Sunday, April 24, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் (முடிவு)

இஸ்ரேலின் இந்த proxy war இன்று நேற்று தொடங்கியதல்ல. ஆனால் அதற்காக அவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளும், காரணங்களும் தான் அவ்வப்போது மாறுபடுகின்றது. அப்படி ஒரு கருவியாக, இஸ்ரேலின் கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பாக தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நாடுதான் இந்த அமேரிக்கா என்ற ஒரு வல்லரசு.

இஸ்ரேலுக்கும் அமேரிக்காவிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பை, உறவை புரிந்துக் கொண்டால் அமேரிக்கா எப்படி ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மையை புரிந்துக் கொள்ளமுடியும். 1800 களில் இஸ்ரேலியர்கள் தனக்கென்று ஒருநாட்டை நிர்மானிக்க வேண்டி ஒரு மாபெரும் திட்டத்தை உருவாக்கினார்கள் அந்த திட்டம் ஒரு நாட்டை மட்டும் உருவாக்கக் கூடிய திட்டமாக இல்லாமல் 'ஜையோனிசயம்' என்ற ஒரு கொள்கையைத் தூசித்தட்டி எடுத்து அதற்கென்று புதிய கோட்பாடுகளை உருவாக்கி அதற்கு ஆதரவு தேடினார்கள். அவர்களின் இன்றைய இஸ்ரேல் நாளை இல்லாமல் போனாலும் இந்த 'ஜையோனிசயம்' என்ற இந்த தாத்பரிய கோட்பாடுகள் நிலை நிற்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இப்படி ஒர் கொள்கையை உருவாக்கினார்கள். அதற்கெதிராக யார் செயல்பட்டாலும், அப்படி செயல்படுவர்களை 'Anti Semitic' என்று அழைத்து, குற்றம் சுமத்தி தன்னை ஒரு பரிதாபமான கூட்டமாக, பாதிக்கப்பட்ட கூட்டமாக காட்டிக் கொண்டு வருகிறது. (இஸ்ரேலின் வரலாற்றை பிறகு பார்க்கலாம்).

இன்றைக்கு அமேரிக்காவின் முஸ்லீம் நாடுகளுக்கு குறிப்பாக அரபு நாடுகளுக்கு எதிரான இந்த நிலைக்கு காரணங்கள் என்ன என்பதை எனது முந்தைய பதிவுகளில் தெளிவாக எழுதியிருந்தேன். (பார்க்க: அமேரிக்காவின் அரசியலும் முஸ்லீம்களும் - 4). அதற்கான அடிப்படை எங்கே உருவானது என்பதை இந்த பதிவிலே சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.

முதலாவது அடிப்படைத் திட்டம் பால் வோல்பிட்ச் (தற்போதைய உலக வங்கியின் தலைவர், மிகுந்த சர்ச்சைக்குள்ளானவர்) என்ற 'புதிய பழமைவாதிகள்' என்று அழைத்துக் கொள்வதில பெருமைப்படும் இந்த மனிதர் 1992ம் வருடத்தில் Defense Policy Guidance என்று ஒரு திட்டத்தை வரையறுத்து அதன் முதன்மை லட்சியமாக 'access to vital raw material, primarily Persian Gulf oil' என்று அதற்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தார். அதாவது பெர்சியன் கல்ப் எண்ணெய் வளத்தை கைப்பற்ற வெண்டியதன் அவசியத்தையும் அதற்கு ராணுவ நடவடிக்கைகள்தான் சிறந்த வழி என்றும் அறிவித்தார். அதற்கான வாசலாக ஈராக்கினுள் அமேரிக்காப் படைகளின் பிரவேசமும் மற்றும் அதனை அமேரிக்காவின் ஒரு முக்கியமாக, நிரந்தர ராணுவ தளமாக மாற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். (Reference: Mrs. Maggie Mitchell Salem, Special Assistant to Madeleine Albright and US Foreign Service Officer 1994 - 2000).

இரண்டாவது அடிப்படைத் திட்டம் ரிச்சர்ட் பெர்ல் மற்றும் டக்லஸ் பெய்த் (Richard Perle and Douglas Feith) என்ற இரு பெரும் 'புதிய பழமைவாதிகளால்' 1996ல் 'A Clean Break: A New Strategy for Securing the Realm' என்று உருவாக்கப்பட்ட கொள்கைத் திட்டம். இந்த திட்டம் இஸ்ரேலுக்காக, 1996ல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நேதன்யாஹ¥ என்ற ஜையோனிசத் தலைவனுக்காக அமேரிக்க எடுபிடிகளால் உருவாக்கப்பட்டது. (Richard Perle - former US Defense Policy Board Chair and Douglas Feith - former Under Secretary for Defense for Policy 2000 - 2005).

அமேரிக்காவின் வரிப்பணத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த இரு பெரும் அமேரிக்க தேசியவாதிகள் இஸ்ரேலுக்காக உழைக்கும், எடுபிடியாக இருக்கும் இப்படிப்பட இந்த செயலை வேறு எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. அல்லது அப்படியே நடந்தாலும் இப்படிப்பட்ட மனிதர்களை, எடுபிடிகளை அந்த நாட்டின் முக்கிய பதவிகளில் அமர்த்தவும் மாட்டார்கள். ஆனால் இது போன்ற நிலையையும் செயலையும் அமேரிக்கா போன்ற நாடுகளில்தான் பார்க்க முடியும், காரணம் அந்த அளவிற்கு அமேரிக்காவின் நிர்வாக அமைப்பினுள் இஸ்ரேலின் ஜையோனிசக் கொள்கைகளும் அவர்களது பணபலமும் ஊடுருவி இருப்பதனால்தான்.

Securing the source of vital raw material - அதாவது எரிபொருளான எண்ணெய் வளம் அடுத்து Securing the Realm - அதாவது கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால் புதிய நிலப்பரப்பு, இந்த இரண்டையும் முன்வைத்து நடத்தப்படுகின்ற இந்த அரசியல் மற்றும் ராணுவப் போராட்டத்தின் தற்போதைய பரிமானம்தான் இந்த தீவிரவாதம் மற்றும் ஜனநாயக நிர்மானிப்பு. இதை சாதிப்பதற்கு தடையாக இருப்பதுதான் இஸ்லாம் என்ற சமத்துவக் கொள்கைகள். அதிலும் இந்த இஸ்லாத்தை எங்கே நறுக்கினாலும் மீண்டும் துளிர்விட்டு வளர்வதும் அதற்கு காரணமாக இருக்கக்கூடிய நபிகள் நாயகம் என்ற மாபெரும் மனிதரின் வழிகாட்டுதல்களும் திருக் குர்ஆனும்.

அமேரிக்கா அடிக்கடி சொல்வதுபோல் pre-emptive action என்பது தீவிரவாதத்திற்கெதிராகவோ அல்லது அமேரிக்க பொருளாதார அமைப்புகளை நாசமாக்க முயற்சிக்கும் கூட்டங்களுக்கு எதிராக நடத்தக் கூடிய தாக்குதல்கள் மட்டுமல்ல, மாறாக வளர்ந்துவரும் இஸ்லாமிய கோட்பாடுகளும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால இழப்புகளையும் சரியாக கணித்தே இப்படி ஒர் கொள்கையை அமேரிக்காவும் இஸ்ரேலும் செயல்படுத்தி வருகிறது.

இஸ்ரேலும் அமேரிக்காவும் தன்னுடைய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தவும் சாதிக்கவும் எந்தவித பாதையையும் தேர்ந்தெடுக்கத் தயங்கமாட்டார்கள். தாயின் தலை மீது காலை வைத்தாவது தான் நினைத்ததை சாதிக்கும் குணமுடைய இந்த கூட்டணி, இஸ்லாத்தின் மீது தொடரும் தாக்குதல்கள் ஒன்றும் புதிதல்ல. அதற்கேற்றார்போல் அரேபிய ஆட்சியாளர்களின் பலவீனமும் அவர்களின் ஆட்சி முறையும் இந்தக் கூட்டணியின் வெற்றிக்கு காரணியாக அமைந்திருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இஸ்ரேலுக்கு நெருக்கடியாக இருந்த ஈராக்கை சின்னாபின்னமாக்கி அதன் முதுகெலும்பை முறித்து அந்த நாட்டை அமேரிக்காவின் கைக்குள் கொண்டுவந்ததின் மூலம் அமேரிக்காவின் பொருளாதார வளங்களுக்கும், அதன் அடிப்படையான பெட்ரோலுக்கும் ஒரு தீர்வு எடுத்ததோடு மட்டுமல்லாமல், ஈராக்கின் எண்ணெய் கிணறுகளை நேரடியாக இஸ்ரேலுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தியாகிவிட்டது. அதற்கான கட்டுமான பணிகளும் துவங்கிவிட்டன. ஈராக் இனி தன்னிச்சையாக செயல்பட குறைந்தது இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் ஆகலாம். அதுவல்லாமல் அமேரிக்காவுடன் முரண்டு பிடிக்கத் தொடங்கினால் அதனுடைய தற்போதைய கடன் சுமையான 110 பில்லியன் டாலரை (தற்போது அதை காலவாதி செய்வதாக அமேரிக்கா அறிவித்துள்ளது) அதன் தலைமேல் சுமத்தி உடனே கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தங்கள் ஆரம்பித்துவிடும். அதற்கேற்றார்போல் தற்போதைய ஈராக்கின் ஆட்சியாளர்கள் எல்லோருமே அமேரிக்காவின் கைக்கூலிகளாக தேர்ந்தெடுக்கப் பட்டாகிவிட்டது.

அடுத்த பிரச்சனை என்னவென்றால் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லும் எண்ணெய் குழாய்கள் சிரியாவைத் தாண்டித்தான் செல்ல வேண்டியிருப்பதால் சிரியாவின் முதுகெலும்பையும் முறித்தாக வேண்டும். அதானால்தான் தற்போது லெபானின் முன்னால் பிரதமர் ஹரீரி கொலையை முன்னிலைப்படுத்தி சிரியாவின் துருப்புகளை லெபானைவிட்டு வெளியேற்றும் வேலையும் நடந்து வருகிறது. இஸ்ரேலை ராணுவ பலம் கொண்டு சிரியாவினால் சமாளிக்க முடியாவிட்டாலும், லெபானனை கைக்குள் வைத்திருப்பதன் மூலம் சிரியா தனது அரசியல் எல்லையை அதிகப்படுத்தி வைத்திருந்தது. ஹிஸ்புல்லாவிற்கு எல்லாவிதாமான ஆதரவு தருவதன் மூலம் இஸ்ரேலின் பாலஸ்தீன பிரச்சனைக்கும் சிரியா ஒரு சவாலாக இருந்து வந்தது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கோலான் ஹைட்ஸ் என்ற மலைப்பகுதியிலிருந்துதான் இஸ்ரேல் நாட்டிற்கு தேவையான குடி தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிரியாவிற்கு இந்தப் பகுதி மிகவும் அவசியமான ஒன்று, ஏனென்றால் இந்த மலைப்பகுதி சிரியாவின் ராணுவ பாதுகாப்பிற்கு, குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சிரியாவின் ஆளுமையை குறைப்பதன் மூலம் இஸ்ரேல் - சிரியா பேச்சு வார்த்தைகளில் சிரியாவின் உயர்நிலையை குறைக்கமுடியும் என்று இஸ்ரேல் எதிர்பார்க்கிறது. அவ்வாறு செய்வதால் இஸ்ரேல் விரும்புகின்றவாறு சிரியாவுடனான பேச்சு வார்த்தையை அமைத்துக் கொள்ளமுடியும். விரைவில் அப்படி ஒர் நிலையும் ஏற்பட இருக்கிறது, அதில் இஸ்ரேல் கோலான் ஹைட்சை கொடுக்க சம்மதித்து சிரியாவின் வழியாக ஈராக்கின் எண்ணெயை கொண்டு செல்ல அனுமதி பெற காத்திருக்கிறது. தனது தண்ணீரின் தேவையை லெபனான் மூலமாக இஸ்ரேல் சமாளித்துக் கொள்வதற்கு வசதியாக லெபானனை சிரியாவின் பிடிக்குள்ளிருந்து விடுவித்தாகிவிட்டது. இவை அனைத்தும் அமேரிக்காவின் உதவியின்றி இஸ்ரேலுக்கு சாத்தியமில்லை.

கடைசியாக இஸ்ரேலுக்கு பிரச்சனையாக இருக்கக் கூடிய ஒரே வலிமையான நாடு ஈரான் மட்டுமே. ஈரானில் ஏற்கனவே அமேரிக்கா மூக்கை நுழைத்து சரியாக காயம் பட்டு நிற்பதால் ஈரானை மண்டியிட வைக்க அமேரிக்காவிற்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுகிறது. சமயம் ஏற்படும்போது அந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக இஸ்ரேல் - அமேரிக்காவின் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டாலும் ஒரு முக்கியமான இறுதிக் கட்ட போராட்டத்தை நோக்கியே 'the might of mythology' இந்த உலகப் பயணம் நகர்ந்துக் கொண்டு வருகிறது.

Battles are won by the supremacy of arms and guns, but the war is won by ideas and the empire is protected by the power of knowledge.

அமேரிக்காவின் ராணுவ பலமும் ஜையொனிசத்தின் மூளை பலமும் இணைந்து நடத்தும் இந்த உலக நாடகங்கள், பொய்களாலும், ஏமாற்றத்தாலும் புனையப்பட்ட காவியங்களே தவிர்த்து சத்தியத்திற்காக நடத்தப்படும் போராட்டமல்ல. இஸ்ரேலின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் இது போன்ற அசத்தியத்திற்காக, சத்தியத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களே அதிமாக இருக்கும். கிறிஸ்துவத்தின் மீதும் அதைக் கொண்டு வந்த இயேசுவின் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும், பொய் பிரச்சாரங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது இஸ்லாத்தின் மீது அதனுடைய தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது கூட்டணிகளை மாற்றி அமைத்துக் கொண்டு தனக்கு யார் யாரெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்த இந்த ஜையோனிசக் கூட்டம் தயங்கியதல்ல. வரலாற்று நிகழ்வுகள் நமக்கு இதை தெளிவாக அறிவிக்கின்றன.

ஜையோனிசத்தின் உண்மையான முகத்தை மறைத்துக் கொண்டு உலகத்திற்கும் சாமனிய மனிதர்களுக்கும் வேறுவகையான தோற்றத்தைக் காட்டி நேரத்திற்கு தகுந்தார்போல் வேடமடிந்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த நாடகம் சிறு சிறு வெற்றிகளை அங்கங்கே கொடுத்தாலும் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வரும்போது சேர்த்து வைத்த அத்தனையும் ஒரே நேரத்தில் இழக்க நேரிடும். இது எத்தனையோ முறை நடந்துள்ளது என்றாலும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள விரும்பவில்லை என்பதையும் வரலாறு நன்றாகவே அறிவிக்கின்றது. (இஸ்ரேலின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து எழுத இருக்கிறேன். அதில் மேலும் இது தொடர்பான விளக்கங்களை பார்க்கலாம்.)

Dissemination of Knowledge and close interaction with people at all level is the only way to protect any empire. ஆனால் இந்த இஸ்ரேல் அமேரிக்க கூட்டணிகளின் ஆட்சிமுறையே முடிந்தவரை பொதுமக்களிடமிருந்து உண்மைகளை மறைத்து வைப்பதும், அவர்களை ஏமாற்றுவதும், அதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாப்பதும்தான். (தற்போதைய உதாரணம்: இதுவரை வெளிவராத இரட்டை கோபுர தகர்ப்பு விவகாரங்களும், ஈராக்கின் WMD).

மக்களை ஏமாற்றிய எத்தனையோ சாம்ரஜ்யங்கள் மண்ணோடு மண்ணாகிவிட்டன, உதாரணம் ஒட்டமான் சாம்ராஜ்யத்தின் அழிவு. அமேரிக்கா சாம்ரஜ்யம் இன்னும் விழித்துக் கொள்ள அவகாசம் உள்ளது. அது எப்போது என்பதே என் போன்றவர்களின் கேள்விகள். அழிவின் விளிம்பிலெ நின்றுகொண்டு மாற நினைத்தாலும் மாற வாய்ப்பு உண்டு.

இறைவன் திருக் குர்ஆனிலே கீழ்வருமாறு கூறுகின்றான். "அவர்களும் திட்டமிட்டார்கள். அல்லாஹ்வும் திட்டமிட்டான். இன்னும் திட்டமிடுவதில் அல்லஹ்வே மிக்க மேலானவன்". (அல் குர்ன் 8:30 (அல் அன்·பால்)

இப்படிப்பட்ட சாவால்கள் யாவும் முஸ்லீம்களுக்கு புதிதல்ல, ஆனால் அதை எதிர்கொள்ளும் சூழல்தான் புதிது. கல்வியிலும், அறிவியல் வளர்ச்சியிலும், இஸ்லாமியக் கொள்கைகளை, வாழ்க்கை நடைமுறைகளைப் பின்பற்றபடுவதிலும் பின் தங்கியுள்ள முஸ்லீம்களுக்கு இந்த சூழல் பெரும் சவாலாகத்தான் இருக்கிறது. இதானால்தான் முஸ்லீம்கள் தனது நிலையை அடிமுதல் நுனிவரை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. முஸ்லீம்கள் முதலில் தங்களிடத்திலே வளர்ந்துள்ள களைகளை வேறோடு எடுத்தெரிய வேண்டும். முஸ்லீம்கள் தாங்களாக மாறாத வரை இறைவனும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டான்.

முற்றும்.

குறிப்பு: எனது இந்த ஆய்வுரைக்கு மறுமொழியிட்டவர்களுக்கும் மற்றும் பயனுள்ள விமர்சனங்கள் அளித்தவர்களுக்கும் எனது நன்றிகள். மீண்டும் சந்திக்கும்வரை வாழ்த்துக்களுடன் விடை பெறுகிறேன்.

Saturday, April 16, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 5

'ஹிப்போகிரஸி' என்ற வர்த்தை ஒரு காலத்தில் தீண்டத்தகாத வார்தையாக, அவமானக் குறியாக அறியப்பட்டது. அந்த வார்த்தையைக் கொண்டு யாரையாவது குற்றப்படுத்திப் பேசினால் பேசப்பட்ட மனிதர் அவமானப்பட்டதைப் போல் உணர்வார். ஆனால் இன்றைய அரசியல் உலகில் அந்த வார்த்தையைச் சொல்லி யாரையாவது பேசினால் அது அவரின் அரசியல் உயர்வைக் குறிப்பதைப் போல் பெருமைப் பட்டுக் கொள்ளும் அவல நிலைமையைத்தான் நாம் பார்க்கிறோம்.

அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ்ஷிலிருந்து இஸ்ரேலின் ஷரோன் வரை, ஒரு சூரியனுக்கு கீழ் இருக்கக் கூடிய எல்லா நாட்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களும், ஆள்பவர்களும் ஹிப்போகிரஸிகளாகத்தான் மாறிப் போய்விட்டார்கள். வெட்கமில்லாத, கண்ணியமில்லாத அரசியல் தலைவர்களால் ஆட்சி செய்யப்பட்டு வாழக்கூடிய நம்மிடத்திலும் இந்த 'ஹிப்போகிரஸி' இப்போது ஒரு பெருமைக்குரிய விஷயமாகிவிட்டதில் எந்தவித விந்தையும் இல்லை. எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்ற எண்ணம்தான் இபோதெல்லாம் மேலோங்கிவிட்டதே தவிர்த்து செல்லுகின்ற பாதை சரியாக இருக்க வேண்டும் என்ற அறச் சிந்தனையே அற்று போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு ஹிப்போகிரஸி (நயவஞ்சகன்) எழுதிய 'The Case for Democracy; The Power of Freedom to Overcome Tyranny and Terror' என்ற நூலைப் படித்துவிட்டு அமேரிக்காவின் ஜார்ஜ் புஷ் கண்ணீர் விடாத குறையாக ஜனநாயகத்தின் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்பட்டுவிட்டது. அது மட்டுமா? நாடன் ஷரன்ஸ்கி என்ற அந்த ஹிப்போகிரஸி எழுதிய நூலை அக்கு வேறு ணி வேறாக படித்து புரிந்துவிட்டு தற்போது கர்த்தருக்கு அடுத்த படியாக ஜனநாயகத்தைத்தான் தனது கடவுளாக ஏற்றுக் கொண்டு விட்டாரோ என்று நினைக்குமளவிற்கு ஜனநாயகப் பயித்தியம் பிடித்து விட்டது. அத்தோடு விடவில்லை, இந்த புத்தகத்தை 'is part of my DNA' என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார் ஜார்ஜ் புஷ் (Rupert Cornwell - The Guardian).

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என்று கேட்கலாம். அதில் என்ன இருக்கிறது என்பதற்கு முன்னால் அதை எழுதியவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. இந்த நாடன் ஷரன்ஸ்கி 19 வருடங்களுக்கு முன்பாக சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு யூத அரசியல் கைதி. 1986ம் வருடம் சோவியத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப் படி இந்த அரசியல் கைதி சோவியத் வெகு காலமாக கேட்டுக் கொண்டிருந்த ஒரு ரஷ்ய ஒற்றனுக்கு மாற்றாக (Prisoner Exchange) விடுதலை செய்யப்பட்ட ஒரு 'மனித உரிமைவாதி'. நாடன் ஷரன்ஸ்கி தற்போது இஸ்ரேலில் ஷரோனின் அமைச்சராக இருக்கிறார். அவருடைய புத்தகத்தில் அவர் சொல்லிய மிக முக்கியமான கருத்துக்களில் இரண்டை மட்டும் இங்கே கொடுக்க விரும்புகிறேன். காரணம் அந்த இரண்டு கருத்துக்கள்தான் அமேரிக்காவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களாக தற்போது காட்டப்படுகிறது? (அவரை நான் ஏன் ஹிப்போகிரஸி என்று சொல்கிறேன் என்று இந்தப் பதிவிலே இன்னொரு இடத்திலே சொல்கிறேன்) அவர் சொல்லிய கருத்தில் தலையாயது இதுதான். (1) ஒன்று இந்த உலகம் இரண்டு பிரிவாக பிரிக்கப் படுகிறது. ஒன்று நல்லவர்கள் கூட்டம் இன்னொன்று தீயவர்கள் கூட்டம். (இதற்கு மத்தியில் யாரும் கிடையாது, அமேரிக்காவின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் இருக்கக் கூடாது. இதைத்தான் அதிபர் புஷ் அவர்கள் 'either with us or against us' என்ற புகழ் பெற்ற வார்த்தைகளை ஆப்கான் யுத்தத்தின் போது முழங்கியது. (எவன் நல்லவன் எவன் கெட்டவன் என்ற குழப்பமிருந்தாலும் ஏதேனும் ஒரு கூட்டத்தில் சேர்ந்துக் கொள்ள வேண்டும்).

(2) ஜனநாயகவாதிகள் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொள்ள மாட்டார்கள், காரணம் சுதந்திரச் சிந்தனையும் விடுதலை உணர்வும் கொண்ட மக்கள் தனது எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதால் கோடுங்கோல் ஆட்சியாளர்களை (சதாம் ஹ¤சைன் போன்றவர்களை) தன்னிஷ்டத்திற்கு செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். அதாவது மக்கள் சுதந்திரமாக செயல்படும்போது அவர்களுடைய உண்மையான விருப்பங்கள் வெளிப்படும், அந்த வெளிப்பாடுகள் கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் இருக்க வழி அமைக்கும்.

இப்படியெல்லாம் மக்கள் உரிமைக்கும் ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்கும் மிகப்பெரும் மனித உரிமையாளனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு ரஷ்யாவின் சிறையில் இருக்கும் போது எழுதிய தனது சிந்தனைகளை புத்தகமாக வெளியிட்டு இஸ்ரேலில் தஞ்சம் புகுந்து அரசியலில் ஈடுபட ஆரம்பித்தவுடன் எங்கே போயிற்று இந்த மனித உரிமை முழக்கங்கள்?

இஸ்ரேலின் பாலஸ்தீனர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை ஆரம்ப காலங்களில் எதிர்த்தவர்தான் இந்த நாடன் ஷரன்ஸ்கி. பிற்காலத்தில் அரசியலில் தனது சொந்த நலன்களை கருதி பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டார். அது மட்டுமல்ல இஸ்ரேலின் அரசு சார்ந்த நிறுவனங்கள் இவரை பிடித்து வாங்கு வாங்கு என்று அடி முதல் நுனி வரை துவட்டி எடுக்க பாலஸ்தீனர்கள் பற்றி பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இவர்களேல்லாம் எந்தவிதாமான ஜனநாயகவாதிகள்?

இவரின் இஸ்ரேல் வாழ்க்கையையும் அதில் அவர் வழங்கிய நேர்முக கருத்துக்கள், பேச்சுகள், பொதுவாழ்க்கையில் அவர் செய்யும் நடவடிக்கைகள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேகரித்து வரும் டாக்டர் இஸ்ரேல் ஷகாங் என்பவர் (இவர் சிறுவராக இருந்தபோது ஒரு காலத்தில் நாஜிக்களின் முகாம்களில் வதைக்கப் பட்டவர். இவர் founder of Israeli League for Civil and Human Rights) சொன்னதை நினைவு கூற விரும்புகிறேன். 'மனித உரிமைகளை இனத்திற்கும் நாட்டிற்கும் தகுந்தார்போல் நிர்ணயிக்கக் கூடிய இவரின் (நாடன் ஷரன்ஸ்கி) இந்த பாங்கு இவரின் முந்தைய மனித உரிமை முழக்கங்களை சந்தேகிக்க வைக்கிறது'. (Dr. James Zogby, Arab News, April 4, 05)

அமேரிக்காவின் NBC தொலைக்காட்சி நிறுவனத்தில் டாக்டர் ஜேம்ஸ் ஜொகபியும், நாடன் ஷரன்ஸ்கியும் ஒருமுறை சந்தித்துக் கொண்ட போது ஜேம்ஸ் இவரின் தற்போதைய நிலைபாட்டைப் பற்றி கேட்டபோது வார்த்தைகளை மென்று முழுங்கி கடைசியாக ஜெம்ஸிற்கு 'Palestine threat' பற்றி சரியாக புரியவில்லை என்று மழுப்பிவிட்டார் (Arab News April 4, 05). தொடர்ந்து ஜேம்ஸ் இது விஷயமாக பேசியபோது தலையை வேறு எங்கோ திருப்பிக் கொண்டு பதிலளிக்கவும் மறுத்து விட்டார்.

ஒரு யூதன் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்கள், அதே நேரம் ஒரு முஸ்லீம் பாதிக்கப்பட்டால் அதைக் கண்டு கொள்ளக் கூடாது - இதுதான் இந்த ஹிப்போகிரஸி நாடன் ஷரன்ஸ்கியின் மனித உரிமை சம்பந்தப்பட்ட கொள்கைகள். ஏன் இப்படி? அதிகாரம் வேண்டும், அரசியலில் முன்னேற வேண்டும். தான் ஒரு காலத்தில் சொன்ன தத்துவங்களையும், கொள்கைகளையும் தானே தின்று முழுங்கலாம், தவறில்லை, ஆனால் அரசியல் படிக்கட்டுகளில் முன்னேறியாக வேண்டும். இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். இந்த நயவஞ்சகன் எழுதிய நூலை உயர்வாக சொல்லிக் கொண்டிருக்கும் இன்னொரு நயவஞ்சகன் ஜார்ஜ் புஷ். தான் சிறையில் வாடிய போது எழுந்த இந்த சுதந்திர சிந்தனைகள் விடுதலையானவுடன் வெறும் புத்தகத்தில் எழுதி விற்பதற்குத்தான் பயன்படும் என்பதை சொல்லாமல் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார் இந்த நாடன் ஷரன்ஸ்கி. 'Tyranny and Terror' என்பதை தனது சிறைக்காலங்களில் அனுபவித்த இந்த மேதை தினம் தினம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் அவதிப்படும் பாலஸ்தீனர்களைப்பற்றி கவலைப்படாத இந்த மனிதரை நயவஞ்சகன் (ஹிப்போகிரஸி) என்று சொல்வதில் எந்த தவறும் கிடையாது.

ஒரு சாதாரண மனிதன் எழுதிய இந்த புத்தகம் அதிபர் புஷ்ஷின் சிந்தனையை இவ்வளவு அதிகமாக கவர்ந்திருக்கிறதென்றால் என்ன காரணம்? ஏன் இப்படி ஜனநாயகத்தைப் பற்றி அதிபர் புஷ்ஷைவிட ஷரன்ஸ்கியின் ஜனநாயக விளக்கம் சுமார் 200 வருடகால அமேரிக்கா சுதந்திர விரும்பிகளுக்கு புதுமையாக இருக்க வேண்டும்?

