Thursday, June 04, 2020

சிந்தனை சிதறல்கள்

ஒரு பார்வைதான் வீசிச் சென்றாள்
எத்தனை வார்த்தைகள்
படித்து முடியவில்லை

ஒரு முறைதான்  சிரித்துச் சென்றாள்
எத்தனை வெளிச்சம்
இருளே இனி இல்லாமல் போயின

ஒரு முறைதான் பேசிச் சென்றாள்
எத்தனை நளினம்
இலக்கியங்கள் தோற்றுப் போயின

ஒரு முறைதான் தொட்டுப் பேசினாள்
எத்தனை கனவுகள்
இரவுகள் சொர்க்கமாயின

ஒரு முறைதான் முத்தமிட்டாள்
எங்கே என் உயிர்
நடைப் பிணமாய் அலைகின்றேன்.

No comments: