Monday, July 04, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 5

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

மனித வரலாற்றின் விசித்திரமே மனித மனங்களின் 'நேரிடை அனுபவத் தேடல்தான்'. ஒவ்வொரு மனிதனும் நன்மை எது, தீமை எது என்பதைத் தெரிந்திருந்தாலும் பெரும்பாலான மனிதர்கள் அத்தீமையைச் செய்வதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை பெறாத வரை அவர்கள் அதை தெரிந்ததாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவ்வாறு நேரிடை அனுபவத்தேடலில் இருப்பவர்களில் சிலர் பிறரது அனுபவத்தை தனக்கு கிடைத்த அனுபவமாக எண்ணி செயல்படுவார்கள். பிறரது அனுபவங்களை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் மிகவும் குறைவாக இருந்தாலும், அக்குறைவானவர்களே இந்த உலகத்தின் தலை எழுத்தை மாற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் தலை எழுத்தை மாற்றியவர்களில் பலர் நல்வழியை நோக்கியும் சிலர் தீய வழியை நோக்கியும் இந்த உலக ஓட்டத்தை திசை திருப்பி இருக்கின்றார்கள்.

இவ்வுலக ஓட்டத்தை நல் வழியில் திருப்பிய பெரும் மனிதர்களில் ஆப்ரஹாம் என்ற தச்சுத் தொழிலாளியும் ஒருவர். அவர் இறைவனின் திருத்தூதராக இருந்து இவ்வுலக தலை எழுத்தை மாற்றிய பெரும் மனிதர்களில் ஒருவர். அவருக்கு இறைவன் போதுமான வழிகாட்டுதல்களை கொடுத்து அவரது அனுபவத்தேடல்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தான். அந்த இறைவனின் துணையுடன் அவர் செய்த செயல்களில் மிக முக்கியமானது மறைந்து அல்லது மறந்து போன ஆன்மீகத் தொடரை, மையத்தை கண்டுபிடித்தது. அதுமட்டுமல்லாமல் அதைப் புதுப்பித்து உலக ஆன்மீகத் தேடலில் ஒரு அழியாத தடத்தினை ஏற்படுத்தினார். எந்த இறைத்தூதருக்கும் இல்லாத ஒரு சிறப்பு ஆப்ரஹாமிற்கு இறைவனால் வழங்கப்பட்டது. அதுதான் இறைவனின் (அல்லாவின்) நண்பர். கலீலுல்லாஹ் என்று அரபி வார்த்தையில் சொல்லப்படக்கூடிய சொல்லின் பொருள் இறைவனின் தோழர் என்பதே.

தோழன் என்று சொல்லும்போது நாமெல்லாம் நன்றாக புரிந்துக் கொள்ளமுடியும் அதன் மகத்துவத்தையும் அதன் பலனையும். நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளும் எத்தனையோ விஷயங்களை பெற்ற தாயிடமோ அல்லது நம்பி வந்த மனைவியிடம் கூட பரிமாறிக் கொள்ளமுடியாது. இன்னும் சொல்லப்போனால் 1426 வருடங்களுக்கு முன்பாக இவ்வுலகின் தலைவிதியை மாற்றி அமைத்த முகம்மது (சல்) அவர்கள் இதை சாதித்தது தனது தோழர்களின் உதவியால்தான். அந்த வகையிலே இறைவனின் தோழராக இருந்து இந்த உலக மக்களின் ஆன்மீகத் தேடலுக்கு ஒரு புதுப் புரட்சிக்கு வித்திட்டவர் இந்த ஆப்ரஹாம்.

மனித வாழ்க்கை இரண்டுவிதமான ஆதாரங்களுக்காக அல்லது ஆதாரங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஒன்று வாழ்வதற்கான ஆதாரம் - பொருள். இன்னொன்று வாழ வேண்டியதற்கான காரணம் - ஆன்மீகம். அதில் பொருள் தேடல் - மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கான அடிப்படை. ஆன்மிகத் தேடல் - வாழ வேண்டியதற்கான காரணம். ஆன்மீகத் தேடலும், பொருள் தேடலும் ஒன்றாக ஒன்றை ஒன்று சார்ந்து பயணிக்கும்போது அது அதன் இலக்கை எளிதாகவும் எளிமையாகவும் அடைந்துவிடுகிறது. அப்படியில்லாமல் பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் ஒன்றை ஒன்று மறந்து பயணிக்கும்போது வாழ்க்கை எளிமையில் இருந்து மாறி இடர்களில் சென்று சேர்கிறது. காலப்போக்கில் இரண்டும் வெவ்வேறு பாதையில், வெவ்வேறு திசையில் பயணிக்க ஆரம்பிக்கின்றன. அவ்வாறு வெவ்வேறு திசையில் செல்லும் இந்தப் பயணம் ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குபின் ஒன்றை ஒன்று முற்றிலும் அறியாமல், ஒன்றாகத் தொடங்கிய அந்த பதிவுகள்கூட மாறி இரண்டும் இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகளாக அறியப்படுகிறது.

இந்த இரண்டுவிதமான வாழ்க்கைக் கோட்பாடுகள் இன்னும் சில படிகள் மேலே சென்று ஒன்றை ஒன்று அழிக்கவும் முற்படுகின்றன. இந்த வினைகள், எத்தனையோ ஆண்டாண்டு காலமாக சுழற்சி முறைகளில் மாறி மாறி மனித வரலாற்றில் அறியப்பட்டு வந்தாலும் மனிதனின் அனுபவத்தேடலுக்கே உரிய விசித்திர குணாதியசத்தால் இது மீண்டும் மீண்டும் சுழற்சி முறையில் மாறி மாறி நடந்து கொண்டே வருகிறது.

