Thursday, November 24, 2005

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும் - 2

வியாட்நாமிற்கு படைகளை அனுப்ப அமேரிக்கா சொன்ன காரணம், அமேரிக்க கடற்படைகள் மீது வியாட்நாம் டோர்பிடோ படகுகள் தாக்குதல் நடத்தின என்று. அது முழுக்க முழுக்க பொய் என்பது பிற்காலத்தில் தெரிய வந்தது.

வியாட்நாமை களோபரப் படுத்தி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து வியாட்நாமிற்கு சுதந்திரத்தைக் கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரால் நடத்திய படுகொலைகளுக்கு இன்றுவரை என்ன பரிகாரம் செய்ய்பப்பட்டுள்ளது?

ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு படையெடுத்தால் பாதிக்கப்பட்ட நாட்டின் சாதாரண மனிதன் கூட தன்னால் இயன்ற அளவு எதிரிகளை எதிர்த்து போரிடத்தான் செய்வான். தனது நாட்டின் மீது படையெடுத்த எதிரிகளை எதிர்க்க அந்நாட்டின் புழுக்கள்கூட போராடத்தான் செய்யும். அதுதான் அந்நாட்டின் தன்மானம். அது எந்த நாடாக இருந்தாலும் சரி. ஒட்டு மொத்தமாக தீவிரவாதம் என்ற பட்டத்தை எல்லோருக்கும் சுமத்தி சம்மட்டியால் அடித்து ஒழித்துவிடலாம் என்று நினைக்கும் பயித்தியக்காரணத்தைத்தான் இப்போது அமேரிக்க செய்துவருகிறது. அதை மற்ற நாடுகளும் கைகட்டி பார்த்து வருகின்றன. ஐ.நா.வில் 1978ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி, சுதந்திரத்திற்காக போராடும் எந்த நாடும், அதன் மக்களும் தனது சுதந்திரத்திற்காக எல்லா வழிகளிலும் போராடலாம், அது ஆயுதப் போராடமாக இருந்தாலும் சரி. போராடும் உரிமை அந்நாட்டு மக்களுக்கு இருக்கிறது. அவர்களை அரசு தீவிரவாதத்தின் மூலம் மட்டும் பணிய வைக்கவேண்டும் என்று நினைப்பது போராளிகளை இன்னும் அதிகமாக்குமே தவிர்த்து போராட்டத்திற்கு முடிவு கிடைக்காது.

ஈராக்கியப் போராளிகளை தீவிரவாதிகள் என்ற பெயரால் ஈராக்கில் ஒயிட் பாஸ்பரஸ் மற்றும் நாப்பளம் எனப்படும் கெமிக்கல் ஆயுதங்களை கொண்டு கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றன அமேரிக்கப் படைகள். இந்த உலகமும் இதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர்தான் மனிதாபிமானம், சுதந்திரம், மனித உரிமைகள்!

நல்ல வேளையாக இந்தியாவிற்கு 1947 லேயே சுதந்திரம் கிடைத்துவிட்டது. இல்லையென்றால் இந்தியாவின் மீதும் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடத்தி, நம் சுதந்திர போராளிகள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்று தூற்றியிருப்பார்கள்.

சென்ற வாரம் அமேரிக்கப் படைத்தலைவர், ஈராக்கில் ஏறக்குறைய 3000 போராளிகள் இருப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார். (உண்மை நிலவரப்படி, கிட்டத்தட்ட 30,000 - 50,000 இருக்கும் என கணிக்கப்படுகிறது). இவர்கள் ஈராக்கிற்கு எதற்காக வந்தார்கள்? போராளிகளை உருவாக்கவா? அல்லது சதாம் மறைத்து வைத்திருக்கும் WMD கண்டுபிடிப்பதற்கா?

