்லியம் எய்ட்ஸ் (Aids) NBR ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டார். 'புஷ் அவர்கள் இனி கேபினட் மீட்டிங்கிற்கு சுத்தியலுடன் வரவேண்டும்' என்று துணை அதிபர் ஷெனாய் கேட்டுக் கொண்டார். புஷ்ஷின் முதல் ரவுண்ட் அமைச்சரவையில் வெளியுறவு செகரட்டரி பவல் அவ்வப்போது புஷ்ஷின் சொல்லை மதிக்காமல் கேபினட் மீட்டிங்கில் பிரச்சனைகள் உண்டக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இது தொடர்பாக ஸ்டாட்போர்டு யூனிவர்சிட்டியின் பொலிட்டிகல் புரபசர் மைக்கேல் ஸ்டடி அவர்கள் 'ஜார்ஜ் புஷ்ஷின் கோபத்திற்கும், சுத்தியலுடன் அலைவதற்கும் காரணம் காட்ரீனா அல்ல, கடவுள்தான்' என்று தெரிவித்தது அமேரிக்க எவாஞ்சலிஸ்ட் செனட்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டடி மேலும் கூறும்போது 'ஜார்ஜ் புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், கடவுளின் ஆசியும் அனுமதியும் பெற்றுதான் அவர் எந்த முடிவுகளும் எடுப்பது வழக்கம். கடவுள் சொல்லித்தான் ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தார்'.

இது சம்பந்தமாக மைக்கேல் ஸ்டடி அவர்கள் மேலும் சொல்லும்போது 'ஈராக் போரில் மரணமடைந்த அமேரிக்க வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், ஒரு நல்ல காரணத்திற்காக அவர்க்ள் சொர்க்கம் செல்கிறார்கள் என்றும் புஷ் அவர்கள் சொன்னதை' கம்பூனிட்டி ஹாலில் நடந்த 'Statistics of death and life' கருத்தரங்கில் மேற்கோள் காட்டி பேசினார்.

'பாலஸ்தீன் தேசத்தை உருவாக்கச் சொல்லி தனக்கு கடவுள் அதிகாரம் கொடுத்துள்ளார்' என்று பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பஸின் கையைப் பிடித்துக் கொண்டு புஷ் அவர்கள் நெகிழ்ந்ததும், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்ததும் மெஹ்மூத் அப்பாஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை கவனிக்கத்தக்கது.

மைக்கேல் ஸ்டடியின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், காட்ரீனாவிற்கு கடவுளுக்கும் புஷ்ஷின் கோபத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியாமல் போனதால் காங்கிரஸ் இன்வஸ்டிகேடிங் கமிட்டி நிர்ணயித்து அதற்கு வேலையில்லாமல் இருக்கும் நியூ கொலம்பியாவின் செனட்டர், டெமக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவான் ஸ்லீப்பை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

தனது சாகக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆய்வு கமிட்டியில் மெம்பராக இருப்பதும், தனக்கு இதுவரை அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டிய ஸ்லீப் தனது பணியை செவ்வனெ செய்து விரைவில் செனட்டில் தாக்கல் செய்யமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இயற்கை சீரழிவுகள் வருவதற்கு முன்னால் அதை முழுதாக அறிந்து அதன் மூலம் ஏற்படவிருக்கும் சேதங்களை முன்கூட்டியே கணக்கிடும் தொழில்நுட்பத்தை அமேரிக்க மெட்ரோலாஜி டிபார்ட்மெண்ட்களில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று புஷ் இன்றிரவு ஆணையிட்டார். இவ்வாறு முன்கூட்டி அறிவதன் மூலம் சீரமைப்புப் பணிகளையும், அதைத் தொடர்ந்து வரும் கட்டுமானப் பணிகளை 'ஹாலிபர்ட்டன்' கம்பேனிக்கு சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னாலேயே குத்தகைக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் 'பிமா (FEMA) தனது மகிழ்வைத் தெரிவித்தது.

Thursday, October 13, 2005

அமேரிக்காவின் அவுட் சோர்ஸிங் (Some day in Future)

அமேரிக்க ஜனாதிபதியை அவுட் சோர்ஸ் மூலம் வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதென்று காங்கிரஸ் இன்று ஒர் முக்கியமான அறிவிப்பு செய்தது. இவ்வாறு செய்வதன் மூலம் அதிபரின் வருடாந்திர சம்பளமான 400,000 டலரை கணிசமாக சேமிப்பதோடு அமேரிக்க ஒவ்வொரு வருடமும் சந்திந்து வரும் 500 பில்லியன் டாலர் பட்ஜெட் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்ய முடியும் என்று அறிவித்தது.

வரும் நவம்பர் மாதம் அதிபர் புஷ் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இந்தியாவில், மும்பை நகரிலிருந்து இயங்கிவரும் இந்தூஸ் டெலிசர்வீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் குர்வீந்தர் சிங் நவம்பர் ஒன்றிலிருந்து அதிபராக பணி தொடங்க உள்ளார் என்றும் காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கின் சம்பளம் மாதத்திற்கு 400 டாலர் (இந்திய மற்றும் அமேரிக்காவின் வரிகள் தனி) என்றும் அத்துடன் மெடிக்கல் பெனிபிட்ஸ் அல்லது வேறு எந்த உதவியும் கிடையாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்தது.