இவ்வாறு பொருள் தேடலும், ஆன்மீகத் தேடலும் முற்றிலுமாக ஒன்றை ஒன்று அறியாமல் ஒன்றை ஒன்று அழிக்க முயற்சித்த அந்த கால கட்டத்தில்தான் ஆப்ரஹாம் அவர்கள் இறைவனின் தூதராக தோன்றுகிறார். இரு தேடல்களின் ஆரம்ப விழுதுகளைத் தேடி அதைப் புதுப்பிக்கின்றார். உலகின் ஆன்மீகத் தேடலுக்கான ஒருமித்த அந்த இலக்கை உலகிற்கு மீண்டும் அறிமுகப்படுத்துகிறார். இவை யாவும் அவர் முன் கூட்டியே அறிந்து அல்லது தானாக திட்டமிட்டு செய்தாரா? நிச்சயமாக இல்லை. இறைவனின், படைத்தவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

ஆப்ரஹாமின் இந்த மாபெரும் ஆன்மீக புரட்சிக்கு அவருக்கு தேவைப்பட்டது 'தேடல்' என்ற 'புலம் பெயருதல்'. அதில் அவருக்கு உதவியாக அவரது மனைவியர்களான சாரவும், ஹாஜிராவும் மற்றும் லூத்தும் இருந்தார்கள். இந்த காலத்தில் இருப்பது போல் நவீன தகவல் தொடர்போ அல்லது செய்திகளை பரிமாறிக் கொள்ளவோ எந்தவித வாய்ப்பும் இல்லாத கிட்டத்தட்ட 5000 வருடத்திற்கு மேற்பட்ட கால கட்டத்தில் லூத்தும் ஆப்ரஹாமும் தனித்தனியே இறைவனின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு வெவ்வேறு நாடுகளில் தங்களது இறைப்பணியை செய்து வந்தனர். பிற்காலத்தில் அவர்கள் ஒருவரை எப்போது சந்தித்தனர் அல்லது இல்லையா என்ற விபரங்கள் வரலாறுகளில் தெளிவாக இல்லை.

ஆப்ரஹாமின் புலம் பெயருதல் ஒரு புதிய தியாகத்தை செய்யவேண்டிய நிர்பந்தத்திற்கு அவரை உள்ளாக்கியது.

ஹாஜிரா.. கருத்தரிந்து ஒரு ஆண்மகவை ஈன்றெடுத்தார். ஆப்ரஹாமிற்கு முதல் வாரிசு இந்த உலகில் உருவானது. ஆண்மகவிற்கு இஸ்மாயில் (இஷ்மாயில்) என்று பெயர் சூட்டப்பட்டது. அப்போது ஆப்ரஹாமிற்கு சுமாராக 86 வயது என்று மதிப்பிடப்படுகிறது. இந்த இஸ்மாயிலின் வம்சம்தான் பிற்காலத்தின் அரபு குலமாக அரேபிய தேசம் என்ற பெயர் தாங்கி மத்திய கிழக்குப் பகுதியில் அறியப்படுகிறது.

இஸ்மாயிலின் பிறப்பு ஏற்கனவே புகைச்சலில் இருந்த சாரா - ஹாஜிரா உறவில் இன்னும் விரிசல்களை அதிகமாக்கியது. தினம் தினம் இவ்விருவரின் பிரச்சனைகள் அதிகமாக ஆப்ரஹாமிற்கு இது ஒரு கவலைக்குரிய விஷயமாகிப்போனது. ஆப்ரஹாம் வணங்கியும் வாழ்ந்தும் வந்த ஜெருசலத்தின் இறை ஆலயத்தில் அவருடைய வாழ்க்கைக்கு எதிர்காலத்திற்கு வழி தேட முற்பட்டார். சாரா ஹாஜிராவின் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி தேடலானர். இந்நிலையில் ஆப்ரஹாமிற்கு இறைவன் மீண்டும் ஒரு நற்செய்தி வழங்குகின்றான். சாராவிற்கு ஒரு குழந்தையை அளிப்பதாக வாக்களிக்கின்றான். அந்த குழந்தைக்கு இஸ்ஹாக் (ஐசக்) என்று பெயரிடுமாறு நற்செய்தி அளிக்கின்றான்.

இச்சூழலில் இஸ்மாயிலின் வளர்ப்பும் வாழ்க்கையும் தந்தையின் அரவனைப்பில் சிறப்பாக இருந்தது. ஆனால் ஆப்ரஹாமின் வாழ்க்கையில் ஒருப் பெரிய திருப்பத்திற்கான காரணமாக அமைந்தது குழந்தை இஸ்மாயிலின் வாழ்க்கை. சாரா உடலாலும், மனதாலும் பெரும் நோய்க்குள்ளானார். ஹாஜிராவை தனது இல்லத்திலிருந்து மட்டுமல்லாமல் ஆப்ரஹாமின் வாழ்க்கையிலிருந்தே அகற்ற விரும்பினார். தனக்கு இரண்டாவது மகன் பிறக்க இருக்கும் மகிழ்ச்சியில் ஆப்ரஹாம் இருந்தாலும், தனது மூத்த மகன் பெற்றிருந்த உன்னத நிலையை இழந்துவிடுவானோ என்று அஞ்சினார்.