ஒரே வாக்கியத்தில் சொல்லி விடாலாம். 'உலகை ஆள்வது அமேரிக்கா.. அமேரிக்காவை ஆள்வது இஸ்ரேல்..' அமேரிக்கவின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளும், செயல்களும் எப்படி ஜயனோசியக் கொள்கைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொண்டால் அமேரிக்காவின் மூன்றாவது லட்சியமான அரபு நாடுகளை இஸ்ரேலுடைய ஆதிக்கத்தின் கொண்டுவரும் திட்டத்தைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்ரேலிய முதலாளிகளின், அரசியல் மாஸ்டர்களின் பிடிக்குள் இருக்கும் அமேரிக்கா இஸ்ரேலுக்காக, குறிப்பாக ஜயனோசியக் கூட்டங்களுக்குக்காக பணி செய்ய வேண்டிய நிர்பந்தமும் அவர்களின் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசியமும் தற்போது தலையாய கடமையாக இருக்கிறது.

(தொடரும்)

Monday, April 11, 2005

அரசியல் இஸ்லாம் - ஆன்மீக இஸ்லாம்?

இஸ்லாம் என்பது ஒன்றுதான். இதில் அரசியல் இஸ்லாம் ஆன்மீக இஸ்லாம் என்று எந்த பிரிவுகளும் கிடையாது. முஸ்லீம்களில் பல பிரிவுகள் இருக்கலாம், ஆனால் இஸ்லாத்தில் பிரிவுகள் கிடையாது. இஸ்லாம் என்பது ஒரு முழுமையான மார்க்கம் மற்றும் வழிமுறைகள் அடங்கிய ஒரு வாழ்க்கைத் திட்டம். முழுமையான வாழ்க்கைத் திட்டம் அல்லது வழிமுறை எனும்போது அதில் ஒரு மனிதனுக்கு தேவையான எல்லாவிதமான அடிப்படை வழிகாட்டுதலும் இருக்க வேண்டும். உலகில் தோன்றிய மற்ற மதங்களுக்கும் இஸ்லாத்திற்க்கும் உள்ள வித்தியாசமே இதுதான். மற்ற மதங்களெல்லாம் இறைவழி பாட்டையும், மோட்சமடைவதின் அவசியத்தையும் அதற்கான வழி முறைகளை மட்டுமே பெரும்பான்மையாக வலியுறுத்துகின்றன. ஒரு சில மதங்களில் அதையும் தாண்டி மற்ற விஷயங்கள் அங்கங்கே சொல்லப் பட்டாலும் காலப் போக்கில் அவைகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு கடவுளை நான்கு சுவற்றுக்குள், கோவில்களிலும், பள்ளிகளிலும் உட்கார வைத்துவிட்டார்கள். ஏதோ கடவுள் அங்கு மட்டும் விழிப்புடன் இருப்பது போலவும் மற்ற இடங்களில் என்ன தவறு செய்தாலும், கோவிலுக்கு சென்று கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதும் என்ற நிலைக்கு போதனைகள் வெறும் சடங்காக மட்டும் கையாளப்படுகின்றன.

இதை மாற்றி இறைவனை எல்லா நிலைகளிலும் எல்லா நேரங்களிலும் அஞ்சி நடக்கவும், இறைவனின் போதனைகளை அதற்குரிய வழியில் பின்பற்ற வேண்டும் என்று இஸ்லாம் எதிர்பார்க்கிறது. ஒரு முஸ்லீம் அரசியல்வாதியாகவோ, வியாபாரியாகவோ, ஆசிரியனாகவோ, தொழிலாளியாகவோ, முதலாளியாகவோ, விஞ்ஞானியாகவோ அல்லது ஏழையாகவோ இருக்கலாம். அவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர்கள் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களாக ஒரு நல்ல மு·மீனாக வாழ்ந்து மறைய வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. விரும்புவதோடு நிறுத்திக் கொள்ளாமல் அவர்கள் அதை செயல்படுத்த ஒரு சில பார்முலாக்களையும் அவர்களுக்கு அறிவுறுத்துகிறது. இதைத்தான் இஸ்லாம் மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று அனைத்திர்க்கும் உகந்த அறிவையும் வழிமுறையையும் குரான் மூலமாக கொடுத்திருக்கிறது. எனவேதான் இஸ்லாம் ஒரு முழுமையடைந்த மார்க்கம் என்று இறைவனாலேயே மொழியப்பட்டது.

'இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்துவிட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்களின் மீது முழுமையுமாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்' (அல்-மாயிதா 5:3 - அல் குரான்)

ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அது ஆன்மீகம், அந்த ஏக இறைவனை எப்படி வணங்க வேண்டுமென்று முகம்மது நபி (சல்) அவர்கள் சொன்னபடி வணங்கினால் அது அரசியல் என்று கருத்துத் தொணிக்கும் வகையில் இந்த வலைப்பதிவில் நேசகுமார் அவர்களால் ஒரு கட்டுரை வரையப்பட்டது. அந்தக் கட்டுரை இன்னும் நிறைய விஷயங்களை அவர் விரும்பியது போல் வெளிப்படுத்தியுள்ளது. (He is deliberately attempting to distort the meanings by quoting out of context) அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்கினால் அது 'ஆன்மீக இஸ்லாம்', நபி முகம்மது (சல்) அவர்கள் காட்டிய வழியில் வழிபட்டால் அது 'அரசியல் இஸ்லாம்' என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த சிந்தனை கோட்பாட்டை நினைத்து சிரிக்கத்தான் வேண்டும்.

ஒரு மாணவன் தனது அறிவியல் புத்தகத்தை தானாக படித்தால் அது 'அறிவியல் படிப்பு', அதையே அவனது அறிவியல் ஆசிரியர் சொல்லி தந்ததுபோல் படித்தால் அது 'ஆசிரியர் அறிவியலாகிவிடுமா?'

ஒரு குழந்தை தானாக ஏதேனும் உளரினால் அது 'மொழிப் பயிற்ச்சி', அதையே அம்மா சொல்லிக் கொடுப்பது சொன்னால் அது 'அம்மா பயிற்ச்சியாகிவிடுமா?'

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஆன்மீகம் என்றால் என்ன, கர்மா என்றால் என்ன என்பதற்கான சரியான அர்த்தங்களை அவர் தெரிந்து கொள்ளுதல் நல்லது. நேசகுமார் போன்றோரின் கவலை எல்லாம் எப்பாடு பட்டாவது முகம்மது நபியை ஒரு குற்றமுள்ளவர் என்று நிரூபித்துவிட வேண்டும் அப்படி செய்வதன் மூலம் முஸ்லீம்களை முகம்மது நபியின் (சல்) வழிகாட்டுதலில் இருந்து வேறுபடுத்தி வெறும் மதச் சடங்குகளை மட்டும் செய்யக் கூடியவர்களாக மாற்றிவிட வேண்டுமென்பதே. (அதற்கான காரணங்களை பிறகு பார்க்கலாம்). நேசகுமார் போன்றோருக்கு வெண்டுமென்றால் கடவுளை பூஜை அறையோடும் அல்லது கோவில்களில் மட்டும் கொண்டாடினால் பொதுமென்று இருக்கலாம்.

'மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைதக் கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாகியிருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம் - அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும் அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாரட்டத்தக்க வகையில் அணுகியிருக்கிறதென்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று அனுபவப் பூர்வமாக கூறுகிறேன்'. என்று விவேகானந்தர் அவர்கள் சாட்சி கூறுகின்றார்.
அதுமட்டுமல்ல 'நான் அழுத்தமாகச் சொல்கிறேன். நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமியச் செயல்பாடின்றி வேதாந்த கருத்துக்கள் - அது எவ்வளவுதான் சிறப்பானதாக, பெருமைக்குரியதாக இருந்தாலும் - பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்' என்று கூறுகின்றார் (Letters of Swami Vivekananda P. 463)

விவேகானந்தர் எந்த ஒரு முஸ்லீமுடைய வாளுக்கும் பயந்து இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நேசகுமார் போன்றவர்களுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

நடைமுறை அத்வைதம் எப்போது சாத்தியமாகும்? இஸ்லாமிய செயல்பாடுகள் இருந்தால்தான் அது சாத்தியமாகும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் விவேகானந்தர். இஸ்லாமிய செயல்பாடு என்றால் ஒருமித்த ஒரு வழிகாட்டுதலுக்கு உட்பட்ட செயல்பாடாக இருக்க வேண்டும், அதுவல்லாமல் ஆளுக்கொரு வழியில் செயல்பட்டால் அது விவேகான்ந்தர் சொன்னதுபோல் அது எத்தனை சிறப்புக்குரியதாக இருந்தாலும் பயனற்றதாகத்தான் இருக்கும். அதுதான் இந்து வேதாந்த தர்மங்களில் ஏற்பட்ட ஒரு குறைபாடு. அப்படி ஒரு நிலை வரக்கூடாது என்பதற்க்காகத்தான் இங்கே முகம்மது நபியவர்களின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

குரான் என்பது ஒரே நாளில் மொத்தமாக எழுதி அச்சடித்து மனித சமூகத்தின் கையில் கொடுக்கப்பட்ட ஒரு புத்தகமல்ல. கொஞ்சம் கொஞ்சமாக 23 வருடங்களாக கொடுக்கப்பட்டு அதை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் எப்படி வழிநடத்த வேண்டுமென்று நபிகளின் வாழ்க்கை மூலமாக நடத்திக் காட்டப்பட்டதுதான் குரான் என்ற புனித மறை. எனவேதான் ஒவ்வொரு முஸ்லீமும் நபிகாளாரை பின்பற்றி நடந்தால்தான் குரானை அதனுடைய உண்மையான வழியில் செயல்படுத்த முடியும். அதுதான் விவேகானந்தர் அவர்கள் சொன்ன இஸ்லாமிய செயல்பாடு.

கர்மாவை அதிகமாக வலியுறுத்துவது அத்வைதம், ஆனால் அதை அழகாக வாழ்வில் செயல்படுத்த பாதை அமைத்துக் கொடுக்கிறது இஸ்லாம் என்று விவேகானந்தர் போன்ற பெரும் மனிதர்கள் சொன்னதெல்லாம் கடவுளை வெறும் வழிபாட்டு கூடங்களில் மட்டும் வைத்துவிடக்கூடாது என்ற கருத்தில்தான்.

இஸ்லாம் என்பது முன்பே சொன்னது போல் ஒரு முழுமையடைந்த மார்க்கம். இதில் வாழ்க்கைக்கு தேவையான எல்லா அடிப்படை அம்சங்களும் போதிக்கப் பட்டுள்ளது. இதில் ஆன்மீகமும் இருக்கிறது அரசியலும் இருக்கிறது. பொருளாதாரமும் இருக்கிறது பொறியியலும் இருக்கிறது. அறிவியலும் இருக்கிறது சட்டவியலும் இருக்கிறது. சமுத்திரங்களைப் பற்றியும் சொல்லப் பட்டிருக்கிறது சரித்திரங்களும் சொல்லப்பட்டுள்ளது. ஆக இவை எல்லாம் இருப்பதால் இஸ்லாத்தை அறிவியல் இஸ்லாம், சரித்திர இஸ்லாம், பொருளாதார இஸ்லாம், பொறியியல் இஸ்லாம் என்று பகுதி பகுதியாக பெயரிட்டுக் கொள்ளலாமா?

அல்லாஹ்வைவிட முகம்மது நபி (சல்) அவர்களுக்கே அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது அதுதான் அரசியல் இஸ்லாத்தின் அடிப்படை, அதைத்தொடர்ந்து இஸ்லாத்தில் பிளவுகள் அதிகமாகிறது என்றெல்லாம் எழுதியிருக்கிறார் நேசகுமார். இப்படி அல்லாஹ்வைவிட நபிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அது நபி வழிபாடகிறது என்று கூட எழுதியுள்ளார்.

எந்த முஸ்லீமும் நபியே எனக்கு இதைக் கொடு, நான் இன்ன கஷ்டத்தில் இருக்கிறேன் என்னை காப்பாற்று என்று கைதூக்கி முறையிடுவதில்லை. அறியாமையில் இருக்கும் முஸ்லீம்கள்கூட தர்காக்களுக்கு சென்று அங்கு அடங்கியிருக்கக் கூடிய மனிதர்களிடத்தில் வேண்டுமென்றால் கையேந்தி நிற்பார்கள், கேட்பார்கள், ஆனால் நபியை ஒரு போதும் கடவுள் நிலையில் வைத்து வணங்கியதில்லை. இறைவனுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்த்தை ஒரு போதும் நபியவர்களுக்கு இந்த சமுதாயம் கொடுத்ததுமில்லை, கொடுக்கப் போவதுமில்லை.

பிறகு ஏன் கடவுளை அவன் இவன் என்று பேசுகிறீர்கள், ஆனால் முஹம்மதை மட்டும் மரியாதையாக பேசுகிறீர்களே என்று கேட்கலாம்.

கடவுளை அவன் என்றும் பேசலாம், அவர் என்றும் பேசலாம் அல்லது அது என்றும் பேசலாம், காரணம் இறைவன் மறைவானவன், எல்லோருக்க்கும் பொதுவானவன். எனக்கு இருக்கும் உரிமைதான் நேசகுமார் போன்றோருக்கும் இருக்கிறது. நானும், அவரும் இன்னும் எல்லோரும் அதே இறைவனால்தான் படைக்கப் பட்டவர்கள். யாருக்கு எப்படி அழைக்கத் தோன்றுகிறதோ அவ்வாறு அழைக்கலாம். இந்த அ·றிணை உயரிணை இருக்கக் கூடிய மொழிகளில்தான் இந்த மரியாதை வேற்றுமைகள். இது மொழி வழக்கு. இந்த மொழி இலக்கணம் தெரியாமல் சிலர் இதை ஒரு பெரும் குற்றமாக எடுத்துச் சொல்வது அவர்களின் அறியாமையையே பறைசாற்றுகிறது. ஆங்கிலத்திலும் அரபியிலும் இன்னும் எத்தனையோ மொழிகளில் மனிதர்களை குறிப்பிடும்போது இந்த அ·றிணை உயரிணை வேற்றுமைகள் கிடையாது. எனவே இது மொழிபெயர்ப்பும் அந்தந்த மொழியில் இருக்கக்கூடிய வழக்கு இலக்கணங்களை கொண்ட விதியாகும்.

இறைவனை அவமானப் படுத்தினால் ஆயுள் தண்டனை, ஆனால் முகம்மது நபியைத் தரக்குறைவாக பேசினால் மரண தண்டனை என்றெல்லாம் மிகவும் கவலைபட்டு சில கருத்துக்களையும் நேசகுமார் மொழிந்துள்ளார்.

உதாரணத்திற்கு: அரசு பேருந்தில் ஏறிக் கொண்டு அந்த பேருந்தைப் பற்றி தரக்குறைவாக பேசலாம், அதை நடத்தும் அரசாங்கத்தை அவமானமாக பேசலாம், அந்த பேருந்தை ஓட்டுபவரும், நடத்துனரும் ஒன்றும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டர்கள், கூட பயணம் செய்பவர்கள் கூட அதை ரசிக்கலாம். அதே நேரம் அதை ஓட்டும் ஓட்டுனரையோ அல்லது நடத்துனரையோ தரக்குறைவாகப் பேசினால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. ஏன் அப்படி?

ஒரு நாட்டின் சட்டம் கடவுளை மறுக்கலாம் அல்லது கடவுளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம், அது அந்தந்த நாட்டின் வரைமுறைக்கு உட்பட்ட விஷயம், இவைகளைப் பற்றி எல்லாம் விவாதிக்க வேண்டிய அளவிற்கு அவைகள் ஒன்றும் முக்கியமான விஷயங்கள் அல்ல.

Saturday, April 09, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 4

போர் என்றால் முதலில் பாதிக்கக் கூடியது பொருளாதாரம். ஆனால், போரை ஒரு சிறந்த முதலீடாக வைத்து பொருளாதார வெற்றி கான நினைப்பதில் அமேரிக்காவிற்கு நிகர் அமேரிக்காதான். எத்தனையோ நாடுகள் போரில் தனது பொருளாதாரத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல் இன்னும் ஏழையாகவே இருந்து கொண்டிருக்கின்றன. அமேரிக்காவின் இந்த 'gambling' மத்தியக் கிழக்கு நாடுகளை பொருத்தவரை கொஞ்சம் சுலபமான விஷயம்தான். காரணம் போர் செய்யப்போவது ஒன்றும் சீனாவோ அல்லது ரஷ்யாவிற்க்கு எதிராகவோ அல்ல, இன்னும் சொல்லப் போனால் வட கொரியாவிற்கு எதிராகக் கூட அமேரிக்கா தற்போது ஆயுதத்தை கையில் எடுக்காது.

போர் என்றால் அதிலிருந்து வெற்றி பெரும் நாட்டிற்க்கு ஏதேனும் பிரயோசனம் இருக்க வேண்டும், இல்லையென்றால் அது முட்டாள்தனமான முடிவு மட்டுமல்லாமல் உள்ளதையும் இழக்க வெண்டிய சூழ்நிலை ஏற்படும். அமேரிக்கா ஒன்றும் முட்டாள்தனமாக முடிவு எடுக்கும் நாடு அல்ல, எனவே போருக்கு முன்னால் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார அரசியல் லாபங்களை நன்றாக கணக்கிட்டுத்தான் போருக்கான முடிவை எடுத்தது.
அதிலும் போர் செய்யப்போவது தன்னால் ஒரு காலத்தில் உருவாக்கப்பட்ட உருப்படாத ஆட்சியாளர்களும், ஆமாம் சாமி போட்ட கிரிமினல் ராணுவத் தலைவர்கள் ஆட்சி செய்யும் நாடுகளுக்கு எதிராகத்தான். ஆப்கானிஸ்தான் போர் ஒரு போரே அல்ல. இரட்டை கோபுரத்தின் வீழ்ச்சியால் எழுந்த கவுரவப் பிரச்சனயை தீர்த்துக் கொள்ள வலுவிழந்த நாட்டை இழுத்துப் போட்டு உதைத்த கதைதான். அதுமட்டுமல்லாமல் தன்னிடத்தில் உள்ள அனைத்துவித ஆயுதங்களையும் சோதித்துப் பார்க்கவும் அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

ஈராக் யுத்தம் அமேரிக்காவிற்க்கு அனைத்து வகையிலும் வலு சேர்க்கக் கூடிய போர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈராக் யுத்தம் அமேரிக்கவை பொருந்த்தவரை ஒரு நல்ல முதலீடும் கூட.

ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்க அமேரிக்க தயாரானது. உலகிற்கு வேண்டுமானல் ஈராக் யுத்தம் ஒரு தெளிவில்லாத WMD கதையாக இருக்கலாம், ஆனால் அமேரிக்கா தான் எழுதிய 'script' படித்தான் இந்த யுத்தத்தை நடத்தியிருக்கிறது. அதனால்தான் ஜார்ஜ் புஷ்ஷ¤ம் டோனி பிளேயரும் தலையில் அடிக்காத குறையாக தன்னாட்டு மக்களிடம் நேரடியாக விளக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்த முடிவால் இரு நாடுகளுக்கும் விளையக் கூடிய நன்மைகளுக்கு காலம் பதில் சொல்லும் என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். (அந்த வகையில் அமேரிக்கர்கள் பொதுவாக போரை எதிர்த்தாலும் பிறரை அடக்கியாள வேண்டுமென்ற குணாதிசயம் அவர்களை ஜார்ஜ் புஷ்ஷின் இரண்டாவது வெற்றிக்கு ஓட்டு பொட வைத்தது).