மதிப்பிற்குரிய டொனால்டு ரம்ஸ்பீல்டு என்ன சொன்னார்? ஈராக்கில் அமேரிக்கப் படைகள் நுழையும் போது ஈராக்கிய மக்கள் கைகளில் மலர்க் கொத்துகளுடன் வரவேற்பார்கள் என்று கதை அளந்தார். நடந்தது என்ன என்று எல்லோருக்கும் தெரியும். பிறகு சாதாமின் மகன்கள் இருவரும்தான் அமேரிக்கப் படைகளுக்கு எதிராக தீவிரவாத செயல்கள் செய்கின்றனர், அவர்களை ஒழித்தால் எல்லாம் முடிந்துவிடும் என்றார்கள். அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அத்தோடு விடவில்லை. சிதைந்த அவர்களின் முகங்களை Wax மூலம் திரும்பவும் உருவாக்கி ஈராக்கியர்களுக்கு இறந்தது அவர்கள்தான் என்று உறுதிப் படுத்தினார்கள். அதன் மூலமாவது சதாம் திரும்பி பதவிக்கு வந்தாலும் வந்துவிடுவார் என்று பயந்துக் கொண்டிருக்கும் பொது மக்கள் சமாதானமடைந்து அமேரிக்கப் படைகளுக்கு பூக்கொத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார்கள்!

ஆனால் சதாமின் மகன்கள் கொல்லப்பட்ட விதமும் இறந்த அவர்களின் உடல்களை அவமானப்படுத்திய விதமும் ஈராக்கில் சும்ம இருந்த ஒரு பகுதியினரை போராளிகளாக மாற தூண்டியது.

அதற்கு பின், சதாமை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடித்தால் பதவியிழந்த பாத் பார்ட்டியினரின் தீவிரவாதச் செயல்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துவிடலாம் என்று பாத் பார்ட்டியினரை ஈராக்கின் புதிய அரசில் சேர்த்துக் கொண்டதோடு அல்லாமல் சதாமையும் எலிக் குகைகளிலிருந்து தூசுத் தட்டி எடுத்து வந்தனர். போராட்டம் முற்று பெற்றதா? பூக்கொத்து கொடுக்கப் பட்டதா? அமேரிக்க அதிபரும் திடீரென ஒரு இரவில் பாக்தாத் விமான நிலையத்திற்கு விஜயம் செய்து பூக்கொத்து கிடைக்கிறதா என்று பார்த்தார்!

ஒன்றும் நடக்கவில்லை என்று தெரிந்தவுடன் 'ஜர்க்காவி' என்று இல்லாத ஒரு புதியப் படைப்பை உருவாக்கி நடக்கின்ற அட்டூழியங்களை எல்லாம் அவன் தலையில் சுமத்தி அவனைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் இருப்பதாக உலகிற்கு அறிமுகப்படுத்தி ஈராக்கில் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இப்படி நாளொன்றிற்கு ஒரு புதுக் காரணத்தைச் சொல்லி சாதாரண மனிதர்களை கொன்று குவித்து ஈராக்கில் எதிரிகளைத்தான் உருவாக்கி வருகிறார்களே தவிர்த்து சரியான தீர்வை நோக்கி ஈராக்கின் தற்போதைய அரசாங்கமோ அல்லது அமேரிக்க நிர்வாகமோ ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.

தற்போது ஈராக்கின் உள்துறைக்கு சொந்தமான ஒரு பாதாளச் சிறைச்சாலை கண்டுபிடிக்கப்பட்டு அதிலிருந்து 170க்கு மேற்பட்ட ஈராக்கின் அப்பாவி மக்களை வெளிக் கொணர்ந்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் எலும்பும் தோலுமாக எப்போது மரணம் வரும் என்று காத்திருக்கும் நடைப் பிணங்களாக காட்சி அளிக்க.. ஈராக்கின் அரசாங்கம் எண்ணெய் கிணறுகளுக்குள் தலையைக் கவிழ்த்துக் கொண்டு எங்களுக்குத் தெரியாது.. நாங்கள் விசாரணைக் கமிஷன் நியமிக்கப் போகிறோம் என்று சொல்லி வருகின்றனர். இந்த 170 பேர்களும் ஈராக்கின் சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத் தக்கது.

ஈராக்கின் அபு கரீப் சிறைச் சம்பவமும் அங்கிருந்து வெளியான படங்களும் உலகமே வெட்கிக் குனிந்த அமேரிக்கா ஜனநாயகத்தின் சிறப்புகள்! கனாடவில் அடைக்கலம் தேடி ஓடிய முன்னால் அமேரிக்க வீரர் (Ex marine staff Sgt. Jimmy Massey) கனடாவிற்கு அளித்த சத்தியப் பிரமானத்தில் அவரும் அவருடன் இருந்த மற்ற வீரர்களும் சேர்ந்து முப்பது ஈரக்கிய அப்பாவிகளை, எந்தவித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணிகளை, பெண்களை, குழந்தைகளை, இளைஞர்களை சுட்டுக் கொன்றதாக கூறியிருக்கிறார். We fired at a cycle rate of 500 bullets per vehicle. (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அமேரிக்கப் படை 82nd Airborne சேர்ந்த ஜெர்மி ஹிண்ஜ்மென் தனது வாக்குமூலத்தில் 'we were told to consider all Arabs as potential terrorists... to foster an attitude of hatred that gets your blood boiling' என்று கூறியிருக்கிறார். (Robert Fisk, The Independent, AN 27/12/2004).