ஒரு நாள் சாரா ஹாஜிரா பிரச்சனை உச்சத்தை எட்டவே.. சாரா ஆப்ரஹாமிடம் ஹாஜிராவையும், இஸ்மாயிலையும் இந்த வீட்டை விட்டு மல்லாமல் இந்த நாட்டைவிட்டே தூரமாக்க வேண்டும் என்ற அழுத்தமான கோரிக்கை வைக்கவே, ஆப்ரஹாம் மிகப்பெரும் கவலைக்குள்ளானர். சாராவிடமிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவும் மற்றும் ஆரம்பகால கஷ்டங்களில் சாராவின் ஒத்துழைப்பு மற்றும் பங்கை நினைக்கும்போது ஆப்ரஹாமல் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கினார்.

மிக நீண்ட ஆலோசனைக்கும், பிரார்த்தனைக்குப் பிறகு தனது இரண்டாவது மனைவி ஹாஜிராவையும் அன்பிற்கினிய பாலகன், குழந்தை இஸ்மாயிலையும் அழைத்துக் கொண்டு கன் ஆனிலிருந்து (பாலஸ்தீனிலிருந்து) அறியப்படாத ஒரு இடத்தை நோக்கி பயணப்பட்டார்.

இது நாள்வரை தானும் தனது மனைவியருமாக நடத்தி வந்த புலம் பெயருதல் இப்போது தனது இரண்டாவது மனைவி ஹாஜிரா மற்றும் அன்பு மகன் இஸ்மாயிலுக்காக அவர்களை எங்காவது சாராவின் தொடர்பில்லாத ஒரு இடத்தில் விட்டுவிடுவதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு கனத்த மனதுடன் பயணம் தொடர்ந்தார்.

பெரும் தியாகத்தின் அடித்தளம் ஒன்று எழுப்பப்பட்டது.

(தொடரும்)

Sunday, July 03, 2005

வரலாற்றில் சில ஏடுகள் - 4

யூத குலத்தின் தொடக்கம் - ஆப்ரஹாமின் பயணம்

ஆப்ரஹாமின் ஆரம்பகால வரலாற்றில் அவரும் அவருடைய சகோதரனின் மகன் லூத்தும் மற்றும் ஆப்ரஹாமின் மனைவி சாரவைத் தவிர்த்து ஏக இறைவனை மட்டும் வணங்குபவர்களாக வேறு யாரும் இருக்கவில்லை என்றே அறியப்படுகிறது. அக்காலச் சூழலில் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதில் சந்தேகமேயில்லை. மனிதர்களை மனிதர்களே சித்திரவதை செய்து கொன்று முடிப்பதில் அவர்களுக்கு ஒரு பெரும் காரியமாக அது இருந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குக்கூட இந்த நிலையை காண்கிறோம். சிறிய பெரிய பிரச்சனைகளுக்கெல்லாம் ஒருவரை ஒருவர் கொல்வதென்பது சாதாரண காரியம். அந்த வகையிலே ஆப்ரஹாம், அவரது மனைவி மற்றும் லூத் அவர்களின் வாழ்க்கை பாபிலோனாவின், நம்ரூத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நிலத்தில் ஒரு மிகப் பெரும் பிரச்சனையாகவே இருந்தது. நம்ரூத் ஆப்ரஹாமுடன் செய்த வாததத்தில் தோல்வியடைந்ததிலிருந்து அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் கிடைத்துவந்த மாதாந்திர உணவுப் பொருட்களை நிறுத்திவிட்டதாக ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

தேரா இனிமேல் பாபிலோனா நாட்டில் வாழ்வதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தவராக தனது மகன் ஆப்ரஹாம், லூத், ஆப்ரஹாமின் மனைவி சாரவுடன் அந்த நிலத்தைவிட்டு குடி பெயர்ந்து சிரியாவை நோக்கி புறப்பட்டதாக மற்றொரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது. ஆனால் அவர்களுடைய நோக்கம் கன்ஆன் (பாலஸ்தீன தேசம்) என்ற இடத்திற்கு எப்படியாவது சென்றுவிடவேண்டும் என்று விரும்பினார்கள்.

அவர்கள் போகும் வழியில் ஹரன் என்னும் இடத்தில் சில காலம் தங்கியிருந்தார்கள். அவ்வாறு தங்கியிருக்கும்போது ஆப்ரஹாமின் தந்தை தேரா தனது 250ம் வருடத்தில் மரணம் எய்தினார். ஆனால் ஆதியாகாமத்தில் தேரா இறக்கும்போது அவரது வயத்ய் 205 வருடங்கள் என்று சொல்கிறது. சிறிது காலத்தில் லூத் ஆப்ரஹாமின் வேண்டுகோளிற்கு இணங்க ஜோர்டனைச் சேர்ந்த சோடோம் என்ற நகரத்திற்கு பிரிந்து சென்றுவிடுகிறார். அந்நகரத்தில் மக்களை ஓரிறைவன் பக்கம் அழைக்க லூத் தனது தூதுத்துவப் பணிக்கு அனுப்பபடுகிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரா மட்டும் தனித்து சிரியாவிற்கு உட்பட்ட டமாஸ்கஸ் என்னும் நகரத்தில் சில ஆண்டுகள் வசித்ததாக வரலாறு சொல்கிறது.

டமாஸ்கஸ் நகரத்தில் வாழ்ந்த மக்கள் வடதுருவத்தில் தோன்றும் ஏழு நட்சத்திரங்களை வணங்கி வாழக் கூடிய மக்களாக இருந்தார்கள். இன்றைக்குக் கூட டமாஸ்கஸ் நகரத்தில் இருக்கக்கூடிய புராதான அரண்மனைக் கட்டிடங்களில் உள்ள வாசல்கள் ஏழுகளாகவும் அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயரால் நிர்மானிக்கப்பட்டதாக இருப்பதையும் காணலாம்.

