Sunday, October 16, 2005

கடவுள் சொன்னார், செய்தேன்!

ஜார்ஜ் புஷ் இப்போதெல்லாம் படு கோபத்தில் இருக்கிறார். கையில் ஆணி சுத்தியலுடன் தனது ரிபப்கிளிகன் செனட்டர்களையும் சேர்த்துக் கொண்டு நியூ ஆர்லின்ஸ் நகரைச் சுற்றிக் கொண்டிருக்கிறார். காட்ரீனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக கண்ணில் கிடைக்கும் கட்டைகளையும், மட்டைகளையும் வைத்து எங்கு பார்த்தாலும் 'மடார் மடார்' என்ற சுத்தியல் சத்தம்தான்.

'அதிபர் ஜார்ஜ் புஷ் சுத்தியலைப் பயன்படுத்துவதில் படு கில்லாடி. முன்னால் அதிபர் ஜிம்மி கார்ட்டருக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு வந்த முதல் கார்பெண்டர்' என்று வெள்ளை மாளிகையின் சீப் ஆப் ஸ்டாப் வில்லியம் எய்ட்ஸ் (Aids) NBR ரேடியோவிற்கு அளித்த பேட்டியில் பெருமையுடன் குறிப்பிட்டார். 'புஷ் அவர்கள் இனி கேபினட் மீட்டிங்கிற்கு சுத்தியலுடன் வரவேண்டும்' என்று துணை அதிபர் ஷெனாய் கேட்டுக் கொண்டார். புஷ்ஷின் முதல் ரவுண்ட் அமைச்சரவையில் வெளியுறவு செகரட்டரி பவல் அவ்வப்போது புஷ்ஷின் சொல்லை மதிக்காமல் கேபினட் மீட்டிங்கில் பிரச்சனைகள் உண்டக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

இது தொடர்பாக ஸ்டாட்போர்டு யூனிவர்சிட்டியின் பொலிட்டிகல் புரபசர் மைக்கேல் ஸ்டடி அவர்கள் 'ஜார்ஜ் புஷ்ஷின் கோபத்திற்கும், சுத்தியலுடன் அலைவதற்கும் காரணம் காட்ரீனா அல்ல, கடவுள்தான்' என்று தெரிவித்தது அமேரிக்க எவாஞ்சலிஸ்ட் செனட்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டடி மேலும் கூறும்போது 'ஜார்ஜ் புஷ் கடவுள் பக்தி அதிகம் உள்ளவர், கடவுளின் ஆசியும் அனுமதியும் பெற்றுதான் அவர் எந்த முடிவுகளும் எடுப்பது வழக்கம். கடவுள் சொல்லித்தான் ஆப்கான் மற்றும் ஈராக் மீது படையெடுத்தார்'.

இது சம்பந்தமாக மைக்கேல் ஸ்டடி அவர்கள் மேலும் சொல்லும்போது 'ஈராக் போரில் மரணமடைந்த அமேரிக்க வீரர்களின் ஆன்மா சாந்தி அடையும் என்றும், ஒரு நல்ல காரணத்திற்காக அவர்க்ள் சொர்க்கம் செல்கிறார்கள் என்றும் புஷ் அவர்கள் சொன்னதை' கம்பூனிட்டி ஹாலில் நடந்த 'Statistics of death and life' கருத்தரங்கில் மேற்கோள் காட்டி பேசினார்.

'பாலஸ்தீன் தேசத்தை உருவாக்கச் சொல்லி தனக்கு கடவுள் அதிகாரம் கொடுத்துள்ளார்' என்று பாலஸ்தீன் அதிபர் மெஹ்மூத் அப்பஸின் கையைப் பிடித்துக் கொண்டு புஷ் அவர்கள் நெகிழ்ந்ததும், பிறகு இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து ஆனந்த கண்ணீர் வடித்ததும் மெஹ்மூத் அப்பாஸ் தனது சுயசரிதையில் எழுதியுள்ளதை கவனிக்கத்தக்கது.

மைக்கேல் ஸ்டடியின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், காட்ரீனாவிற்கு கடவுளுக்கும் புஷ்ஷின் கோபத்திற்கும் உள்ள சம்பந்தம் தெரியாமல் போனதால் காங்கிரஸ் இன்வஸ்டிகேடிங் கமிட்டி நிர்ணயித்து அதற்கு வேலையில்லாமல் இருக்கும் நியூ கொலம்பியாவின் செனட்டர், டெமக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இவான் ஸ்லீப்பை தலைவராக நியமிக்க காங்கிரஸ் முடிவு செய்தது.

தனது சாகக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு ஆய்வு கமிட்டியில் மெம்பராக இருப்பதும், தனக்கு இதுவரை அப்படி ஓர் வாய்ப்பு ஏற்படாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டிய ஸ்லீப் தனது பணியை செவ்வனெ செய்து விரைவில் செனட்டில் தாக்கல் செய்யமுடியும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.

இயற்கை சீரழிவுகள் வருவதற்கு முன்னால் அதை முழுதாக அறிந்து அதன் மூலம் ஏற்படவிருக்கும் சேதங்களை முன்கூட்டியே கணக்கிடும் தொழில்நுட்பத்தை அமேரிக்க மெட்ரோலாஜி டிபார்ட்மெண்ட்களில் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டுமென்று புஷ் இன்றிரவு ஆணையிட்டார். இவ்வாறு முன்கூட்டி அறிவதன் மூலம் சீரமைப்புப் பணிகளையும், அதைத் தொடர்ந்து வரும் கட்டுமானப் பணிகளை 'ஹாலிபர்ட்டன்' கம்பேனிக்கு சேதம் எதுவும் ஏற்படுவதற்கு முன்னாலேயே குத்தகைக்கு கொடுக்க ஏதுவாக இருக்கும் 'பிமா (FEMA) தனது மகிழ்வைத் தெரிவித்தது.

No comments: