Thursday, November 17, 2005

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும்

உலக நாடுகளில் வெறும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தக் கூடிய அரசாங்கங்களில் முதலிடம் நிச்சயமாக அமேரிக்க அரசிற்குத்தான் தரவேண்டும். காலம் காலமாக வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டும் வைத்து தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி, ஊடகங்களின் வசதியுடன் தனது மக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆளும் வர்க்கம் நிறைந்த நாடுதான் இந்த அமேரிக்கா என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அது உள்நாட்டு விவாகாரங்களோடு நின்று போகும்போது அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதே பாணியை தற்போது உலக நாடுகளின் மீது, ஐ.நா. உலக வங்கி, IMF, UNICEFF, UHO மற்றும் ராணுவ தளவாடங்களின் வசதியோடு செயல்படுத்த முனையும்போது பல்லாயிரக்கணக்கான உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரால் என்ன வேண்டுமானலும் சொல்லலாம், யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம், மிரட்டலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் அந்தக் கருத்து சுதந்திரம் அமேரிக்கவை எதிர்ப்பவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அமேரிக்காவின் கருத்து சுதந்திரத்திற்கான சரியான விளக்கம் என்பதை அமேரிக்காவிற்கு வால் பிடிக்கும் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ?

அப்படி ஓர் உலக அழிவை அதாவது பொருளாதார சீரழிவை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்புமின்மை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அமேரிக்கா நடத்திவரும் பொய் நாடகங்கள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈராக் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களும் அதற்கான காரணங்களும் மிகத் தீவரமாக அலச வேண்டிய அவசர சூழலில் உலகம் இருந்து வருகிறது. அமேரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நாடுகளாக உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இருக்கும் பட்சத்தில் அமேரிக்கா செய்யக் கூடிய தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகள் குறைந்து போகின்றன.

9/11 ஏன் உருவானது என்ற கேள்விக்கு அமேரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலளிக்கும்போது 'நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நமது உயர்வு மிக்க சமுதாய பண்புகளும், வாழ்க்கை முறைகளும் அவர்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் அளிக்கிறது, அதனால்தான் நம்மீது இப்படி ஓர் மோசமான தீவிரவாத செயலை கட்டவிழ்த்துள்ளார்கள்' என்று சொன்னார்.

அவருடைய பதிலில் அவர் இரண்டு விஷயங்களை கோட்டிட்டு காட்டியுள்ளார். ஒன்று அமேரிக்கர்கள் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை இன்னொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டும் வேறெந்த வாழ்க்கை முறைகளைவிட சிறப்பானது என்று மார்தட்டும் அதிபர் புஷ், இந்த இரண்டையும் ஈராக்கிற்கு கற்றுத்தர வேண்டுமென்று முடிவெடுத்தார். அதோடு நில்லாமல் இந்த இரண்டிற்கும் 'ஜனநாயகம்' என்று ஓர் அடைமொழிக் கொடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுத் தீர்ப்பது என்று ஆசைப்பட்டார். (விற்பது என்ற வார்த்தை நான் பயன்படுத்தியக் காரணம் இது பண்டமாற்று முறை என்பதால். ஜனநாயக பயமுறுத்தலால் மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்காவுடன் உள்ளமைப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அமேரிக்கவின், குறிப்பாக புஷ் மற்றும் ஷெனை பரிவாரங்களின் ஆயில் கம்பேனிகளுக்கு நீண்ட கால வியாபார உரிமைகள் வழங்க இருக்கின்றன).

அவரது ஆசையில் அவரைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஈராக்கைப் பொறுத்தவரை தற்போது அவராலேயே மறந்து போனதோ என்று சந்தேகமளிக்கும் அளவிற்கு ஈராக்கின் நிகழ்வுகள் மிக மோசமான பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன.

சதாம் ஹுசைனை மூட்டைக் கட்ட அவர்கள் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள்:

அ) சதாம் ஹுசைனிடம் WMD இருக்கிறது. அதனால் ஈராக்கியர்களை ஈவு இரக்கிமின்றி கொன்று தள்ளுவார். அவர் அவ்வாறு 1988ல் குர்துகளுக்கு எதிராக ஹலப்ஜாவில் பயன்படுத்தினார். தற்போது ஐரோப்பிய அமேரிக்க நாடுகள் மீது அவர் பயன்படுத்தலாம். அதற்கு அவரிடம் ஆயுதங்கள் உள்ளன. லண்டனை 45 நிமிடத்திர்க்குள் சதாம் ஹுசைனால் தாக்க முடியும்.