அக்டோபர் 16 அன்று ஈராக்கின் போராளிகள் ஐந்து அமேரிக்க வீரர்களை வெடிகுண்டு தாக்கிக் கொன்றார்கள். அதற்கு பழி வாங்கும் முகமாக, அமேரிக்க படைகள் விமானத்தாக்குதல் நடத்தியது. போராளிகள் என்ன கூட்டம் கூட்டமாக நகரத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்களா, நினைத்த மாத்திரத்தில் அவர்கள் மீது வானிலிருந்து குண்டுமழை பொழிந்து கொல்வதற்கு. விமானத்தாக்குதல்களில் அதிகம் பாதிக்க்பபடுவது அப்பாவி மக்கள்தான் என்று புரிந்துக் கொள்வதற்கு சாதாரண அறிவு போதும், ஆனால் அமேரிக்காவின் முற்றுகையாளர்களுக்கு அத்தனை பயம் போராளிகளை நேரில் சென்று தேடுவதற்கு. அமேரிக்கா நடத்திய விமானத்தாக்குதலில் இறந்தவர்கள் மொத்தம் 70 பேர், அவர்கள் அனைவரும் போராளிகள் என்று அமேரிக்க அரசாங்கம் அறிவித்தது. இது மற்றுமோர் பொய். இதுவரை அமேரிக்க விமானப்படைத் தாக்குதலில் இறந்தவர்களில் 70 சதவிகிதம் அப்பாவி மக்களே!

இறந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் (அமேரிக்காவை பொறுத்தவரை அவர்கல் போராளிகள்) நான்கு வயதிலிருந்து 8 வயது வரை உள்ள பிள்ளைகளில் மூன்று பேர். ஆறு வயது முஹம்மது சாலிஹ் அலி முகம் மட்டும் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு மற்ற உடல் பகுதிகளெல்லாம் பிளாஸ்டிக் பைகளில் போட்டு அடக்கம் செய்யப்பட்ட குழந்தை. நான்கு வயது சாத் அஹமது ஃபவாத் மற்றும் அவனது மூத்த சகோதரி எட்டு வயதான ஹைஃபா. இவர்கள்தான் போரளிகளா? (Haifa Zangana, The Guardian, AN Nov 20, 2005. (Haifa Zangana is an Iraqi born novelist and former prisoner of Saddam Hussain) இவர்களைத்தான் பொதுமக்கள் கிடையாது என்று அறிக்கை விடுகிறது அமேரிக்கப் படைகள், ஜனநாயகத்தின் காவலர்கள்!

என்ன அருமையான அமேரிக்க சுதந்திர வாழ்க்கை! இதைப் பார்த்துதான் முஸ்லீம்களுக்கு பொறாமையாம்! அதனால்தான் அவர்கள் 9/11 தாக்குதல் நடத்தினார்களாம்! இந்த அமேரிக்காவையும் அது செய்வதையும் துதி பாடும் அடிமைக் கூட்டங்கள் அங்கங்கு முஸ்லீம்களுக்கு அறிவுரைகள் வேறு சொல்லி வருகிறது. எந்த முகத்தை வைத்துக் கொண்டு இந்த சுதந்திரக் காவலர்கள் உலகிற்கு சுதந்திரத்தைக் கற்றுத்தரவுள்ளார்கள்.