ஹாகர் எனும் ஹாஜிரா

ஆப்ரஹாமின் இந்த நீண்ட பயணத்தில், நாடோடி வாழ்க்கையில் சிரியாவை கடந்து போகும் வழியில் ஒரு கொடூர அரசன் ஆட்சி செய்யும் இடத்தை (எகிப்து) கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்போது அந்நகரத்து மக்களில் ஒருசிலர் அம்மன்னனிடம் ஆப்ரஹாம் என்ற ஒரு நாடோடி இந்த நாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவருடன் ஓர் அழகான மங்கை இருப்பதாகவும் சொல்ல அம்மன்னன் ஆப்ரஹாமை தன்னிடம் அழைத்துவர ஆணையிடுகிறான்.

ஆப்ரஹாமை அழைத்து அவருடன் வந்த அந்தப் பெண் யார் என்று கேட்க ஆப்ரஹாம் சாரவை தனது மனைவி என்பதை மறைத்து சாராவை தனது சகோதரி என்று அறிவித்துவிடுகிறார். காரணம் அம்மன்னனிடமிருந்து சாராவிற்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம், அல்லது சாரவை அவனுடன் உடலுறவு கொள்ளக் கேட்கலாம் என்ற காரணத்தினால் சாராவை தனது சகோதரி என்று சொல்லிவிடுகிறார். (1)

அக்காலச் சூழலில் மனைவி என்பவளுக்கான சமூக உரிமைகள் எப்படியிருந்தன், அம்மனைவியர்களை பிறருடன் உடலுறவு கொள்ள அனுமதிப்பதிலும் அல்லது அனுமதிக்க நிர்பந்திக்கப்படுவதிலும் உள்ள பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் என்னென்ன என்று சரியாகத் தெரியாதால் ஆப்ரஹாமின் இந்த 'சகோதரி' என்ற கூற்றிற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒருவனின் சகோதரி என்பவளை அவளுடைய அனுமதியுடன் அல்லது அவளது தகப்பன், சகோதரன் அல்லது அவளது பொருப்பாளிகளின் அனுமதி பெற்றுதான் உறவு வைத்துக் கொள்ளவேண்டுமா என்பதும் தெரியவில்லை. பொதுவாகவே வரலாறுகளில் அக்கால கலாச்சாரங்களைப் பார்க்கும்போது உடலுறவு மற்றும் வீட்டு வேலைகளுக்கு அல்லாமல் பெண்களுக்கு வேறு எந்த வேலைகளும் இல்லை. ஆண்களை மகிழ்வூட்டவே பெண்கள் பிறந்திருக்கிறார்கள் என்பதில் அக்கால மக்களுக்கிடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாத அளவிற்கு பெண் வர்க்கங்களை அதற்கு மட்டுமே மதிப்பளித்தும் பயன்படுத்தியும் வந்துள்ளார்கள்.

அந்த மன்னன் சாராவை தன்னிடம் ஓரிரவு தங்குமாறு அனுப்பிவைக்க ஆப்ரஹாமிற்கு கட்டளையிடுகிறான். ஆப்ரஹாம் திரும்பி வந்து சாராவிடம் விஷயத்தைச் சொல்லி, 'சாரா, இந்த இடத்தில் உன்னையும் என்னையும் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையாளரும் இல்லை. இந்த கொடுங்கோல் மன்னனிடம் உன்னை என் சகோதரி என்று சொல்லி வந்திருக்கிறேன். அவன் உன்னை ஓரிரவு அவனுடன் தங்குமாறு அழைக்கிறான். இறைவன் நமக்குத் துணையிருப்பான்' இறைவனை வணங்கிக் கொண்டிரு, நானும் நீ திரும்பி வரும் வரை வணக்கத்திலேயே இருப்பேன். என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இப்படிப்பட்ட சூழல் நாம் படிப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ சாதாரணமாகத் தெரியலாம் அல்லது அதற்காக ஓரளவு வருத்தப்படலாம். நாடோடியாக நாடு விட்டு நாடு சென்று கொண்டிருக்கும் ஒரு கணவன் மனைவிக்கு, அவர்கள் இருவரைத் தவிர்த்து அவர்களுக்கு எந்த ஆதரவோ அல்லது பாதுகாப்போ இல்லாத நிலையில் இப்படிப்பட்ட கொடுமையான நிலைகளில் அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது படைத்த அந்த இறைவனைத் தவிர்த்து வேறு யார் இருக்க முடியும். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் வெறும் பிரார்த்தனைகளும் இறைவன் மீது வைக்கக் கூடிய அதீதமான நம்பிக்கையுமே. இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்கள் எல்லோருக்குமே இப்படிப்பட்ட துயரமான சோதனைகளும் துன்பங்களும் குறைவில்லாமலே நிகழ்ந்து வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட சோதனைகளும், துன்பங்களும் அவர்களது நம்பிக்கையை அதிகமாக்கவே செய்திருக்கின்றன என்றாலும் அதிலிருந்து அவர்கள் வாழ்க்கையை அறிபவர்களுக்கு அது ஒரு பாடமாகவும் இருக்கின்றது.