குர்வீந்தர் சிங்கை தேர்ந்தெடுப்பதற்கான முக்கியமான காரணம், அவருடைய பெற்றோர்கள் அமேரிக்காவின் நயாகார நீர்வீழ்ச்சிக்கு விடுமுறைக்காக சென்றபோது குர்வீந்தர் சிங் அங்கே பிறந்ததாகவும், அதனால் அவர் அமேரிக்காவின் அதிபராகும் தகுதி அதிகமுள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்தது.

'நாங்கள் இந்த முக்கிய முடிவை அமேரிக்காவின் தற்போதைய நிதி நிலையை மனதில் வைத்து எடுத்ததாகவும், இது அமேரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும்' - செனட்டர் தாமஸ் ரொந்தனால்ட், ABC தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். தாமஸ் அமேரிக்க அவுட் சோர்ஸிங் அக்கவுண்டபிலிட்டி அமைப்புடன் சேர்ந்து இது தொடர்பாக இரண்டாண்டு காலம் ஆய்வு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அவர் மேலும் 'உலக அரங்கில் அமேரிக்காவின் நிதி மாற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதது கவனிக்கப்பட வேண்டியது' என்றும் சொன்னார்.

அதிபர் புஷ் இன்று காலை இ மெயில் மூலமாக பதவிப்பறிப்பு தொடர்பான ஆனையைப் பெற்றுக் கொண்டார் என்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தனது வெள்ளை மாளிகையை காலி செய்யும் ஏற்பாட்டில் இருக்கிறார் என்றும் வெள்ளை மாளிகையின் குறிப்பு ஒன்று அறிவிக்கின்றது.

கால நேர வித்தியாசத்தின் காரணமாக அமேரிக்காவின் புதிய அதிபர் மிஸ்டர் சிங் இந்தியாவிலிருந்து இரவில் பணி செய்வார் என்று அறியப்படுகிறது. 'இரவில் அமேரிக்காவின் அதிபராக பணி செய்வதன் மூலம் தனது பகல் நேர வேலையான அமேரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பேனிக்கான கால் செண்டர் வேலையை தன்னால் தொடர்ந்து செய்ய இயலும்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்.

MDTV க்கு அளித்த பிரத்தியோகமான பேட்டியில் 'தான் அமேரிக்காவின் அதிபரானது மிகுந்த மகிழ்வை தருவதாகவும், தான் நிச்சயம் ஒருநாள் அதிபராவேன் என்று நம்பிக்கை இருந்ததாகவும்' தெரிவித்தார் மிஸ்டர் சிங்.

அதிபர் சிங் இந்தியாவிலிருந்து தனது பி.சி. மூலமாக அமேரிக்காவின் அன்றாட நிகழ்வுகளை புரிந்துக் கொள்ள பெங்களூரைச் சேர்ந்த டுர்ரண்ட் சாப்வேர் நிறுவனம் 'ஸ்கிரிப்ட் டிரி' என்று ஓர் மென்பொருளை உருவாக்கி இருக்கிறது, அதன் மூலம் மிஸ்டர் சிங் பிரச்சனையின் அடிப்படையைப் புரிந்துக் கொள்ளவில்லை என்றாலும் மேலோட்டமாக தனது முடிவுகளை எடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

அமேரிக்காவின் 'மென்பவர் கவுன்சிலின்' அறிக்கையின் படி அதிபர் புஷ்ஷிற்கு அமேரிக்காவில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல என்று தெரியவருகிறது. ஆனால் அதிபர் தன் இளமை காலத்தில் பணி செய்த 'நேஷனல் கார்டு' அமைப்பில் வேண்டுமானல் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கிறது. அமேரிக்காவின் நேஷனல் கார்டு தற்போது ஈராக்கின் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் புஷ் மற்றும் ஷெனை இருவருக்கும் ஈராக்கில் வேலை வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிய வருகிறது.

'நான் ஈராக் சென்றிருக்கிறேன்'. ஈராக்கைப் பற்றி தனக்கு ஓரளவு அறிவும் அனுபவமும் இருப்பதாக அதிபர் புஷ் சொன்னார். 'தனக்கு ஈராக்கில் வேலை வாய்ப்பு கிடைத்தால் அதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும்' தெரிவித்தார் புஷ். அதிபர் புஷ் ஈராக்கின் பாக்தாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு பயணம் செய்ததும், அங்குள்ள 'கிப்ட் ஷாப்பில்' சிறிது நேரம் இளைப்பாறியதும் கவனிக்கத்தக்கது.