ஏற்கனவே அனுபவித்த கொடுமையான வாழ்க்கையிலிருந்து எப்போது தப்பிப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்த ஈராக்கியர்களுக்கு அமேரிக்கா கற்றுக் கொடுத்த தீவிரவாதக் கலாச்சாரம் அமேரிக்க சாதித்த மிகப்பெரும் வெற்றியாகும். சதாம் என்ன காரணம் சொல்லி தனது மக்களை கொடுமைப் படுத்தினானோ அதே காரணங்களைச் சொல்லித்தான் அமேரிக்கா அப்பாவி ஈராக்கியர்களை ஒழித்துக் கட்டுகிறது. சதாம் செய்ததை அமேரிக்கா தட்டிக் கேட்ட போது பெரும்பாலோருக்கு அமேரிக்காவின் சுதந்திரக் கருத்துக்கள் மீது அபரிதமான காதல். இப்போது எங்கே போனார்கள் அந்த அடிமைக் கூட்டங்கள். ஈராக்கியர்கள் சதாமிடம் அனுபவித்ததைவிட அதிகமான துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். முடிவு என்ன என்று தெரியாமல் ஈராக் சம்பந்தப்பட்ட எல்லோரும் குழப்பிப் போய் உள்ளனர்.

அமேரிக்கா அரசாங்கம் ஒரு அதிகாலை திடீரென தனது படைகளை விலக்கிக் கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மூச்சுவிடக் கூட முடியாத சூழல் என்று வரும்போது தலை தப்பித்தால் போதும், ஈராக்கிற்கு என்ன நிலை ஏற்பட்டால் எனக்கென்ன என்று ஒரு நாள் ஓடத்தான் போகிறது. ஐ.நாவும் தனது நிலை என்ன என்று தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. அப்படியே ஐ.நா ஏதாவது செய்வதென்றாலும் அதற்கு பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் செய்வதற்கு ஆசிய நாடுகளைத்தான் நம்பியாக வேண்டும். முஸ்லீம் நாடுகள் கூட ஈராக்கில் கால் வைக்க தயங்கின்றன.

இதுதான் உலகை வழிகாட்டி அழைத்துச் செல்லும் சூப்பர் பவர் அமேரிக்காவின் கேடு கெட்ட நிலை. இதற்கு பின்னால் ஒரு கூட்டம் டாலருக்கு அடிமைப்பட்டு, அதனுடைய ராணுவத்தின் வீரதீர பராக்கிரமங்களுக்கு பயந்து தலையாட்டி பொம்மைகளாக பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டதில் இந்தியாவையும் எப்படிப்பட்டாவது சேர்த்துவிட வேண்டும் அமேரிக்காவும் நினைத்துக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)

Thursday, November 17, 2005

அமேரிக்காவின் பொய்களும் அதன் பின் புலங்களும்

உலக நாடுகளில் வெறும் பொய்களைச் சொல்லி பிழைப்பு நடத்தக் கூடிய அரசாங்கங்களில் முதலிடம் நிச்சயமாக அமேரிக்க அரசிற்குத்தான் தரவேண்டும். காலம் காலமாக வெறும் வார்த்தை அலங்காரங்களை மட்டும் வைத்து தனது சொந்த நாட்டு மக்களை ஏமாற்றி, ஊடகங்களின் வசதியுடன் தனது மக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரால் அவர்களது எதிர்பார்ப்புகள் மற்றும் சிந்தனைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆளும் வர்க்கம் நிறைந்த நாடுதான் இந்த அமேரிக்கா என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை. அது உள்நாட்டு விவாகாரங்களோடு நின்று போகும்போது அதன் தாக்கம் மற்ற உலக நாடுகளை பாதிக்கப் போவதில்லை. ஆனால் அதே பாணியை தற்போது உலக நாடுகளின் மீது, ஐ.நா. உலக வங்கி, IMF, UNICEFF, UHO மற்றும் ராணுவ தளவாடங்களின் வசதியோடு செயல்படுத்த முனையும்போது பல்லாயிரக்கணக்கான உயிர் மற்றும் பொருள் சேதங்களை ஏற்படுத்துகிறது.

கருத்து சுதந்திரம் என்ற பெயரால் என்ன வேண்டுமானலும் சொல்லலாம், யாரை வேண்டுமானலும் விமர்சிக்கலாம், மிரட்டலாம் அல்லது அழிக்கலாம். ஆனால் அந்தக் கருத்து சுதந்திரம் அமேரிக்கவை எதிர்ப்பவர்களுக்கு இருக்கக் கூடாது என்பதுதான் அமேரிக்காவின் கருத்து சுதந்திரத்திற்கான சரியான விளக்கம் என்பதை அமேரிக்காவிற்கு வால் பிடிக்கும் கூட்டத்திற்கு தெரியுமோ என்னவோ?