அரண்மனையில் அன்றிரவு அம்மன்னன் சாராவுடன் தவறாக நடக்க முயற்சிக்கும்போதெல்லாம் சாரா ஒலுச் செய்துகொண்டு (2) இறை வணக்கத்தில் ஈடுபட்டுவிட அப்போதெல்லாம் அம்மன்னன் அருகில் இருந்த தண்ணீர் தடத்தில் விழுந்து மூழ்கும் நிலை அடைகிறான். அப்போது அம்மன்னன் சாராவிடம் என்னைக் காப்பாற்று என்று முறையிட சாரா இறைவனிடம் பிரார்த்திக்கிறார். அம்மன்னனும் நீரிலிருந்து தப்பிக்கின்றான்.(3) இந்நிகழ்ச்சி தொடர்ந்து இரண்டு மூன்று முறை நடைபெறுகிறது. அவன் சாராவை நெருங்கும் பொதெல்லாம் சாரா பிரார்த்திப்பதும் அவனை யாரோ பிடித்து தண்ணீரில் எறிந்து அவன் உயிருக்காகப் போராடுவதுமான நிலை தொடர்கிறது.

இறுதியாக அம்மன்னன் தனது காவலாளை அழைத்து 'நீ இங்கே அழைத்து வந்தது அழகிய மங்கையை அல்ல.. ஒரு சாத்தனை.. இவளை இங்கிருந்து திருப்பி அனுப்பிவிடு.. அப்படியே அவளுக்கு என்னிடமிருந்து ஒரு அடிமைப் பெண்ணையும் அவளுடன் அனுப்பிவிடு' என்று ஆணையிட சாரா அங்கிருந்து வெளியேறிவிடுகிறார். அவருடன் அனுப்பிவைக்கப்பட்ட அந்த அடிமைப் பெண்தான் ஹாகர் என்கிற ஹாஜிரா.

சாராவின் பிரார்த்தனையின் போதெல்லாம் அம்மன்னனை யாரோ பிடித்து இழுப்பது போல நிகழவே அம்மன்னன் சாராவை நினைத்து மிகவும் பயந்து போயிருக்க வேண்டும். சாராவிடமிருந்து மீண்டும் அப்படி ஒரு நிலை தனக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக சாராவை சமாதானப்படுத்த வேண்டி அவருக்கு ஹாகரைப் பரிசுப் பொருளாக அனுப்பி வைத்திருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சாரா ஆப்ரஹாமுடைய இடத்தை அடையும்போது ஆப்ரஹாம் வணக்கத்திலிருந்தார். சாரா அங்கு நடந்ததைச் சொல்லி ஹாகரை அறிமுகப்படுத்துகிறார். ஹாகர் என்பவர் காப்டிக் இனத்தைச் சேர்ந்தப் பெண். பிற்காலத்தில் சாராவிற்கு மகபேறு பெருவதற்கான வாய்ப்பு இல்லை என்று சாரா ஹாகரை ஆப்ரஹாமிற்கு மனைவியாக்கிவிடுகிறார். இந்த ஹாகர் என்ற தனது இரண்டாவது மனைவி மூலமாகத்தான் ஆப்ரஹாமின் அரபு குல மக்கள் தோன்றுகின்றனர். (4)

ஆப்ரஹாம் எகிப்திலிருந்து திரும்பி சிரியாவை வந்தடைகிறார். அவருக்கு குழந்தைகள் பெறும் வாய்ப்பில்லாதவராக இருந்தார் என்று ஆதியாகாமம் அறிவிக்கிறது. அப்போது அவருக்கு இறைவனிடமிருந்து ஒரு நற்செய்தி கிடைக்கிறது.

'இறைவன் இந்த உலகை எனது பார்வைக்கு சுருக்கி வைத்தான். நான் கிழக்கிலும் மேற்கிலும் திரும்பிப் பார்த்தேன். என்னைப் பின்பற்றுபவர்கள், (எனது குலத்தினர்) இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்வார்கள்' (5)

'வானத்தை அண்ணந்து பாரும், அங்கிருக்கும் நட்சத்திரங்களை எண்ணுவதற்கு உம்மால் முடியுமாயின் எண்ணிக் கொள்ளும். இவ்வாறுதான் உமது சந்ததியும் பெருகியிருக்கும்' என்ற அசரீரி ஒலித்தது (6)

இதற்கிடையில் ஆப்ரஹாமின் செல்வாக்கும் அவரது ஏக இறைவனை மட்டுமே வணங்க அழைக்கும் பிரச்சாரமும் வலுவடைந்து ஆப்ரஹாமை பின்பற்றும் மக்கள் அதிமாகின்றனர். இச்சூழ்நிலையில் ஜோர்டான் நாட்டிற்கு உட்பட்ட நிலத்தில் ஏக இறைவன் வணங்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட லூத் அவர்களை அங்கிருந்த ஒருசில எதிர்ப்பாளர்கள் சிறைபிடித்து அவருடைய பொருட்களையும் அவரது கால்நடைகளையும் எடுத்துக் கொண்டதாக ஆப்ரஹாமிற்கு செய்தி கிடைக்கிறது.