ஆ) ஈராக்கியர்களை சதாமிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இதில் முதல் காரணமான WMD கடந்த இரண்டு வருடமாகத் தேடியும் கிடைக்காமல் போயிற்று என்பது உலகமே அறிந்த விஷயம். அது பொய்யான தகவல் என்பதும், இந்த பொய்த்தகவல் எப்படி அமேரிக்க அதிபரிடம் சென்றது என்று அமேரிக்கவின் புலனாய்வுத் துறையை சந்திக்கிழுத்து அதன் தலைவரை வெளியேற்றி முடித்த கையோடு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படுவது ஈராக்கின் அப்பாவி மக்கள்தானே தவிர்த்து அமேரிக்க அல்லவே.

அதுமட்டுமா? ஈராக்கின் பெட்ரோல் முழுக்க முழுக்க அமேரிக்காவின் கைகளுக்கு வந்துவிட்டது, இனிமேல் இதில் இழந்துபோன அமேரிக்க உயிர்களாகட்டும் அல்லது ஈராக்கிய உயிர்களாகட்டும், எல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்?

ஈராக்கில் WMD இல்லாமல் போனால் என்ன! என்னிடம் இருக்கிறது என்று அமேரிக்கா பயன்படுத்திய கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி உலக நாடுகள் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றன. இளைத்தவன் செய்தால் அடி உதை. வசதி மிக்கவன் செய்தால் கண்டு கொள்வதில்லை!

அமேரிக்கப் படைகள் வெள்ளை பாஸ்பரஸ் எனும் கெமிக்கலை பல்லூஜாவில் பயன்படுத்தி அப்பாவி ஈராக்கிகளை கொன்று குவித்தது என்று இத்தாலியின் தொலைக் காட்சியில் சென்ற வாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதலில் அப்படியில்லை என்று மறுத்து பொய் சொன்ன அமேரிக்கா, பிறகு மெதுவாக ஆமாம், நாங்கள் அதை ஈராக்கின் போராளிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினோம் என்று தனது நிலையை மாற்றி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.
பெண்களும், பிள்ளைகளும் வெள்ளை பாஸ்பரஸ் தாக்கப்பட்டு உடல்கள் கரைந்து தெரு முழுதும் கிடந்ததை நாங்கள் பார்த்தோம் என்று பல்லூஜாவில் தாக்குதலில் ஈடுபட்ட அமேரிக்க வீரர் ஒருவரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது (Check Information Clearing House website)
ஆனால் இந்த WMD அமேரிக்கப் படைகள் ஈராக்கிற்கு சென்றவுடனேயே பயன்படுத்தப்பட்டது என்று அமேரிக்க படை வெளியிடும் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. (March Edition of Field Artillery, officers from 2nd Infantry's fire support element boast about their role in the attach on Fallujah in November last year. "White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE [high explosive]. We fired 'shake and bake' missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.") (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

The second, in California's North County Times, was by a reporter embedded with the marines in the April 2004 siege of Falluja. "'Gun up!' Millikin yelled ... grabbing a white phosphorus round from a nearby ammo can and holding it over the tube. 'Fire!' Bogert yelled, as Millikin dropped it. The boom kicked dust around the pit as they ran through the drill again and again, sending a mixture of burning white phosphorus and high explosives they call 'shake'n'bake' into... buildings where insurgents have been spotted all week." (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

'மூச்சுவிடக்கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் அவை எல்லாவையும் ஒழித்துக் கட்டுங்கள்' இதுதான் பல்லூஜாவில் அமேரிக்க வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

There were widespread reports that in March 2003 US marines had dropped incendiary bombs around the bridges over the Tigris and the Saddam Canal on the way to Baghdad. The commander of Marine Air Group 11 admitted that "We napalmed both those approaches". Embedded journalists reported that napalm was dropped at Safwan Hill on the border with Kuwait. In August 2003 the Pentagon confirmed that the marines had dropped "mark 77 firebombs". Though the substance these contained was not napalm, its function, the Pentagon's information sheet said, was "remarkably similar". While napalm is made from petrol and polystyrene, the gel in the mark 77 is made from kerosene and polystyrene. I doubt it makes much difference to the people it lands on. (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

சதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது இதைத்தானே! சதாம் செய்ததற்கும் தற்போது அமேரிக்க செய்வதற்கும் என்ன வித்தியாசம்! அமேரிக்க படைகளை எதிர்க்கும் ஈராக்கிய போராளிகளை ஒழித்துக் கட்ட அமேரிக்கப் படைகள் பயன்படுத்தும் WMDயைத்தான் அன்றைக்கு சதாம் தனது எதிரிகளை ஒழித்துக் கட்டப் பயன்படுத்தினார். சதாம் ஹுசைனைப் பிடித்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஈராக்கில் நடைபெறும் மேலே சொன்ன அக்கிரமங்களுக்கு அமேரிக்க அதிபர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவாரா?

ஈராக்கில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று நாம் இருக்க முடியாது. இதே நிலை நாளை வேறு யாருக்கு வேண்டுமானலும் நிகழலாம். அமேரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை அல்லது நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாக பாவிக்கப்படுவார்கள். நாளை இந்த நிலை நமக்கும் நடக்கலாம்!