அப்படி ஓர் உலக அழிவை அதாவது பொருளாதார சீரழிவை, பொதுமக்களின் உயிர்களுக்கு பாதுகாப்புமின்மை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் அமேரிக்கா நடத்திவரும் பொய் நாடகங்கள் தற்போது மிக முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது. ஈராக் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பொய்களும் அதற்கான காரணங்களும் மிகத் தீவரமாக அலச வேண்டிய அவசர சூழலில் உலகம் இருந்து வருகிறது. அமேரிக்கா சொல்வதற்கெல்லாம் தலையாட்டும் நாடுகளாக உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் இருக்கும் பட்சத்தில் அமேரிக்கா செய்யக் கூடிய தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வாய்ப்புகள் குறைந்து போகின்றன.

9/11 ஏன் உருவானது என்ற கேள்விக்கு அமேரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பதிலளிக்கும்போது 'நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை அவர்களுக்கு பிடிக்கவில்லை. நமது உயர்வு மிக்க சமுதாய பண்புகளும், வாழ்க்கை முறைகளும் அவர்களுக்கு எரிச்சலையும் பொறாமையையும் அளிக்கிறது, அதனால்தான் நம்மீது இப்படி ஓர் மோசமான தீவிரவாத செயலை கட்டவிழ்த்துள்ளார்கள்' என்று சொன்னார்.

அவருடைய பதிலில் அவர் இரண்டு விஷயங்களை கோட்டிட்டு காட்டியுள்ளார். ஒன்று அமேரிக்கர்கள் அனுபவித்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுதந்திர வாழ்க்கை இன்னொன்று வாழ்க்கை முறை. இந்த இரண்டும் வேறெந்த வாழ்க்கை முறைகளைவிட சிறப்பானது என்று மார்தட்டும் அதிபர் புஷ், இந்த இரண்டையும் ஈராக்கிற்கு கற்றுத்தர வேண்டுமென்று முடிவெடுத்தார். அதோடு நில்லாமல் இந்த இரண்டிற்கும் 'ஜனநாயகம்' என்று ஓர் அடைமொழிக் கொடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்றுத் தீர்ப்பது என்று ஆசைப்பட்டார். (விற்பது என்ற வார்த்தை நான் பயன்படுத்தியக் காரணம் இது பண்டமாற்று முறை என்பதால். ஜனநாயக பயமுறுத்தலால் மத்திய கிழக்கு நாடுகள் அமேரிக்காவுடன் உள்ளமைப்பு ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அமேரிக்கவின், குறிப்பாக புஷ் மற்றும் ஷெனை பரிவாரங்களின் ஆயில் கம்பேனிகளுக்கு நீண்ட கால வியாபார உரிமைகள் வழங்க இருக்கின்றன).

அவரது ஆசையில் அவரைப் பொறுத்தவரை தவறில்லை. ஆனால் அதற்கு அவர் சொன்ன காரணங்கள் ஈராக்கைப் பொறுத்தவரை தற்போது அவராலேயே மறந்து போனதோ என்று சந்தேகமளிக்கும் அளவிற்கு ஈராக்கின் நிகழ்வுகள் மிக மோசமான பாதையை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றன.

சதாம் ஹுசைனை மூட்டைக் கட்ட அவர்கள் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள்:

அ) சதாம் ஹுசைனிடம் WMD இருக்கிறது. அதனால் ஈராக்கியர்களை ஈவு இரக்கிமின்றி கொன்று தள்ளுவார். அவர் அவ்வாறு 1988ல் குர்துகளுக்கு எதிராக ஹலப்ஜாவில் பயன்படுத்தினார். தற்போது ஐரோப்பிய அமேரிக்க நாடுகள் மீது அவர் பயன்படுத்தலாம். அதற்கு அவரிடம் ஆயுதங்கள் உள்ளன. லண்டனை 45 நிமிடத்திர்க்குள் சதாம் ஹுசைனால் தாக்க முடியும்.

ஆ) ஈராக்கியர்களை சதாமிடமிருந்து விடுவிக்க வேண்டும்.