பாக்தாதிலும், பல்லூஜாவிலும் கிடைத்த தகவல் படி அவர்கள் புஷ்ஷின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிகிறது. அங்கிருந்து செயல்படும் மிலிட்டண்ட் அமைப்பின் தலைவர் ஒருவர் இதுபற்றி பேசும் போது 'புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், அவர் இங்கு வருவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். விரைவில் அவர் அதிகம் நேசிக்கும் கடவுளுடன் அவருக்கு ஒரு நல்ல சந்திப்பை தன்னால் ஏற்பாடு செய்து தரமுடியும்' என்று தெரிவித்தார்.

Wednesday, October 12, 2005

அந்த 40 வருடங்கள்

சென்னை IIT யின் டீன் விஜய் கிராண்டி முப்பது வருடங்களாக வாரத்திற்கு ஒரு வேளை உணவு உண்ணுவதில்லையென்று ஓர் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தார். அந்த நோன்பை, விரதத்தை சென்ற வாரம் முடிவுக்கு கொண்டு வந்தார் என்பது பல பேருக்கு தெரியாத செய்தியாகப் போனது. ஆனால் அந்த செய்தியினுள் புதைந்து கிடந்த ஒரு உன்னதமான தேசப்பற்றை எந்த செய்தி நிறுவனங்களும் கண்டு கொள்ளவில்லை.

அப்படி என்ன ஒரு முக்கியமான விசெஷம் இவரின் இந்த உண்ணா நோன்பில்...

1965 இந்திய வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு சோகம் நிறைந்த வருடம். பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக போர் தொடுத்த வருடம் அது. காஷ்மீரை எப்படியும் தன்னுடன் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று இளைய இந்தியா மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாகிஸ்தானின் துணிகர முயற்சி.

எல்லையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் படைகளுடன் தனது இன்னுயிரை இழந்து கொண்டிருக்கும் வேளையில், இன்றைக்கு மார் தட்டி மற்ற நாடுகளை எல்லாம் துச்சமாக மதிக்கும் அமேரிக்க அன்று இந்தியாவிற்கு எதிராக ஓர் மிரட்டலை பிரகடனம் செய்தது. அதாவது.. இந்தியாவிற்கு உதவியாகக் கொடுத்து வந்த உணவு பொருட்களை நிறுத்துவதாக அறிவித்தது. உணவு பஞ்சத்தால் இந்தியா அப்போது அமேரிக்காவிடம் கையேந்தி நின்று வந்தது எல்லோருக்கும் தெரியலாம். அமேரிக்காவின் பயமுறுத்தல் இந்தியாவை பொறுத்தவரை அதிர்ச்சி நிறைந்த கவலைக்கிடமான செய்தி. அப்போதைய பிரதமர் சாஸ்திரி அவர்கள் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுமக்களிடம் பேசியக் கூட்டத்தில் முக்கியமான கோரிக்கை ஒன்றை எடுத்து வைத்தார்.

இந்தியாவில் இருக்கும் உணவுப் பஞ்சத்தை சமாளிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாரத்திற்கு ஒரு வேளை உண்ண நோன்பை கடைபிடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

பள்ளிச் சிறுவனாக இருந்த விஜய் கிராண்டியும் அந்த பொதுக் கூட்டதில் கலந்து கொண்டார். மற்ற இந்தியக் குடிமக்களைப் போல் பிரதமர் சாஸ்திரியின் வேண்டுகோளுக்கிணங்க விஜயும் வாரம் ஒரு வேளை உண்ணா நோன்பை அனுசரிக்கத் தொடங்கினார். இந்தியா ஒருவாறாக அந்த பாகிஸ்தானுடனான போரையும் இந்தியாவினுள் இருந்த உணவு பஞ்சத்தையும் வெற்றிகரமாக சமாளித்தது.

ஆனால், பள்ளிச் சிறுவனான விஜய் கிராண்டி, அந்த ஒரு வேளை உண்ணா நோன்பை விடாது கடைபிடிக்கத் தொடங்கினார் வேறொரு வைராக்கியத்துடன். என்று அமேரிக்காவிற்கு இந்திய உணவு உதவி செய்யும் நாள் வருமோ அன்றுவரை இந்த உண்ணா நோன்பு தொடரும்.

அந்த நாளும் வந்தது. சென்ற வாரம் இந்தியாவின் அமேரிக்காவிற்கான தூதர் வாஷிங்டனில் 50 மில்லியன் டாலருக்கான காசோலையையும், இரண்டு விமானங்க்ள் நிறைந்த உணவுப் பொருள்களையும், இன்னும் மருந்துகளையும் அமேரிக்காவிற்கு இந்தியாவின் உதவியாக கொடுத்தார். காட்ரீனாவால் நிகழ்ந்த பேரிழப்பை இன்னும் கிரகிக்க முடியாமல் தவிக்கும் அமேரிக்காவிற்கு இந்தியா அளித்த உதவிதான் இந்த 50 மில்லியன் டாலர் காசோலை.

விஜய் கிராண்டி தனது உண்ணா நோன்பை முறித்தார். விஜய் கிராண்டியை போன்ற மனிதர்கள் உள்ளவரை இந்தியா தன்னிலை எழுச்சிப் பெற்ற நாடக உலக அரங்கில் மற்றைய நாடுகளுக்கு முன்னுதாராணமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.