ஈராக்கில் அமேரிக்க படைகளின் வரம்பு மீறல்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலைகளையும் பின்வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

(தொடரும்)

7 comments:

நல்லடியார் said...

//அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள்//

மக்களின் இந்த ஞாபக மறதிதான் ஊடகங்களையும் அமெரிக்கா சொல்லும் பொய்களையும் ்வாழ வைத்ஹ்ஹுக் கொண்டிருக்கின்றன. ஈராக்கின் கெமிக்கல் அலியைப் பற்றி அறிந்த அளவுக்கு வியட்நாமில் "ஏஜெண்ட் ஆரஞ்ச்" ஐக் கொண்டு ஆயிரக்கணக்கான வியட்நாமியர்களைக் கொன்ற "கெமிக்கல் நிக்ஸன்" ஐ மக்கள் மறந்து விட்டார்கள்.

நண்பன் said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

தங்களைத் தாங்களே சொறிந்து கொள்ளும் உயர் நாகரீக நிலையை அடைந்துவிட்ட மேலை நாட்டினர் - இன்று சத்தாமை நடத்தும் விதத்திலே தெரிந்து விடும் உலகிற்கு - அவர்கள் ஜனநாயகத்தின் மேன்மையை.

முன்னர் ஒருமுறை அவரை இழுத்துத் தள்ளி உதைத்து அவமானப்படுத்தினர். இப்பொழுது சமீபத்தில் நீதிமன்ற ஊழியர்களே அவரைத் தாக்கிக் காயப்படுத்தி இருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் கண் கொத்திப் பாம்பாகக் கண்காணித்து வரும் ஒரு நபரையே இத்தனை கொடூரமாக ஒரு நீதிமன்ற வளாகத்தில் நடத்திவிட்ட இவர்களது நாகரீகமா உயர்ந்தது?

எல்லோருக்கும் இப்பொழுதே தெரிந்துவிட்டது - சத்தாமின் வழக்கு எந்த ஒரு நீதியையும் சார்ந்திராது. நீதிமன்ற முடிவின் படியே தண்டனை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி சத்தாமை கொல்வதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டே விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

இது தான் அமெரிக்கர்களின் நீதி பரிபாலனை என்றால் அவர்களது தலைவர்களின் பண்பாடோ இன்னும் மெய்சிலிர்க்கும்.

அல்கொய்தாவின் மீது தாக்குதல் தொடங்கும் பொழுது புஷ் உளறிக் கொட்டினார். We will wage a crusade என்றார். சிலுவைப் போர்கள் என்பது கிறித்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் நடந்த யுத்தம் கும். தீவிர வாதிகளின் மீதான யுத்தத்தை crusade என்றதன் மூலம் அவர் மனதின் அடியாழத்தில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்லாமிய வெறுப்பை வெளியே காட்டிக் கொண்டார்.

பின்னர் இப்பொழுது சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னார் - கடவுள் என் கனவில் தோன்றி இராக்கின் மீது போர் தொடு என்று ணையிட்டார் - அதனால் தான் யுத்தம் தொடங்கினேன் என்று. இந்த உளறலைக் கண்டு உலகமே விதிர்விதிர்த்துப் போய் வெட்கித் தலைகுனிந்தது இந்த உலகம்.

இத்தகைய பண்புகளைத் தான் அமெரிக்கர்கள் தலைமைப் பண்புகளாக எண்ணிக் கொள்கிறார்கள்...

இறைவன் தான் இவர்களுக்குத் தெளிவைக் கொடுக்க வேண்டும்....
11:23 AM

Akbar Batcha said...

ராஜா,

நன்றி. தொடர்வேன். நீங்கள் அவ்வபோது வந்து ஆசீர்வதியுங்கள்.

Akbar Batcha said...

நல்லடியார்.

தவறுகளை தட்டிக் கேட்காதவரை.. தவறு செய்பவனுக்கு அது தவறு என்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும், கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் எதை வேண்டுமானலும் செய்வான். இதுதான் இன்றைய அமேரிக்காவின் நிலை.

Akbar Batcha said...

நண்பரே!

அமேரிக்க அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜனநாயகமு, நீதியும் அமேரிக்காவை ஆளும் வர்க்கங்களுக்குத்தான். மற்றவர்களெல்லாம் மாடர்ன் முட்டாள்கள்.

சீனு said...

அமெரிக்கா என்ற ஒரு நாடு வாழ, எத்தனை நாட்டை வேண்டுமானாலும் அழிக்கத் தயங்கமாட்டார்கள். 9/11 ஒரு பாடம் தான். "வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொண்டது, வரலாற்றில் இருந்து நாம் ஒன்றுமே கற்றுக்கொள்ளாதது தான்" என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.