இதில் முதல் காரணமான WMD கடந்த இரண்டு வருடமாகத் தேடியும் கிடைக்காமல் போயிற்று என்பது உலகமே அறிந்த விஷயம். அது பொய்யான தகவல் என்பதும், இந்த பொய்த்தகவல் எப்படி அமேரிக்க அதிபரிடம் சென்றது என்று அமேரிக்கவின் புலனாய்வுத் துறையை சந்திக்கிழுத்து அதன் தலைவரை வெளியேற்றி முடித்த கையோடு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் முழுவதுமாக அடுத்த விஷயத்திற்கு சென்று விட்டார்கள். காரணம் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படுவது ஈராக்கின் அப்பாவி மக்கள்தானே தவிர்த்து அமேரிக்க அல்லவே.

அதுமட்டுமா? ஈராக்கின் பெட்ரோல் முழுக்க முழுக்க அமேரிக்காவின் கைகளுக்கு வந்துவிட்டது, இனிமேல் இதில் இழந்துபோன அமேரிக்க உயிர்களாகட்டும் அல்லது ஈராக்கிய உயிர்களாகட்டும், எல்லாம் யார் கேட்கப் போகின்றார்கள்?

ஈராக்கில் WMD இல்லாமல் போனால் என்ன! என்னிடம் இருக்கிறது என்று அமேரிக்கா பயன்படுத்திய கெமிக்கல் ஆயுதங்களைப் பற்றி உலக நாடுகள் ஏன் வாய் மூடிக்கிடக்கின்றன. இளைத்தவன் செய்தால் அடி உதை. வசதி மிக்கவன் செய்தால் கண்டு கொள்வதில்லை!

அமேரிக்கப் படைகள் வெள்ளை பாஸ்பரஸ் எனும் கெமிக்கலை பல்லூஜாவில் பயன்படுத்தி அப்பாவி ஈராக்கிகளை கொன்று குவித்தது என்று இத்தாலியின் தொலைக் காட்சியில் சென்ற வாரம் ஒலிபரப்பு செய்யப்பட்டது. முதலில் அப்படியில்லை என்று மறுத்து பொய் சொன்ன அமேரிக்கா, பிறகு மெதுவாக ஆமாம், நாங்கள் அதை ஈராக்கின் போராளிகளுக்கு எதிராகத்தான் பயன்படுத்தினோம் என்று தனது நிலையை மாற்றி ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.
பெண்களும், பிள்ளைகளும் வெள்ளை பாஸ்பரஸ் தாக்கப்பட்டு உடல்கள் கரைந்து தெரு முழுதும் கிடந்ததை நாங்கள் பார்த்தோம் என்று பல்லூஜாவில் தாக்குதலில் ஈடுபட்ட அமேரிக்க வீரர் ஒருவரின் வாக்குமூலம் பதியப்பட்டுள்ளது (Check Information Clearing House website)
ஆனால் இந்த WMD அமேரிக்கப் படைகள் ஈராக்கிற்கு சென்றவுடனேயே பயன்படுத்தப்பட்டது என்று அமேரிக்க படை வெளியிடும் பத்திரிக்கையிலேயே வெளிவந்துள்ளது. (March Edition of Field Artillery, officers from 2nd Infantry's fire support element boast about their role in the attach on Fallujah in November last year. "White Phosphorous. WP proved to be an effective and versatile munition. We used it for screening missions at two breeches and, later in the fight, as a potent psychological weapon against the insurgents in trench lines and spider holes when we could not get effects on them with HE [high explosive]. We fired 'shake and bake' missions at the insurgents, using WP to flush them out and HE to take them out.") (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

The second, in California's North County Times, was by a reporter embedded with the marines in the April 2004 siege of Falluja. "'Gun up!' Millikin yelled ... grabbing a white phosphorus round from a nearby ammo can and holding it over the tube. 'Fire!' Bogert yelled, as Millikin dropped it. The boom kicked dust around the pit as they ran through the drill again and again, sending a mixture of burning white phosphorus and high explosives they call 'shake'n'bake' into... buildings where insurgents have been spotted all week." (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

'மூச்சுவிடக்கூடிய எந்த உயிரினமாக இருந்தாலும் அவை எல்லாவையும் ஒழித்துக் கட்டுங்கள்' இதுதான் பல்லூஜாவில் அமேரிக்க வீரர்களுக்கு இடப்பட்ட கட்டளை.