இப்போரின் முடிவில் அமேரிக்கா எதிர்பார்க்கும் மூன்று முக்கிய விளைவுகள்:

அ) ஐ. நா. சபையையும், ஐரோப்பிய நாடுகளையும் அரசியல் ரீதியாக வலுவிழக்க செய்வது.
ஆ) சரிந்துவரும் தனது டாலரை பெட்ரோ டாலரின் மூலம் தூக்கி நிறுத்துவது
இ) இஸ்ரேலை மத்தியக் கிழக்கு நாடுகளின் போலிசாக உயர்த்தி அரபு நாடுகளை இஸ்ரேலின் பிடிக்குள் (ஆதிக்கத்தின்) கீழ் கொண்டு வருவது.

இந்த மூன்றிர்க்கும் சரியான காரணத்தைக் காட்டி உலக ஊடகங்களில் அதை பெரிதுபடுத்தி சாமனிய மக்களின் சிந்தனைகளை முடிந்தவரை குழப்பி அதன் மூலம் அவர்களது கருத்துக்களை தனக்கு ஆதரவாக திரட்டுவது என்று முடிவு செய்யப் பட்டது. அமெரிக்க எப்போதுமே தான் விரும்பக் கூடிய முடிவை முதலில் ஊடகங்களில் விவாதிக்க வைத்து அதன் வாயிலாக மக்களின் ஆதரவை திரட்டுவது வழக்கம். ஆள்பவர்களின் கருத்துக்களை பொதுமக்களிடத்தில் விற்பதற்க்குத்தானே இந்த ஊடகங்கள் எல்லாம் அடித்துப் பிடித்து ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை உண்மை என்று நம்புவது பெரும்பாலருக்கு பழகிப் போன ஒன்று. (ஊடகங்களில் உண்மையை மட்டும் எழுதுபவர்களின் நிலையை நினைக்க பரிதாபமாக இருக்கிறது.)

மக்களின் மனதில் சென்று பதியக்கூடிய வாசகங்கள் உருவாக்கப் பட்டன. அவற்றில் முதன்மையானதும் ஏற்கனவே ஆப்கான் போரில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டதுமான 'தீவிரவாதம்' அதைத் தொடர்ந்து 'WMD (Weapons of Mass Destruction)' என்று இரு USP (Unique Selling Points) உருவாக்கப் பட்டது.
செப்டம்பர் 11 க்கு பின் உலகில் உருவாகிப் போன சந்தேக நோய் தொற்று நோயாக மாறி இருப்பவன் இல்லாதவன், தெரிந்தவன் தெரியாதவன் என்று எந்தவித மொழி, மத மற்றும் நாடுகள் வித்தியாசமில்லாமல் எல்லோரையும் பற்றிக் கொண்டது அமேரிக்காவிற்க்கும் பிரிட்டனுக்கும் சாதகமாக அமைந்தது.

எதிர்க்க ஆளில்லை என்றால் அடிக்க வருபவனின் தன்னம்பிக்கையும் தைரியமும் அபாரமாக இருக்கும். அதுமட்டுமா? எப்போது எதிரியை உதைக்கலாம் என்ற ஆர்வமும் அதிகமாக இருக்கும். அப்படித்தான் அமெரிக்காவும் பிரிட்டனும் திட்டத்தை கையில் வைத்துக் கொண்டு உடனடியாக போரில் குதிப்பதென்று தவியாய் தவிக்க ஈராக் அமேரிக்காவின் 52வது மாநிலமாக மறுவதற்கு நாட்கள் எண்ணப்பட்டன.

தீவிரவாதம் மற்றும் WMD என்ற இரண்டு வார்த்தைகளும் உலக அரங்கில் எல்லா மனிதர்கள் வாயிலும் வராத நாட்களே இல்லை எனும் அளவிற்கு தினம் தினம் பேசப்பட்டது. ஆனால் ஈராக்கில் அப்பாவி மக்களும், ஆண், பெண் குழந்தைகளும் மரணத்திற்க்கு தயாரானார்கள்.

ஏதோ ஒரு கூட்டம் லாபமடைவதற்க்கு லட்சக் கணக்கில் மக்கள் தங்கள் உயிர்களை அநியாயமாக இழக்கத் தயாரானார்கள். அவர்களை அறியாமலே மரணத்தின் கொட்டகைக்கு வந்து குவிக்கப் பட்டார்கள். கணவன் மனைவியையும், மனைவி கணவனையும், பிள்ளைகள் பெற்றோர்களையும், பெற்றோர்கள் பிள்ளைகளையும் தங்களது கண்களுக்கு முன்னாலேயே வெடி குண்டுகளிலும், பீரங்கி தாக்குதலிலும், விமான ஏவுகனைகளினாலும் சிதறடிக்கப் படுவதைப் பார்த்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சின்னஞ் சிறார்களும் இரத்த வெள்ளத்தில் கையிழந்து காலிழந்து முகம் சிதைந்து மரணத்தில் மிதந்தார்கள். பெற்றெடுத்தப் பிள்ளைகளின் விழிகளில் தூசு விழுந்தாலே துடித்துப் போகும் தாய்மார்கள் மார்புகளில் பிள்ளைகளை அணைத்தவாறு மரணித்தார்கள்.

இரட்டைக் கோபுரம் தாக்கப்படும் காட்சியை மணிக்கொருமுறை டிவிக்களில் காட்டி மேலை நாட்டு மக்களின் மனதில் அதை மறக்கவிடாமல் செய்த மீடியாக்கள் ஈராக்கில் சிதறிவிழும் மனித உடல்களை மொத்தமாக மூடி மறைத்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக் கூடாது, எப்படிப்பட்ட படங்களை வெளியிட வேண்டும் என்று அந்தந்த படைத்தலைவர்களின் தணிக்கைக்கு பிறகே போர்ச் செய்திகள் வெளியிடப்பட்டன. அதையும் மீறி அல் ஜசீரா மற்றும் அல் அரபியா டிவியினர் ஈராக்கில் அப்பாவி மனிதர்களும் பிள்ளைகளும் கொல்லப் படுவதை செய்தியாக வெளியிட்டார்கள். ஆனால் அமேரிக்கா கருத்துச் சுதந்திர விரும்பிகள், ஜனநாயகக் காவலர்கள் அந்த டிவிக்களின் செய்தி சேகரிக்கும் பாக்தாத் அலுவலகங்களை தாக்கி அங்கிருந்த செய்தியாளர்களையும் உண்மையை சொன்ன காரணத்திற்க்காக மேல் நோக்கி அனுப்பி வைத்தார்கள்.
சோவியத்தை நம்பி முதலாம் வளைகுடா போரில் மோசம் போன சதாம் ஐரோப்பியாவை நம்பி இரண்டாம் வளைகுடா போரில் ஆட்சியை இழந்தது மட்டுமல்லாமல் எலிக்குகைக்குள் தஞ்சமடைய நேர்ந்தது.

அரபுலகம் அவமானத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வேதனையில் வாய்மூடி அமைதியாகக் கிடந்தது. ஐ.நா. சபையின் முடிவிற்க்கான காலம் தொடங்க ஆரம்பித்தது. வெறும் நிவாரணப் பணிகளை மட்டும் செய்தால் போதும் என்று அறிவுறுத்தப் பட்டது.

ஐரோப்பிய நாடுகள் மெதுவாக ஒதுங்க ஆரம்பித்தார்கள். ஈராக் அமேரிக்காவின் வசம் போய்விட்டது, பெட்ரோல் டாலர்கள் பெட்ரோல் ஈரோவாக மாறும் நாட்கள் தற்போது இல்லை என்ற எதார்த்தத்திற்க்கு வந்தவர்கள் புனரமைப்பு பணிகளில் ஏதாவது ஒப்பந்தம் கிட¨க்குமா என்று அமேர்க்காவிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

அமேரிக்காவின் script ல் ஐரோப்பியாவிற்கு எந்தவித பாத்திரமும் இல்லை என்பதை புரிந்து கொண்டு பிரிதொரு சந்தர்பத்திற்க்காக காத்திருப்பதை தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்ந்து அமைதியாகிப் போனது ஐரோப்பிய உலகம்.

அமேரிக்கா ஏன் தன்னிச்சையாக புனரமைப்பு பணிகளில் யாரையும் கூட்டு சேர்க்காமல் செயல் படுகிறது என்பதை புரிந்துக் கொள்ள ஒன்றும் ராக்கெட் அறிவு தேவையில்லை. ஈராக் என்பது அமேரிக்கவை பொருத்தவரை ஒரு புதயலைப் போன்று. தோண்ட தோண்ட வற்றாமல் கிடைக்கக் கூடிய உலகின் இரண்டாவது அதிக கையிருப்பு இருக்கக் கூடிய பெட்ரோல் உள்ள நிலம் என்பதால் எத்தனை பில்லியன் டாலர்கள் செலவு செய்தாலும் வட்டியும் முதலுமாக எடுத்துக் கொள்ளலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லாததால் அமேரிக்க வேறு யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை.