ஆப்ரஹாம் தன்னுடன் 318 வீரர்களுடன் லூத்தை சிறைபிடித்தவர்களுடன் போரில் ஈடுபட்டு அவர்கள் அனைவரையும் தோற்கடித்து லூத்துடைய பொருட்களையும் கால்நடைகளையும் மீட்டு லூத்துடன் திரும்பி வருவதாக வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது (7). இந்தப் போரில் ஆப்ரஹாமிற்கு கிடைத்த வெற்றியின் மூலமாக பாலஸ்தீன் நாட்டின் மன்னன் ஆப்ரஹாமை வரவேற்பளித்து தனது நண்பராக்கிக் கொண்டதாக வரலாற்றின் மூலம் அறியப்படுகிறது. (8)

ஆப்ரஹாம் பாலஸ்தீன் நிலத்தில் ஏறக்குறைய இருபது வருடங்கள் வாழ்கிறார். ஆப்ரஹாமும் அவரது மனைவி சாரவும் கிட்டத்தட்ட 90 வயதை அடைகின்றனர். அவர்களுக்கு வாரிசாக குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை. எங்கே தனது கணவருக்கு சந்ததியில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சிய சாரா ஆப்ரஹாமை நிர்பந்தித்து ஹாகரை மனமுடித்துக் கொள்ளச் செய்கிறார். ஆப்ரஹாம் ஹாகரை தனது இரண்டாவது மனைவியாக்கிக் கொள்கிறார்.

ஹாகர் ஆப்ரஹாமிற்கு மனைவியானவுடன் இருவருக்கும் பிள்ளைபேறுக்கான வாய்ப்பு உருவாகிறது. இதன் மூலம் ஹாகருக்கான முக்கியத்தும் ஆப்ரஹாமிடம் அதிகரிக்கவே சாரா சஞ்சலம் அடைகிறார். சாராவிற்கும் ஹாகருக்கும் இடையில் சிறு சிறு பிரச்சனைகள் பெரிதாகி அவர்களுக்கு மத்தியில் எப்போதும் நிம்மதியில்லாத சூழல் உருவாகிறது. சாரா ஆப்ரஹாமுடன் இப்பிரச்சனைக்கான தீர்வை விவாதிக்க ஆப்ரஹாம் இறுதியாக சாராவிடம் 'ஹாகரை நீ என்ன வேண்டுமானலும் செய்துகொள்' என்று சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறார். இதையறிந்த ஹாகர் சாரா தன்னை கொலை செய்யக்கூடும் என்று அஞ்சி பாலைவனத்தில் ஓடி மறைந்துக் கொள்கிறார்.

அங்கே ஹாகருக்கு ஒரு நற்செய்தி கிடைக்கிறது.

'பயப்படாதே... இறைவன் உனக்கு நல்லதை நாடியுள்ளான். அதன் மூலம் உனக்கு ஒரு ஆண்மகவு கிடைக்கும். அவன் ஒரு சக்தி நிறைந்த (காட்டு விலங்கைப் போன்ற) மனிதனாக இருப்பார். அவருடைய ஆளுமையினால் ஒவ்வொரு மனிதரையும் தனக்குக் கீழ் கொண்டு வருவார். அவரது சகோதரர்களின் பூமி அனைத்தும் அவருக்கு கீழ் வரும் ஹாகர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தவராக இருந்தார்'. (9)

'நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். ஒரு குமாரனைப் பெறுவாய். உன் குமாரனுக்கு இஸ்மாயீல் என்று பெயரிடுவாயாக (10)

இறைவனிடமிருந்த கிடைத்த இந்த நற்செய்தியின் மூலம் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்தவராக ஹாகர் திரும்பவும் தனது இருப்பிடத்திற்கு வந்தடைகிறார். தனக்குக் கிடைத்த அந்த நற்செய்தியை ஆப்ரஹாமிற்கும் சாராவிற்கும் ஹாகர் அறிவிக்கின்றார்.

(தொடரும்)

1, 2, 3 & 4. புகாரி நூல் (ஹ்தீஸ் அபூ ஹுரைரா)

5. திர்மிதி ஹதீஸ் நூல்

6. ஆதியாகாமம் (15:5)

7 & 8. Exgetes (Stories of the Prophet - Ibn Kathir)

9 & 10 பைபிள் - ஜெனிசிஸ் (16:10 - 11)

அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

மகன்: அப்பா பயங்கரவாதி என்றால் யார்?

தந்தை: மகனே! தனது அரசியல் வெற்றிக்காகவும் லாபத்திற்காவும் யார் மக்களை பமுறுத்தி, மிரட்டி, இன்னும் வன்முறையை பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குப் பெயர்தான் பயங்கரவாதி. அப்படித்தான் ஆக்ஸ்போர்டு டிக்ஷனிரியில் சொல்லப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லடா ராஜா... இந்த பயங்கரவாதிகளெல்லாம் நம்மள மாதிரி சாதாரண மனிதர்களை கொல்வதற்குக் கூட தயங்க மாட்டாங்க, ரொம்ப கொடூரமான ஆளுங்க!

மகன்: அவங்க ஏன் அப்படிக் கொலை செய்யறாங்க?

தந்தை: ஏன்னா அவங்களுக்கு நம்மை மாதிரி ஆளுங்க மேலயும் நம்ம நாட்டு மேலயும் அப்படி ஒரு மோசமான வெறுப்பு. இத விளக்கமா சொல்றது கொஞ்சம் கஷ்டம். அவர்களுடைய சிந்தனையே அப்படித்தான். நாம வாழற இந்த உலகத்துல எத்தனையோ பல காரணங்களால இப்படி வெறுப்புன்றது நிறைய புரையோடிக் கிடக்குது.

மகன்: ஈராக்குல நடக்குறமாதிரிதானே அப்பா? அப்பாவி மனிதர்களை பிடிச்சு வைச்சுக்கிட்டு அங்கிருக்கிற எல்லா அமேரிக்கா படைகளும் வெளியேறனும் இல்லன்னா இந்த அப்பாவி மக்களை கொலை செய்வோம்னு மிரட்டறாங்களே!

தந்தை: அதான்.. சரியா புரிஞ்சுக்கிட்ட, இதுக்கு பேருதான் 'ஈவில் ஒர்க்' அப்படீங்கிறது. அது மட்டுமா கண்ணா, பிளாக்மெயில் வேற... வெளியேறனும் இல்லண்ணா எல்லா பிணைக்கைதிகளையும் கொல்லுவோம்னு தினம் தினம் பிளாக் மெயில் செய்யறாங்க!

மகன்: அப்படியா!.. அப்பா!.. ஈராக்குல இருக்கிற அந்த WMD எங்கன்னு சதாம் ஹுசைன் சொல்லலன்னா அவங்க நாட்டு மேல படையெடுப்போம் அப்பாவி மக்களை குண்டு போட்டு கொல்லுவோம்னு சொன்னமே அதுவும் பிளாக்மெயில்தான?

தந்தை: இல்ல இல்ல...அது... ஆமாம்... அப்படி இல்ல... இதுக்கு பேரு ultimatum... அதாவது... நல்ல பிளாக்மெயில்.

மகன்: நல்ல பிளாக்மெயில்?.. அது என்னப்பா பிளாக்மெயில்லயே நல்லது கெட்டதுன்னு?

தந்தை: அதாவது ராஜா.. நல்ல காரியத்துக்கு அப்படி செஞ்ச அதுக்கு பேரு நல்ல பிளாக்மெயில்...உனக்குத் தெரியுமா மகனே.. அந்த WMD இருக்கே அது ரொம்ப மோசமான ஆயுதம்.. அது இந்த உலகத்தையே அழிச்சிடும். அதை ஈரக்குல உடனே கண்டுபிடிச்சி அதை அழிச்சாதான் நாம நிம்மதியா உயிர்வாழ முடியும். அது மிக மிக முக்கியம் தெரியுமா!

மகன்: அப்பா! அப்படி ஒன்னும் அங்க இல்லயே. ஈராக்குல இதுவரைக்கும் அப்படி ஒன்னயும் நமது படைகள் கண்டுபிடிக்கலயே!

தந்தை: சரிதான்.. அது நமக்கு இப்பத்தான தெரிஞ்சது.. முன்னால நமக்குத் தெரியல..நாம நினைச்சோம் அது அங்கதான் இருக்குன்னு

மகன்: அப்படின்னா.. இவ்வளவு நாளா அங்க நமது படைகள் தாக்கி செத்துப்போன அத்தனை பேரும் அப்பாவிங்கதான? இது தப்பில்லையா அப்பா?

தந்தை: இல்ல மகனே! அது ஒரு சோகமான நிகழ்வு... இங்க பாரு.. நமது படைகள் அங்க போனதுனால நாம நிறைய அப்பாவிகளை காப்பாத்தி இருக்கோம். சதாம் ஹுசைன் ஒரு கொடூரமான ஆட்சியாளன். அவன் நிறைய அப்பாவி ஈராக்கிகளை கொலை செய்திருக்கான். அவன் ஆட்சியில இருக்கும்னுங்கறதுக்காக நிறைய பேர சித்திரவதையும் கொலையும் செஞ்சிருக்கான். அவனது கொடுமைகளுக்கு நிறைய ஆண்கள், பெண்கள் இன்னும் குழந்தைங்கக் கூட பலியாயிருக்காங்க.

மகன்: நம்மக்கூட டீவியில பாத்தமே.. ஒரு பையனோட கை கால் தனியா போய் கீழக் கிடந்தானே. அப்படித்தானே?

தந்தை: ஆமாமாம்..அந்த மாதிரித்தான்.

மகன்: ஆனா அது நம்ம படைகள்தானே ஏவுகனை வீசி அப்படிச் செஞ்சது. அப்படீன்னா.. நம்ம தலைவர்களும் பயங்கரவாதிங்களா?

தந்தை: கடவுளே... உனக்கு இப்படியெல்லாம் சொன்னது யார். உனக்கு எங்கேயிருந்து இப்படி அயிடியா கிடைச்சது. அது ஒரு விபத்து.. போர்ல இப்படித்தான் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவாங்க. ஒரு நகரத்துல வெடிகுண்டுகள் வீசும்போதும், ஏவுகனைகள் வீசும்போதும் இப்படித்தான் நடந்து போகும்.. அத எப்படி தடுக்க முடியும்.. போர்னா இப்படித்தான். யார் என்ன செய்ய முடியும்

மகன்: சரிப்பா... போர்னா.. போர் வீரர்கள் மட்டும்தனே கொல்லப்படுவாங்க?

தந்தை: ஹம்ம்ம்...வீரர்களுக்கு பயிற்சிக் கொடுக்கப்பட்டுள்ளது. அவங்கல்லாம் துணிச்சல் நிறைஞ்சவங்க.. அவங்களுக்குத் தெரியும் போர்னா கொல்லப்படுவோம்னு... எப்ப அவங்க யூனிபார்ம் போட்டு போருக்குப் போறாங்களோ அப்பவே அவங்கள எதிரிப்படைகள் குறி வைச்சுடுவாங்க.

மகன்: பயங்கரவாதிங்கல்லாம் என்ன யூனிபார்ம் போடுவாங்கப்பா?

தந்தை: அதுதாண்ட மகனே பிரச்சனையே.... அவங்க உடை சாதாரண மனிதர்கள் போடறமாதிரிதான் இருக்கு. இதுல பயங்கரவாதி யாரு.. அப்பாவி யாருன்னு கண்டுபிடிக்கறது ரொம்ப கஷ்டம். அதனாலதான் நிறைய அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க... அந்த பயங்கரவாதிங்க... போருக்குன்னு இருக்கிற சட்ட திட்டங்கள பின்பற்றுவதே கிடையாது.