There were widespread reports that in March 2003 US marines had dropped incendiary bombs around the bridges over the Tigris and the Saddam Canal on the way to Baghdad. The commander of Marine Air Group 11 admitted that "We napalmed both those approaches". Embedded journalists reported that napalm was dropped at Safwan Hill on the border with Kuwait. In August 2003 the Pentagon confirmed that the marines had dropped "mark 77 firebombs". Though the substance these contained was not napalm, its function, the Pentagon's information sheet said, was "remarkably similar". While napalm is made from petrol and polystyrene, the gel in the mark 77 is made from kerosene and polystyrene. I doubt it makes much difference to the people it lands on. (Goerge Monbiot - The Guardian - AN. Nov, 16, 2005)

சதாம் ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது இதைத்தானே! சதாம் செய்ததற்கும் தற்போது அமேரிக்க செய்வதற்கும் என்ன வித்தியாசம்! அமேரிக்க படைகளை எதிர்க்கும் ஈராக்கிய போராளிகளை ஒழித்துக் கட்ட அமேரிக்கப் படைகள் பயன்படுத்தும் WMDயைத்தான் அன்றைக்கு சதாம் தனது எதிரிகளை ஒழித்துக் கட்டப் பயன்படுத்தினார். சதாம் ஹுசைனைப் பிடித்து சிறையில் அடைத்தாகிவிட்டது. ஈராக்கில் நடைபெறும் மேலே சொன்ன அக்கிரமங்களுக்கு அமேரிக்க அதிபர் குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவாரா?

ஈராக்கில் என்ன நடந்தால் எனக்கென்ன என்று நாம் இருக்க முடியாது. இதே நிலை நாளை வேறு யாருக்கு வேண்டுமானலும் நிகழலாம். அமேரிக்காவை பொறுத்தவரை அவர்களுக்கு யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை அல்லது நிரந்தர எதிரிகளும் இல்லை. இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாக பாவிக்கப்படுவார்கள். நாளை இந்த நிலை நமக்கும் நடக்கலாம்!

ஈராக்கில் அமேரிக்க படைகளின் வரம்பு மீறல்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களின் நிலைகளையும் பின்வரும் பதிவுகளில் எழுதுகிறேன்.

(தொடரும்)

Monday, November 07, 2005

வோல்கர் ரிப்போர்ட் - இந்திய அரசியல்

இந்திய அரசியல்வாதிகள் ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்ட வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், தேவைப்பட்டால் தனது சொந்த நாட்டைக் கூட அடமானம் வைக்கத் தயங்க மட்டார்கள்.

சமீபத்த்தில் உலகில் மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் வோல்கர் ரிப்போர்ட்டில் நமது வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயர் அடிபட்டவுடன் அவரை பதவியிறக்கம் செய்ய வேண்டுமென்று எதிர்க் கட்சிகள் குய்யோ முய்யோ என்று சத்தம் போட்டு அவரை பதவியிறக்கவும் செய்துவிட்டனர். முக்கியமாக பா.ஜா.கா இதை இந்திய நாட்டின் ஒரு மானப் பிரச்சனையாகக் கருதி அங்கங்கே அறிக்கைகள் வேறு. அப்படி என்னய்யா இந்த வோல்கர் ரிப்போர்ட்?

பால் வோல்கர்

2004 களில் ஐ.நா சபையின் ஆயில் பார் புட் புரோகிராமில் ஊழல் நடந்ததை கண்டுபிடிக்க அமேரிக்காவின் பெடரல் ரிசர்வின் ஓய்வு பெற்ற முன்னால் அதிகாரி பால் வோல்கரை கொண்டு ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. வழக்கம் போல் ஐ.நா.வின் பொருளாதார மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விவாகாரங்களை கண்டுபிடிக்கவோ அல்லது விசாரிக்கவோ வேண்டுமென்றால் மேலை நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் ஓரவஞ்சகப்படி அவர் நியமிக்கப்பட்டார்.

இவரது விசாரனை சரியில்லை என்று இவருக்குக் கீழ் வேலை செய்த அதே அமேரிக்காவின் ராபர் பேட்ரோன், மிராண்ட டன்கன் என்ற இருவரும் ராஜினாமா செய்து விலகிக் கொண்டனர்.