ஈராக்கின் எல்லா ஒப்பந்தங்களும் அமேரிக்க கம்பேனிகளுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டது. அது மட்டுமல்லாமல் அந்த ஒப்பந்தங்கள் எதையும் பிற்காலத்தில் ஈராக் செல்லுபடியாகாத ஒப்பந்தமாக மாற்றிவிடக் கூடாது என்பதில் தனிக் கவனம் எடுத்து அதற்கு தகுந்தார்போல் ஈராக்கின் புதிய சட்டங்கள் பால் பிரெமரால் (First Governor General of Iraq) ஏற்கனவே எழுதி அமலாக்கப் பட்டுவிட்டது. ஒரு நாட்டை அநியாயமாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அந்த நாட்டின் அரசியல் சட்டத்தை திருத்தி இருக்கக் கூடிய பெட்ரோல் தொடர்பான எல்லா வியாபரங்களையும் அமேரிக்க கம்பேனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறது அமேரிக்க அரசாங்கம்.

அமெரிக்கா விரும்பியது போல் ஐ. நா சபை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. கோபி அண்ணானின் ஐ.நா. சீரமைப்புத் திட்டத்திற்க்கு அமேரிக்கா veto சொல்லிவிட்டது. ஆங்காங்கே ஏழை நாடுகளுக்குச் சென்று போலியோ ஊசி போடும் வெலையும் கோதுமை மூட்டைகளை வினியோகம் செய்தால் போதும் என்று ஐ.நா. வின் வேலையை அமேரிக்கா குறைத்துவிட்டு உலக நாடுகளின் அரசியல் பொருளாதார ஒழுங்குகளை தான் பார்க்கப் போவதாக ஆணித்தரமாக அழகுற ராஜ தந்திர வார்த்தைகளில் சொல்லிவிட்டது.

ஐ.நா.வின் தலை எழுத்தை மாற்றி எழுதும் பணியை இத்தோடு விடப் போவதில்லை அமேரிக்கா. ஐ.நா. சபையைப் பற்றி 1994ல் 'There is no such thing as the United Nations. There is only the international community, which can only be led by the remaining superpower, which is the United States... The secretariat building in New York has 38 stories. If it lost ten stories, it wouldn't make a bit of difference' என்று Federalist Society Forum' என்ற அமைப்பில் பேசிய ஜான் போல்டன் (1) என்ற புதிய பழமைவாதியைத்தான் (இப்படி மொழி பெயர்க்கலாமா? neo-conservative) அமேரிக்காவின் ஐ. நா. தூதராக நியமித்திருக்கிறது.

ஈராக் போரின் மூலம் தனது முதலாவது எதிர்பார்ப்பான ஐ.நா. ஒழிப்பு வேலையை தொடங்கிவிட்ட அமேரிக்கா தனது இரண்டாவது வெற்றியான டாலரின் பாதுகாப்பில் குறைந்தது ஒரு பத்தாண்டு காலத்திற்க்காவது அதிகம் கவலைப்பட தேவையில்லை எனும் அளவிற்கு தன்னை கொஞ்சம் நிம்மதியாக்கிக் கொண்டது. ஒபெக் நாடுகளின் முதுகெலும்பை உடைக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. ஈராக்கை கையில வைத்துக் கொண்டு தான் விரும்பிய நாடுகளுடன் இருநாட்டு ஒப்பந்தம் செய்து கொண்டு வேண்டுகின்ற அளவிற்கு பெட்ரோல் ஏற்றுமதி செய்ய முடியும். ஒபெக் நாடுகளின் கட்டுபாட்டை குலைத்து அவர்களையும் அமேரிக்கா விரும்பியபடி பெட்ரோல் விலையை நிர்ணயிக்க செய்யும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

தான் எதிர்பார்த்த முதல் இரண்டு விளைவுகள் செயல்படத் தொடங்கியது அமேரிக்காவிற்கு தற்போது மன சாந்தியை அளித்தாலும் தனது மூன்றாவது எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்து கொள்ள அமேரிக்கா போரின் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ஜனநாயகம் என்ற புதிய USP யை இப்போது செயல் படுத்த தொடங்கியுள்ளது.

அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.

(தொடரும்)

Notes:
1. Warriors of Democracy - Aamer Syed, Arab News page 7, dated April 7, 2005

Saturday, April 02, 2005

அமேரிக்காவின் அரசியலும், முஸ்லீம்களும் - 3

ஆங்கிலத்தில் சொல்வார்கள், 'When the chips are down, you have to show the grit' இதைத்தான் தற்போது அமேரிக்கா செய்து கொண்டிருக்கிறது. தனது பொருளாதாரம் ஒரு கண்ணி வெடியின் மீது நிற்பது போல் அமேரிக்கா உணர்கிறது. அமேரிக்காவின் வீழ்ச்சி அதனுடைய பொருளாதார வீழ்ச்சியை பொறுத்தே இருக்கிறது என்பதை அமேரிக்காவின்ஆளும் வர்க்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இன்னும் நான்கைந்து வருடங்களில் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் அபாயம் வெகுவாகவே இருப்பதால், 21ம் நூற்றாண்டு அமேரிக்காவின் கையை விட்டு போகும் வாய்ப்பு நிறையவே உள்ளது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை தொடர்ந்து நம்பலாமா? அமேரிக்காவின் பொருளாதார பலம் தொடர்ந்து குறைவதால் டாலரின் கையிருப்பை மாற்றலாமா? என்றெல்லாம் உலக நாடுகள் தொடர்ந்து சிந்தித்து வருவதும் டாலரின் கையிருப்பை குறைப்பதும் இப்போது தொடங்கிவிட்டன.

இச்சூழலில்தான் 1999ல் ஈரோ அறிமுகப் படுத்தப்பட்டு டாலரைப் போல் அல்லாமல் தங்கத்திற்க்கு எதிராக 15% மதிப்புடன் புழக்கத்திற்க்கு கொண்டு வரப்பட்டது. முதலில் ஈரோ ஒரு பலவீனமான கரன்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடமாக ஈரோ டாலருக்கு எதிராக 25% தனது மதிப்பை உயர்த்தி, தன்னை ஒரு மாற்று கரன்சியாக, குறிப்பாக டாலருக்கு எதிராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டுள்ளது.

எப்போதுமே மார்க்கெட்டில் ஒரு பொருளை எதிர்த்து இன்னொரு பொருளை புழங்கவிட வேண்டுமென்றால் அல்லது புரோமோட் செய்ய வேண்டுமென்றால் அறிமுகப்படுத்தப்படும் அல்லது போட்டியிடும் பொருளை குறைந்தது இரண்டு மூன்று வருடத்திற்க்கு எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டு செயல் படுத்தப்படும். அவ்வப்போது தேவைப்படும் பட்சத்தில் அதனுடைய செயல் திட்டத்தில் ஒருசில மாற்றங்கள் உண்டாக்கப்டுமே தவிர்த்து அதனுடைய 'marketing strategy' மாற்றப்பட மாட்டாது. அந்த வகையில்தான் ஈரோ அமேரிக்க டாலருக்கு எதிராக நிறுத்தப்பட்டு உலக நாடுகளின் வர்த்தகத்தில் தனக்கென்று ஒரு பங்கை உருவாக்கிக் கொண்டுவிட்டது.

2002 வருடத்தில் உலக நாடுகளின் டாலர் மொத்தக் கையிருப்பு தோராயமாக 68% ஆக இருந்தது. அதே வருடம் உலகிலேயே ஜப்பானுக்கு அடுத்தப்படியாக கிட்டதட்ட 200 பில்லியன் டாலர்கள் கையிருப்பு வைத்துள்ள சீனா தனது கையிருப்பில் கனிசமான பங்கை ஈரோவிற்கு மாற்றுவதாக அறிவித்தது. (சீனாவின் forex reserve ஒரு அரசாங்க ரகசியமாக கையாளப்படுகிறது). ஈரோவின் மத்திய வங்கியான BNP Paribas அறிக்கையின்படி சீனா 80% வைத்திருந்த டாலரின் கையிருப்பை 50% குறைத்ததாக தெரிகிறது.

2001 லிருந்து 2003 வரை கனடா தனது டாலரின் கையிருப்பை 75% லிருந்து 55% குறைத்து ஈரோவின் கையிருப்பை 23% லிருந்து 42% உயர்த்தியுள்ளது.

ஜனவர்¢ 2003ல் ரஷ்யாவின் மத்திய வங்கி ஈரோ கையிருப்பை 5% லிருந்து 10% உயர்த்தி டாலரின் கையிருப்பை 75% குறைத்தது. ரஷ்யாவின் இறக்குமதியில் 42% ஐரோப்பிய நாடுகளிலிருந்துதான் செய்யப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டியதே.

2002ல் தைவான், ஹாங்காங், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், 2003ல் இந்தோனேஷியா 'axis of evil' என்று அமேரிக்காவால் அடையாளப்படுதப்பட்ட நாடுகளில் ஒன்றான வட கொரியா போன்ற நாடுகள் டாலரை குறைத்து ஈரோவை அதிகப் படுத்த தொடங்கின. இப்படி உலக நாடுகளின் செயல்பாடுகளுக்கு காரணம் ஏதோ அமேரிக்காவை பிடிக்காமல் அல்ல. இந்த நாடுகளின் இறக்குமதிகளின் பெருமடங்கு ஐரோப்பியா நாடுகளிலிருந்து செய்ய வேண்டிய அவசியமும் மற்றும் டாலரைப் போல் அல்லாமல் ஈரோ தங்கத்திற்க்கு எதிராக அதிலும் 15% மதிப்புடன் பொறுத்தப்பட்டதே. அதே நேரம் ஈரோவின் நம்பகத்தன்மை டாலரைவிட அதிகமாக இருப்பதற்க்கு காரணம் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் எதுவும் அமேரிக்காப் போன்று பற்றக்குறைகள் அதிகமில்லாமல் இருப்பது இன்னுமொரு முக்கிய காரணம்.

தற்போது உலக பொருளாதாரத்தில் என்னவெல்லாம் வாங்க வேண்டுமோ அவை அத்தனையும் ஈரோவின் மூலம் வாங்கிக் கொள்ளலாம், பெட்ரோலைத் தவிர்த்து.

இவ்வாறு ஈரோவின் புழக்கம் அதிகமாவதும் ஐரோப்பிய நாடுகள் ஈரோவில் வர்த்தக பரிமாற்றங்கள் செய்வதும் அமேரிக்காவின் டாலர் புழக்கத்தை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது.

இந்த உலக வர்த்தக பரிமாற்றங்களில் அதிகமான வர்த்தகம் பெட்ரோல் வர்த்தகம்தான் என்பதை புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. உலகிலேயே அமேரிக்காதான் தற்போது எண்ணெய் இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது. ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் இறக்குமதி செய்யக்கூடிய அமேரிக்க தனது இந்த வர்த்தகத்திற்க்கு டாலர் அல்லாமல் ஈரோவில்தான் கட்டணம் செலுத்த வேண்டுமென்றால், கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அதிலும் தற்போது இருக்கக் கூடிய வருடத்திற்க்கு 500 பில்லியன் டாலர் பற்றாக்குறை பட்ஜெட் வைத்துக் கொண்டு, நினைத்துப் பார்க்கவே இயலாத அளவிற்கு ஒரு பொருளாதார படுகுழியின் விளிம்பில் நின்றுக் கொண்டிருக்கிறது அமேரிக்கா!

அதுமட்டுமா? அமேரிக்காவின் அதிகமான எண்ணெய் இறக்குமதி சவுதி அரேபியாவிலிருந்துதான் செய்யப் படுகிறது. இந்த இரு நாட்டிற்க்கும் உள்ள ஒரு விசித்திரமான ஒப்பந்தத்தின்படி சவுதி ரியாலின் மதிப்பு அமேரிக்கா டாலருக்கு எதிராக எந்தவித மாற்றங்களும் செய்யாமல், அதாவது இரு நாட்டு கரன்சிகளும் எப்படிப்பட்ட பணவீக்கம் நிகழ்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு குறையாமல் கடந்த பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது. உலகில் எல்லா பாகங்களிலும் அமேரிக்கா டாலர்கள் மதிப்பிழந்து வரும்போது சவுதியுடன் மட்டும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குறையாமல் வர்த்தக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் பில்லியன் கணக்கில் சவுதி அரேபியா வருமானத்தை இழந்து வருகிறது. இப்படி ஏற்படும் இழப்புகளின் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி அமேரிக்கா பிரிண்டிங் பிரஸ் மூலமாக தீர்த்துக் கொள்கிறதோ அதே போல் சவுதி அரேபியா பெட்ரோல் பம்புகள் மூலம் சரி செய்து கொள்கிறது. பெருகிவரும் அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளில் இப்படி அச்சடிப்பதும், நிலத்திலிருந்து பம்ப் செய்வதுமாக இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செயல்படுவது?

ஈரோவின் இந்த உறுதியான மற்றும் குறிவைத்த முன்னேற்ற நடை பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை எப்படி டாலரிலிருந்து ஈரோவிற்க்கு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.

ஆகஸ்ட் 2002ல் ஈரான் தனது அந்நிய செலாவனி கையிருப்பில் பாதியை ஈரோவாக மாற்றிவிட்டது. எண்ணெய் வளத்தில் உலகின் ஐந்தாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈரான் தனது பெட்ரோல் வர்த்தகங்களை ஈரோவில் மாற்றும் நாள் வெகு தொலைவில் இல்லை.

அதே வருடம் உலகில் பெட்ரோல் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக ஜெர்மனியுடனான வர்த்தகம் ஈரோவில்தான் செய்யப்படும் என்று பேச்சுவார்த்தையில் இறங்கி ஒப்பந்தமும் ஆகிவிட்டது.

எண்ணெய் உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கக் கூடிய வெனிசூலா பதிமூன்று வளரும் நாடுகளுடன் பார்ட்டர் (Barter deal) ஒப்பந்தம் செய்து கொண்டு தனது எண்ணெய் வர்த்தகத்திற்க்கு ஈடாக அந்தந்த நாடுகளுடைய பொருட்களை இறக்குமதி செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டது.

இதற்கெல்லாம் முன்னோடியாக தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றிய முதல் நாடு ஈராக். எண்ணெய் வளத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கக் கூடிய ஈராக் நவம்பர் 2000 ல் தனது வர்த்தகத்தை அதாவது oil for food என்று ஐ.நா. வினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்தை முற்றிலுமாக ஈரோவிற்கு மாற்றியது. அதுமட்டுமல்லாமல், ஐ.நா. மூலமாக தான் வைத்திருந்த 10 பில்லியன் டாலரையும் ஈரோவாக மாற்றிக் கொண்டது. இதனால மூன்றில் இரண்டு பங்கு பெட்ரோலை ஈராக்கிடமிருந்து வாங்கிக் கொண்டிருந்த அமேரிக்க கம்பேனிகள் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்க்கு உள்ளானது. இச்சூழலில் ஜோர்டான் நாடும் ஈராக்கும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி ஜோர்டான் ஈராக்கிற்க்கு ஈரோவின் மூலம் பெட்ரோல் வர்த்தகம் செய்ய ஆரம்பித்தது.

இப்படி அங்கும் இங்குமாக டாலருக்கு போட்டியாக இருந்துக் கொண்டிருந்த ஈரோ கடைசியில் டாலரின் ராஜ்யமான பெட்ரோலில் கைவைக்க ஆரம்பித்தது அமேரிக்காவிற்கு நேர்ந்த மிகப் பெரும் பிரச்சனை.

இந்நிலையில்தான் வெந்த புண்ணில் வேலைச் செறுகியது போல் ஒபெக் நாடுகளும் தனது பெட்ரோல் வர்த்தகத்தை ஈரோவிற்கு மாற்றலாமா என்ற ஆய்வில் இறங்கியது. 'நீண்டகால எண்ணெய் வர்த்தகத்தை கணக்கில் கொண்டு பார்த்தால் டாலரிலிருந்து ஈரோவிற்கு மாற்றுவதால் எந்த கெடுதலும் வருவதாக தெரியவில்லை' என்று ஒபெக் அமைப்பின் ஜாவித் யெர்ஜானி என்பவர் தெரிவித்த கருத்து ஒபெக் நாடுகளின் வர்த்தக சிந்தனையில் வந்த மாற்றத்தை தெளிவுபடுத்துகிறது. (Javed Yerjani, head of OPEC market analysis dept., in his speech in April 2002).

அவர் அப்படி சொன்னதற்கான காரணம் உலகில் மொத்த எண்ணெய் இறக்குமதியில் (25%) முதல் இடத்தில் இருக்கக் கூடிய அமேரிக்காவைவிட ஐரோப்பிய யூனியனில் இருக்கக் கூடிய அனைத்து நாடுகளின் மொத்த இறக்குமதி 27% இருப்பதுதான். இன்னும் சில நாடுகள் இந்த யூனியனில் சேரவிருப்பதை கணக்கில் சேர்த்தால் இது இன்னும் 30 லிருந்து 35% உயர இருக்கிறது. அமேரிக்காவைவிட 30% அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த ஐரோப்பிய யூனியன் அமேரிக்கவின் பொருளாதார வர்த்தகத்தைவிட அதிகாமகக் கொண்டதால் டாலரின் இடத்தை ஈரோ பிடிக்க இருப்பதில் எந்தவித ஆச்சர்யமும் இல்லை.

சீனாவின் இறக்குமதியும், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியும் இன்றுவரை டாலரில்தான் நடந்து வருகிறது. இதுவும் ஈரோவிற்கு மாறும் பட்சத்தில் ஒபெக் நாடுகளின் ஏற்றுமதியில் 70% அமேரிக்கவைத் தவிர்த்து மற்ற நாடுகளுக்குத்தான் இருக்கும். இந்த சூழ்நிலையில் ஒபெக் நாடுகளின் வர்த்தகம் ஈரோவிற்கு மாறினால் அமேரிக்காவின் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று சொல்வதைவிட அழிந்துவிடும் என்று சொல்வதே மிகப் பொருத்தம்.

இதற்கிடையில் நீண்ட காலமாக எதிர்பார்த்த காஸ்பியன் எண்ணெய் சுரங்கம் வெறும் 4% ரிசர்வ்தான் என்பது 2002ல் தெளிவாகிப்போக அமேரிக்க முதலீடு செய்த ஆப்கான் அபகரிப்பு பிரயோசனமற்றதாகிப் போனது. அதுமட்டுமா? இருக்கும் 4% எண்ணெயும் தரமற்றது என்பதும் சோதனையில் தெளிவாகிப் போனது. சவுதியை விட காஸ்பியன் மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் அதிகமான எண்ணெய் இருப்பதாக ஆய்வுகளில் (சாட்டிலைட்) தெரியவந்தபின் தான் அமேரிக்கா ஆப்கானிய அரசாங்கத்துடன் அதுவும் தலபான் அரசுடன் பேச்சு வார்த்தை கூட நடத்தியது. கடைசியில் அமேரிக்காவின் கணக்கு தவறாக இருக்க அமேரிக்கா வேறு வழியில்லாமல் மத்திய கிழக்கு நாடுகளில் தனது கவனத்தை மீண்டும் வேறொரு கோணத்தில் திசை திருப்பியது.

அமேரிக்காவின் பொருளாதாரத்தை பாதுகாக்க இராணுவ உலகில் தன்னிகரற்று, திமிருடன் இருக்கும் அமேரிக்க இராணுவத்தை களத்தில் இறக்குவதே ஒரே சிறந்த வழி என்று முடிவெடுத்தது அமேரிக்கா.

(தொடரும்)