மகன்: போருக்கு சட்டம், விதி அப்படீல்லாம் இருக்காப்பா?

தந்தை: கண்டிப்பா... போர் வீரர்களெல்லாம் யூனிபார்ம் போடனும்.. நீயா திடீர்னு யாரையும் அட்டாக் பண்ணக் கூடாது, உன்னை யாராவது அட்டாக் பண்ணின.. நீ உன்னையும் நாட்டயும் காப்பத்தனும்.

மகன்: அப்படீன்னா.. ஈராக்தான் முதல நம்பள தாக்குனதா? நாம நம்ம நாட்டை பாதுகாக்கத்தான் சண்டை போடறமா?

தந்தை: ச்ச்ச்ச்...அப்படி இல்ல.. ஈராக் நம்பள தாக்குல.. ஆனால் அது நம்மள தாக்கக்கூடும்.. அதனாலதான் முன்னேற்பாட நாம ஈராக் மேல படையெடுத்தோம். ஏன்னா அதுக்குட்ட WMD இருக்கு.

மகன்: அதான் அவங்ககிட்ட அந்த WMD இல்லயே.. நாமதான் போருக்கான விதி முறைகளை மீறிட்டோம்.

தந்தை: சட்டப்படி பார்த்தா அப்படித்தான்.. ஆனால்

மகன்: நாம அந்த சட்டங்கள மீறினா.. ஏன் அந்த ஈராக்கிங்க... யூனிபார்ம் போடாத அவங்க மட்டும் சட்டத்தை மீறக்கூடாது?

தந்தை: ம்ம்ம்... அது சரிதான்... ஆனால் நாம நல்லதுக்குத்தானே அப்படி செய்யுறோம். அதனாலதானே சட்டதை நாம உடைச்சோம்.

மகன்: சரி அப்பா.. நாம் நல்லதுதான் செய்றோம்னு நமக்கு எப்படி தெரியும்.

தந்தை: நம்ம தலைவர்கள் சொல்றாங்கல.. புஷ், பிளயர்.. ஹோவர்டு.. அவங்களுக்குத் தெரியலன.. வேற யாருக்குத் தெரியும். அவங்கதான் சொன்னாங்க ஈராக்குல ஏதாவது செய்யலன்னா.. அது ஒரு மோசமான நாடா போயிடும்னு. அத ஒரு நல்ல நாடா மாத்தனும்னுதான் இத செஞ்சாங்க.

மகன்: ஈராக் இப்போ ஒரு நல்ல நாடா ஆயிடுச்சா?

தந்தை: நான் அப்படித்தான் விரும்புறேன். ஆனால்,, சரியா தெரியல. அங்க தினம் தினம் அப்பாவி மக்கள் கொல்லப்படுறாங்க.. மக்கள் பினைக்கதிகளா கடத்தப்படறாங்க..அந்த பினைக்கைதிகளோட குடும்பங்கள நினைச்சு நான் ரொம்ப வருத்தப்படுறேன். ஆனால்.. அதுக்காக அந்த பயங்கரவாதிங்களுக்கு நாம பனிஞ்சுப் போயிடக்கூடாது. அவர்களை நாம் எதுத்தாகனும்.

மகன்: சரிப்பா... என்னை ஏதாவது ஒரு பயங்கரவாதி அப்படி கடத்திக்கிட்டு போயிட்டா.. நீங்க இப்படி பேசுவீங்களா? அவங்கள சும்மா விடக்கூடாதுன்னு சொல்லுவீங்களா?

தந்தை: ஓ... காட்... என்னட இப்படியெல்லாம் பேசுறா... இல்லா... ஆமாம்... அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?

மகன்: அப்படீன்னா... அந்த பயங்கரவாதிங்க.. என்ன கொலை செய்ய விட்டிடுவீங்களா.. என் மேல உங்களுக்கு அன்பு பாசமெல்லாம் கிடையாதா?

தந்தை: என்ன இப்படி சொல்றடா... உன்னை நேசிக்காம நான் யார நேசிப்பேன். அப்படி நடந்தா அது எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? இது ரொம்ப சிக்கலான கேள்விடா கண்ணா.. நான் என்ன முடிவு எடுப்பேன்னே தெரியல.

மகன்: அப்பா.. யாராவது நம்மள தாக்கி நம்ம வீட்டுமேல பாம் போட்டு உங்களயும், ஜேமியையும், அம்மாவையும் கொலை செஞ்சா நான் என்ன செய்வேன் தெரியுமா?

தந்தை: என்ன செய்வ?

மகன்: இதை செஞ்சவன் யாருன்னு கண்டுபிடிச்சி... அவன கொல்லாம விடமாட்டேன். என்ன ஆனாலும் சரி...ஒரு ஜெட்டுல ஏறி...அந்த நாட்டுமேல படையெடுத்து.. அந்த நகரத்துமேல குண்டு போட்டு எல்லாரையும் கொன்னுபுடுவேன்.

தந்தை: ஆனால்.. நீ நிறைய அப்பாவி மக்கள கொன்னுபுடுவியே

மகன்: எனக்குத் தெரியும்...ஆனால்.. போர்னா... அப்படிதாம்பா.. என்ன செய்யுறது.

Written by: David Campbell.. Melbourne. April 23, 2004
David Campbell is an Australian journalist