அமேரிக்காவின் பொய்கள்

ஏற்கனவே அமேரிக்கா ஈராக்கின் யுத்தத்திற்கு சொன்ன காரணங்களில் கிட்டத்தட்ட எல்லாமே பொய்களும், புரட்டல்களும் என்று நிரூபிக்கப் பட்டதால் இந்த வோல்கரின் ரிப்போர்ட்டின் மேல் நமக்கு பலத்த சந்தேகம் வர வாய்ப்பிருக்கிறது. ஈராக்கிடம் WMD இருக்கிறது என்று கதை சொன்னார்கள்.. அது பொய்யாகிப் போனது. ஈராக்கிற்கும் அல் காயிதாவிற்கும் தொடர்பு இருக்கிறது என்றார்கள்.. அதுவும் பொய் என்று தெரிய வந்தது. இப்படி பொய்களை காரணமாகக் கொண்டு பல அப்பாவி உயிர்களை கொன்று குவித்த அமேரிக்காவின் இந்த புது வோல்கர் ரிப்போர்ட்டை நமது இந்திய அரசியல்வாதிகள் தனது சுயநலத்திற்காக பயன்படுத்துவதை நினைக்கும்போது இவர்களில் எவரும் நாட்டை பெரிதாக மதிக்கவில்லை.. மாறாக தனது அரசியல் வாழ்க்கையை மட்டுமே பெரிதாக மதிக்கிறார்கள்.

அமேரிக்கா சொல்வதேல்லாம் உண்மையா?

அமேரிக்கா சொல்வது எல்லாம் உண்மையாக இருக்காது என்று ப.ஜா.காவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் எப்போதும் தேசப்பற்றைப் பற்றி வாய் கிழிய பேசும் இந்த அரசியல் கூத்தாடிகள் மூன்றாவது நாட்டைச் சேர்ந்த ஒரு ரிப்போர்ட்டில் இந்திய அரசியல்வாதியின் பெயர் வந்தால் அதை நன்றாக விசாரித்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவரை பதவி விலகச் சொல்வதுதான் நியாயமே தவிர்த்து தாம் தூம் என்று குதித்து நம்மிடையே ஒற்றுமையில்லை... நாம் எல்லோரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை... எனது நாட்டின் ஒற்றுமையோ அல்லது ஒருமைப்பாடோ முக்கியமில்லை... என்று காட்டியிருக்கிறார்கள்.

சந்தேகத்திகத்திற்குட்பட்ட வோல்கர் ரிப்போர்ட்

வோல்கர் கமிட்டியின் புலனாய்வு சந்தேகத்திகத்திற்கிடமானது. புலனாய்வு எந்த விதிகளுக்கு உட்பட்டு செய்யப்பட்டது என்று தெளிவாக இல்லை. வோல்கர் கமிட்டி ஆய்வு செய்த ஆவனங்கள் ஈராக்கின் பெட்ரோல் அமைச்சரவையிலிருந்து, அமேரிக்க ராணுவத்தின் கைகளுக்குச் சென்று பிறகு தனியார் ஆடிட்டிங் நிறுவனத்தின் மூலமாக வோல்கர் கமிட்டிக்கு சென்றது. இப்படி கைமாறிய ஆவனங்களில் கையாடல்கள் நடந்திருக்க முடியாது என்று எவ்வாறு சொல்ல முடியும்? அதிலும் இந்த ஆவனங்களில் பெரும்பாலானவை அழிக்கப்பட்டதாக இருக்கிறது.

நட்வர் சிங் குற்றவாளியாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதைப் பொறுத்திருந்து இந்தியாவின் கோர்ட்டுகள் மூலமாக புலனாய்வு செய்து உண்மையை தெரிந்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் மண்ணை அள்ளி வீசிக் கொண்டால் நாட்டின் தன்மானம் காப்பாற்றப்படும். நாளை பிரன்சிலிருந்து வரும் ஒரு புலனாய்வு அறிக்கையில் இந்தியாவின் ஜனாதிபதி குற்றம் செய்தவர் என்று குறிப்பிட்டால் நாம் எல்லோரும் அவரை பதவி விலகச்சொல்லி சத்தம் போடுவோமா?

தேசமாவது ஒற்றுமையாவது... பதவி கிடைத்தால் போதும் என்று அலையும் அரசியல்வாதிகள் பின்னால் அலையும் நாம் என்றைக்கு மாறப்போகிறோமோ தெரியவில்லை. துப்பு கெட்ட பல அரசியல்வாதிகளின் கைகளில் நாட்டைக் கொடுத்துவிட்டு நம் தலைவிதியை நொந்து கொண்டு துப்பு கெட்ட மனிதர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.